கொரோனாவால் பெற்றோரை இறந்த அனைவருக்கும் வேலை – வட்டியில்லா கடன், ரூ.500க்கு கேஸ்! ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு…

சென்னை: கொரோனாவால் பெற்றோர் இறந்த அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும், ரூ.500க்கு கேஸ், குடும்ப காப்பீடு ரூ.25லட்சமாக உயர்வு, விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், விவாயிகளுக்கு 200யூனிட் இலவச மின்சாரம் உள்பட ஏராளமான அறிவிப்புகளை  ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. அங்கு  இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்தநிலையில், இன்று மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த … Read more

சசிகலா, டி.டி.வி, ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள் – தர்மஅடி வாங்கும் தமிழ்நாடு காவல்துறை! ஜெயக்குமார் கடும் விமர்சனம்…

ஈரோடு: தலைமைச் செயலத்தில் தேர்தல் ஆணையரை சந்தித்துவிட்டு திரும்பிய ஜெயக்குமார், சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள் என்று விமர்சித்ததுடன், டிடிவி கூறியதுபோல,  இரட்டை இல்லை சின்னத்திற்கு மவுசு குறையவில்லை, என கூறியவர், தமிழ்நாடு அரசு காவல்துறை, பொது மக்களிடம் தர்ம அடி வாங்கும் காவல் துறையாக  உள்ளது என்றும் விமர்சித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நேரில் சந்தித்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற … Read more

பசு அணைப்பு தினத்தை திரும்ப பெற்றது விலங்குகள் நல வாரியம்…

டெல்லி: பிப்ரவரி 14ந்தேதி காதலர்தினத்தை பசு அணைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என அறிவித்த விலங்குகள் நல வாரியம் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, தனது அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது. உலக அளவில் காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாக நாம் கொண்டாடுவோம் என்ற இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அழைப்பு பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் காளை அணைப்பு தினம் பிப்ரவரி 16ந்தேதி கொண்டாடப்படும் என … Read more

தனியார் கட்டடங்களை இடிக்க ஒப்புதல் – பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி…

சென்னை:  தனியார் கட்டடங்களை இடிக்க மாநகராட்சியின்  ஒப்புதல் பெற வேண்டும்  என்றும்,  பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.50 அபராதம் விதிக்கப்படும் என்றும்  சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே தெருபலகைகளில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மயானங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என  எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் பல அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. மத்திய பாஜக அரசு  இந்தியாவை தூய்மைப்படுத்தும் திட்டமாக ஸ்வாச் பாரத் (தூய்மை இந்தியா) … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் திடீர் சந்திப்பு…

சென்னை:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே சந்தித்து பேசினார். இந்த திடீர் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2024 பாராளுமன்ற தேர்தலில், பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. மகாஷ்டிரா மாநிலத்தில் கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்து சிவசேனா, அதை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அமைத்து ஆட்சி செய்த நிலையில், பாஜகவினரின் தூண்டுதலின்பேரில் சிவசேனா கட்சியின் பெரும்பாலோர் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதால், உத்தவ்தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி … Read more

எழுதாத பேனாவுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை! பிரேமலதா விஜயகாந்த்…

திருச்சி: எழுதாத பேனாவுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை என கூறிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவின் பலத்தை ஈரோடு இடைத்தேர்தல் மூலம் தெரிந்து கொள்ளலாம்  என்றார். திருச்சியிவ்ல நடைபெற்ற தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழா அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ஈரோடு கிழக்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் பொதுமக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். எனவே, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் கண்டிப்பாக வெற்றி … Read more

கொள்ளையர்களை விரைவில் கண்டுபிடிப்போம்! சென்னை கூடுதல் ஆணையர் பேட்டி…

சென்னை: கொள்ளையர்களை விரைவில் கண்டுபிடிப்போம் என சென்னை பெரம்பூரில்  9 கிலோ நகைகள் கொள்ளை தொடர்பாக  பேட்டி அளித்த கூடுதல் காவல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பலூர் நகைக்கடை ஷட்டரை வெல்டிங் வைத்து வெட்டி, உள்ளே சென்று 9 கிலோ நகைகள் கொள்ளை  நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நடமாட்டம் நடைபெறும்  சாலையில், தைரியாக ஒரு கும்பல் வெல்டிங் மெஷின் கொண்டு வந்து ஷட்டரை வெட்டி கொள்ளையடித்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி … Read more

13ந்தேதி வரை தவறாமல் அவைக்கு வரவேண்டும்! பாஜக எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு!

டெல்லி: வரும்  13-ந் தேதிவரை மக்களவைக்கு தவறாமல் வரவேண்டும் என பா.ஜனதா எம்.பி.க்களுக்கு கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி, ஜனவரி 31ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்ட நிலையில், அதுதொடர்பான விவாதங்கள் நடைபெற்று, நேற்று (09ந்தேதி) பிரதமர் மோடி பட்ஜெட் உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பகுதி வரும் 13ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில்,   மக்களவை பா.ஜனதா எம்.பி.க்களுக்கு அக்கட்சி … Read more

உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம்!

டெல்லி:  உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் இரண்டு புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார். இதனால், மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக முழுமையடைந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34. இதில் காலியாக உள்ள நீதிபதிகளை நிரப்ப கொலிஜியம் பரிந்துரைத்து வந்தது. அதன்படி, கடந்த வாரம் 5 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, தற்போது மேலும்  இரண்டு நீதிபதிகளை  உச்ச நீதிமன்றத்திற்கு மத்திய அரசு நியமித்துள்ளது. அதன்படி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக … Read more

அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்! பாஜகவை சாடிய எடப்பாடி பழனிசாமி…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக, அதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? என பாஜகவை எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு என இரு தரப்பினரும் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில், கூட்டணி கட்சியான பாஜக இரு அணியினரும் ஒன்றிணைந்து செயலாற்ற அழைப்பு விடுத்தது. ஆனால், அதை இபிஎஸ் ஏற்க மறுத்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பின்படி, தனது … Read more