சென்ட்ரலுக்கு செல்லும் பேருந்துகளை சிந்தாதிரிப்பேட்டை.செல்ல பரிந்துரை

சென்னை சென்னை சென்ட்ரல்  ரயில் நிலையம் செல்லும் பேருந்துகளை சிந்தாதிரிப்பேட்டை சென்று வர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் இயக்கப்படும் பறக்கும் ரயில் சேவை இனி சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இயக்கப்பட உள்ளது. இதனால் சென்னை பார்க் நிலையத்தில் இந்த ரயிலைப் பிடிக்க சென்ட்ரல்  வரும் பயணிகளுக்குச் சிரமம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை, அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல் செல்லும் அனைத்து பேருந்துகளையும் சிந்தாதிரிப்பேட்டை சென்று வரும் வகையில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் … Read more

பசுமைப் பள்ளிகளாக மாறும் 50 அரசுப் பள்ளிகள் : அமைச்சர் அறிவிப்பு

புதுக்கோட்டை மேலும் 50 அரசுப் பள்ளிகளைப் பசுமைப் பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மெய்யநாதன் இன்று புதுக்கோட்டை அருகே உள்ள முல்லூரில் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் தனது பேட்டியில் “இந்த ஆண்டு தமிழகத்தில் கூடுதலாக 50 அரசுப் பள்ளிகளைப் பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்துவது வெகுவாக குறைந்துள்ளது. விரைவில் மாணவர்களுக்கு உலோகத்தால் ஆன தண்ணீர் பாட்டில்கள் … Read more

மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்ட மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்

சென்னை மேலும் ஒரு மாதத்துக்கு மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் நீட்டிக்கப்பட்டுள்ளது கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வீட்டு மின் இணைப்பு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் இந்த முகாம்கள் மூலம் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.  தற்போது மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான … Read more

பிரக்ஞானந்தா செஸ் தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம்

சென்னை பிரக்ஞானந்தா செஸ் தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளார். பாகுவில் நேற்று முடிந்த ‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய ‘இளம் புயல்’ தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா 2வது இடம் பெற்றார். இறுதிப்போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சனுடன் மோதிய பிரக்ஞானந்தா வெற்றிக்காகக் கடுமையாகப் போராடினார். கார்ல்செனின் கைகள் இறுதியில் ஓங்கியதால், பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பெற்றார். சர்வதேசம் செஸ் தரவரிசைப் பட்டியலில் பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார். தற்போது அவர் 29வது இடத்தில் … Read more

மாணவர்களிடம் நீட் தேர்வு குறித்துக் குழப்பத்தை ஏற்படுத்தும் திமுக : பிரேமலதா விஜயகாந்த்

சென்னை திமுக நீட் தேர்வு குறித்து மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று தனது 71-ஆம் பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களைச் சந்தித்தார்.  பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் எனவும், அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அவர் தொடர்ந்து “இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் தான் எதிர்ப்பு நிலவுகிறது. நீட் … Read more

உலகளவில் 69.41 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.41 கோடி பேருக்க கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 6.91 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 66.49 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் உயிரிழப்பு – நிதியுதவி அறிவிப்பு

சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தில் விளையாட்டு போட்டியின் போது மாரடைப்பால் உயிரிழந்த மாணவனுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவனின் குடும்பத்துக்கு 3 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவன் ரிஷிபாலன் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில், மண்டல அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் கலந்துகொண்டு, காட்டுச்சேரி … Read more

ஆகஸ்ட் 25: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 475 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து 79ரூபாய் 50 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நீதிக்கும் தர்மத்திற்கும் உண்மைக்கும் கிடைத்த வெற்றி! உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி பேட்டி…

சென்னை: நீதிக்கும் தர்மத்திற்கும் உண்மைக்கும் கிடைத்த வெற்றி என இன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள  தீர்ப்பு குறித்து அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். எடப்பாடி தலைமையில் நடைபெற்ற  அதிமுக பொதுக்குழுவில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர், ஓபிஎஸ் நீக்கம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த  தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என கூறியதுடன், ஓபிஎஸ் மனுக்களை தள்ளுபடி … Read more

காலை உணவு திட்டம் எனக்கு மனநிறைவை தருகிறது! திருக்குவளை பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி…

திருக்குவளை: காலை உணவு திட்டம் எனக்கு ஒரு மனநிறைவை தருகிறது  என திருக்குவளையில் மறைந்த முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்தார். அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த திட்டம் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வந்தது. இன்று ஆகஸ்டு 25ந்தேதி மீதமுள்ள அனைத்து … Read more