6 மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை! சொல்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்

நாகர்கோவில்: 6 மாதத்திற்குள்  தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறி உள்ளார். தமிழ்நாட்டில் இன்னும் 572 கிராமங்களில் 4ஜி சேவையே கிடைக்கவில்லை என்று மத்தியஅரசு, பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்க அமைச்சர் 6 மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இண்டர்நெட் சேவை வழங்குவோம் என கூறியுள்ளார். நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,  சைபர் செக்யூரிட்டி கொள்கையில் சில திருத்தங்கள் வேண்டும் என்று பல … Read more

162 தனியார் பள்ளிகள் அனுமதி பெறாமல் இயங்குவதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்கம் தகவல்!

சென்னை: முறையான அனுமதி பெறாமல் இயங்கும் 162 தனியார் பள்ளிகளுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த பள்ளிகள் இயங்குவதை தடுக்கும் நடவடிக்கை குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை தவிர, 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.  இந்த சுயநிதி பள்ளிகள் (மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ., சர்வதேச, பன்னாட்டு பள்ளிகள்) மெட்ரிகுலேஷன் பள்ளிகள் … Read more

தடைசெய்யப்பட்ட திண்டுக்கல் பி.எஃப்.ஐ அலுவலகத்தில் என்ஐஏ சோதனை!

திண்டுக்கல்: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததால், பிஎஃப்ஐ அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்த நிலையில்,  திண்டுக்கல் அருகே பேகம்பூரில் உள்ள பி.எஃப்.ஐ அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், இந்தியாவில் பயங்கரவாத திட்டங்களை அரங்கேற்ற திட்டமிட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் … Read more

இனி எந்தவொரு இந்தியருக்கும் தடுப்பூசி அவசியமில்லை! இந்திய வம்சாவழி மருத்துவ நிபுணர் தகவல்…

வாஷிங்டன்: இனி எந்தவொரு இந்தியருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமில்லை! இந்திய வம்சாவழி  இதய நோய் நிபுணர் கூறியுள்ளார். இந்தியாவை பூர்வீகமாக கொண்டவா் இங்கிலாந்து மருத்துவா் அசீம் மல்ஹோத்ரா. இவர், கொரோனாவுக்கு எதிரான எம்ஆா்என்ஏ தடுப்பூசிகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார். கொரோனா பெருந்தொற்றில் இருந்து பாதுகாக்க தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனா குறைந்துள்ளதால், தடுப்பூசி பயன்பாடும் குறைந்துள்ளது. அதேவேளையில், தடுப்பூசிகளால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் … Read more

சட்டவிரோத கல்குவாரிகள் மூலம் கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தல்! தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: கோவை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும்  சட்டவிரோத கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு  அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் தொடர்பபான பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது  மனுவில், “கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னனூர், காரமடை மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் இயங்கி வரும் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில், 80 சதவீத … Read more

தென்காசி சங்கரநாராயணசுவாமி கோயிலை ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு…

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் இன்று அமைச்சர் சேகர்பாபு ஆய்வு  செய்தார். அங்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான  பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது. தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற  கோவில்களில் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்று. இந்த கோவிலில் கும்பாபிஷே கம் நடத்த திட்டமிட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இன்று அமைச்சர்  சேகர்பாபு சங்கரநாராயண சுவாமி … Read more

ராமநாதபுரம் மண்டபம் அருகே கடலில் வீசப்பட்ட 20 கிலோ தங்கம் மீட்பு… ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது..

ராமேஷ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட  தங்கத்தில், 20 கிலோ தங்கம் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், தொடர்ந்து நடுக்கடலில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என கடலோர காவல்படையினர் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இலங்கையிலிருந்து மண்டபம் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, கடந்த புதன்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டம், … Read more

தமிழ்நாட்டில் 572 கிராமங்களில் 4ஜி சேவை இல்லை! மத்தியஅரசு தகவல்..

டெல்லி: தமிழ்நாட்டில் 572 கிராமங்களில் 4ஜி சேவை இல்லை என்றும், நாடு முழுவதும் இதுவரை 45,000 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், 4ஜி சேவை குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்தியஅமைச்சர் பதில் அளித்தார். அப்போது,  நாட்டில் 93 சதவீதம் கிராமங்களுக்கு 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது எனவும் … Read more

அண்ணா பல்கலையில் அவுட்சோர்சிங் முறையில் ஊழியர்கள் நியமனம்! அன்புமணி ராமதாஸ் கடும் கண்டன்ம்

சென்னை: சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு அரசு முறையாக பணி நியமனம் செய்யாமல், அவுட்சோர்சிங் முறையில் ஊழியர்களை நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது. இது  அநீதி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அவுட் சோர்சிங் முறைப்படியே பணியாளர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், பணியாளர்களை நியமிப்பது தொடர்பான நடைமுறைகளை கண்டறிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அரசு அறிவித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மக்களுக்கு … Read more

ரயில் பயணிகளின் முன்பதிவு டிக்கெட் ரத்தால் மத்தியஅரசுக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு தெரியுமா?

டெல்லி: பயணிகளின் ரயில் பயணிகளின் முன்பதிவு டிக்கெட் ரத்தால் மத்தியஅரசுக்கு  ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் ரயில் டிக்கெட் முன்புதிவு  ஐஆர்சிடிசி ,இணைதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பலர் வெளி இடங்களுக்கு செல்ல 3 மாதங்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆனால், கடைசி நேர தவிர்க்க முடியாத காரணங்களால் ஏராளமானோர் முன்பதிவுகளை ரத்து செய்கின்றனர். இதற்காக குறிப்பிட்ட அளவு பணம் நமது புக்கிங் … Read more