பிரபல மலையாள நடிகரின் மனுவைத் தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம் கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விசாரணையைத் தள்ளி வைக்கக் கோரிய நடிகர் திலீப் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரபல மலையாள நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கு எர்ணாகுளம் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்த போது, குற்றத்தில் ஈடுபட்ட கும்பல் அதை செல்போனில் பதிவு செய்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகப் பிரபல நடிகர் திலீப் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைதான பல்சர் சுனில் என்பவரிடமிருந்து, பாலியல் துன்புறுத்தல் காட்சிகள் அடங்கிய மெமரி … Read more

திருப்பூர் அருகே ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்த மாணவன் படுகாயம்

திருப்பூர் திருப்பூர் அருகே ஒரு மாணவன் ஓடும் பேருந்தை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாததால் கீழே குதித்து படுகாயம் அடைந்துள்ளான்/ சிவக்குமார் மற்றும் அவர் மனைவி பிரியா திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை அடுத்த அணைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் 10 வயது மகன் விஷ்ணு  குன்னத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். அவன் அணைப்பதியில் இருந்து தினமும் பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்தான். திருப்பூருக்கு குன்னத்தூரில் இருந்து தடம் எண்-10 அரசு பேருந்தும், தடம் 10 … Read more

யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த ரஜினிகாந்த் : அரசியல் தலைவர்கள் கருத்து

சென்னை நடிகர் ரஜினிகாந்த் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்றுள்ளது.  இதையொட்டி அவர் இமாசலப்பிரதேசம் சென்றார்.  திரும்பும் வழியில் உத்தரப்பிரதேச மாநிலம் சென்று அம்மாநில முதல்வர் யோஇ ஆதித்யநாத்தை சந்தித்த போது அவர் காலில் விழுந்து ரஜினிகாந்த் வணங்கியது பேசு  பொருளானது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,   ”ரஜினி … Read more

மஃக்னஸ் கார்ல்சன் உடனான இறுதிப் போட்டி முதல் சுற்றை டிரா செய்தார் பிரக்ஞானந்தா…

இந்தியாவின் பிரக்ஞானந்தா மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த உலகின் முதல் நிலை செஸ் வீரரான மஃக்னஸ் கார்ல்சன் இடையிலான FIDE உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று துவங்கியது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முதல் ஆட்டம் இன்று நடைபெற்றது இதில் யாருக்கும் வெற்றி தோல்வி இன்றி முடிந்ததை அடுத்து இருவருக்கும் தலா அரை பாயிண்டுகள் வழங்கப்பட்டது. இதன் அடுத்த சுற்று நாளை நடைபெற உள்ளது. முன்னதாக நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் … Read more

நிதி மோசடி வழக்கில் முன் ஜாமீன் அளிக்க மறுத்த மதுரை உயர்நீதிமன்றம்

மதுரை நிதி மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மதுரையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. இதில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 12% முதல் 30% வரை வட்டி வழங்குவதாகவும், பின்னர் இரட்டிப்புத் தொகையை முதிர்வுத் தொகையாக வழங்குகிறோம் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளதை நம்பி தமிழகம் முழுவதும் இருந்து பலர் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். அவர்கள் கூறியபடி, … Read more

அரசு தரப்பு வாதங்களைத் தொடங்காவிட்டாலும் தீர்ப்பு : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் வழக்குகளில் அரசுத் தரப்பு வாதங்களைத் தொடங்காவிட்டாலும் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.   சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இன்று வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற போது மனுதாரர் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அரசு தரப்பில் வாதங்களைத் தொடங்குவதற்கு நீதிமன்றத்தில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், விசாரணை தொடங்குவதற்கு முன்னதாகவே தெரிவிக்காமல் தாமதமாக தெரிவித்ததற்காகவும், இறுதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்ட வழக்கைத் … Read more

ஜூனியர் ஆக்கி தொடரில் இந்திய மகளிர் அணி வெற்றி

பெர்லின் ஜூனியர் ஆக்கி தொடரின் இறுதி லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி ஸ்பெயின் நாட்டை வென்றுள்ளது. ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான ஆக்கி தொடர் ஜெர்மனியில் நடைபெறுகிறது.  இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் தொடரை நடத்தும் அணியான ஜெர்மனி ஆகிய 4 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்திய மகளிர் அணி தனது முதல் போட்டியில் ஜெர்மனிக்கு எதிராகத் தோல்வியும், இங்கிலாந்து அணிக்கு எதிராகச் சமனும் கண்டிருந்தது. இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்திய அணி ஸ்பெயினுடன் மோதியது. இன்று பரபரப்பாக … Read more

சென்னையின் பல்வேறு இடங்களில் மிதமான மழை – அடுத்த 2-3 நாட்கள் டமால் டுமீல்ஸ்! வெதர்மேன் தகவல்..

சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில்  இன்று (ஆகஸ்ட் 22ஆம் தேதி)  பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேனும், அடுத்த 2-3 நாட்கள் டமால் டுமீல்ஸ என பதிவிட்டுள்ளார். இன்று இரவு சென்னையில் மழை பெய்யும் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் 11 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக.22) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை … Read more

கோ-ஆப்டெக்ஸ் நிலையம் மற்றும் சாயச்சாலை கட்டிடங்கள், மருத்துவமனைகள் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: நெல்லையில் கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் வணிக வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  தொடர்ந்து, ஓசூரில் கோ-ஆப்டெக்ஸ் நிலையம் மற்றும் 3 மாவட்டங்களில் சாயச்சாலை கட்டிடங்களை திறந்து வைத்தார். அதுபோல சில மாவட்டங்களில் மருத்துவமனை கட்டிடங்களையும் திறந்து வைத்தார். தொடர்ந்து,  பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதார்களுக்கு, கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பல்வேறு கட்டிங்களையும், … Read more

சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி நாளை மாலை நிலவில் தரையிறங்கும்! இஸ்ரோ புதிய அறிவிப்பு…

ஸ்ரீஹரிகோட்டா:  நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்2 விண்கலம், ஏற்கனவே திட்டமிட்டபடி, ஆகஸ்ட் 23-ந்தேதி மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்து உள்ளது. நிலவில் தரையிறங்கும் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆராய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சுற்றி வருகிறது. இந்த விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர் எந்திரம் நாளை மாலை நிலவில் தரையிறக்கப்படும் என இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மேலும், இதை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் … Read more