ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும்! மத்தியஅமைச்சர் பாராளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என நாடாளுமன்றத்தில்  மத்தியஅமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களால், பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர். ஆனால், மத்தியஅரசு அதை தடுப்பதற்கு பதிலாக, 28 சதவிகித ஜிஎஸ்டி வரி வசூலித்து வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் தடை சட்டத்துக்கும் கவர்னர் அனுமதி மறுத்து வருகிறார்.  அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி ஆன்லைன் … Read more

78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் இரவு நேரங்களில் சென்னை சாலைகள் சுத்தம் செய்யும் பணி!

சென்னை; 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் இரவு நேரங்களில் சென்னை சாலைகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிக்க சென்னையின் பல சாலைகள் இரவு நேரங்களில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது   78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம்  இரவு நேரங்களில் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியால்,  387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து … Read more

தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ படத்தின் டிரெய்லர் வெளியானது…

தனுஷ் – சம்யுக்தா நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழில் ‘வாத்தி’ என்றும் தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் வரும் 17 ம் தேதி ரிலீசாகிறது. ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் ஏற்கனவே இந்தப் படத்தின் பாடல் வெளியாகி வைரலாகி உள்ளது.

‘விடுதலை’ படத்தில் இளையராஜா இசையில் வெளியான ‘ஓன்னோட நடந்தா’ பாடல் வைரலானது…

சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ‘ஓன்னோட நடந்தா’ இன்று வெளியானது. தனுஷ், அநன்யா பஃட் இருவரும் பாடியுள்ள இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவின் குஜராத், காஷ்மீர் உள்பட 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு…

டெல்லி: துருக்கியைத் தொடர்ந்து இந்தியாவில் 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என நிலநடுக்கம் குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 60% பகுதி  நிலநடுக்கத்திற்கு ஆளாகும் அபாயம் இருப்பதாக ஏற்கனவே ஆய்வுகள் தெரிவித்து உள்ளன.  இதை நாடாளுமன்றத்தில் த்திய சுற்றுச்சூழல், மற்றும் புவி அறிவியலுக்கான மத்திய இணை அமைச்சரின் (சுயாதீனப் பொறுப்பு)  தெரிவித்திருந்தார். அதன்படி, இந்தியாவின் நிலப்பரப்பில் 60% (அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியது) வெவ்வேறு அதிர்வு தீவிரங்களின் பூகம்பங்களுக்கு ஆளாகிறது என … Read more

தொழில் உரிமங்களை ‘கியூ ஆர் கோடு’ மூலம் புதுப்பிக்கலாம்! சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: மாநகராட்சிக்க உட்பட்ட பகுதிகளில், தொழில் உரிமங்களை புதுப்பிக்க ‘கியூ ஆர் கோடு’ மூலம் புதுப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னையில் உள்ள வணிகர்கள், மார்ச் 31க்குள் தொழில் உரிமங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வணிகர்கள், 2023-24-ம் நிதியாண்டிற்கு புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமங்களை மண்டல அலுவலகங்களிலும், முகாம்கள் மூலமாகவும் புதுப்பித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழில் உரிமங்களை புதுப்பிக்கத் தவறியவர்கள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உரிமம் இல்லாதவர்கள் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 5 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் குவிப்பு…

சென்னை:  ஈரோடு இடைத்தேர்தல் பாதுகாப்புக்குஏற்கனவே 2 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டுள்ள நிலையில்,  மேலும் 3 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அங்கு குழுமி உள்ளனர். இதனால், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்த நிலையில், அங்கு பாதுகாப்புக்கு மொத்தம் … Read more

வெளிநாட்டு வணிகர்களும் போன்பே பயன்படுத்தி பணம் செலுத்தலாம்! மத்தியஅரசு அறிவிப்பு..

டெல்லி: வெளிநாட்டு வணிகர்களும் உடனடியாகப் பணம் செலுத்த  இந்தியாவின் போன்பே (PhonePe)  செயலியால், யுபிஐ‘ பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. போன்பே (PhonePe) நிறுவனம், பயனர்கள் தற்போது மற்ற நாடுகளில் UPI ஐப் பயன்படுத்தி பணம் செலுத்தும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமெண்ட் தளங்களில் ஒன்றான PhonePe, கடந்த ஆறு ஆண்டுகளில், இந்தியா முழுவதும், UPI பேமெண்ட்களில்  நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்த நிலையில், தனது பயனர்களை … Read more

காதலர் தினம், பசுக்களை கட்டித்தழுவும் நாள் என கொண்டாடப்படும்! விலங்குகள் நலவாரியம் அறிவிப்பு…

டெல்லி:  பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த நாளை  ‛Cow Hug Day’ , அதாவது  பசுக்களை கட்டித்தழுவும் நாள் என கொண்டாட வேண்டும் என மத்திய அரசின்   விலங்குகள் நலவாரியம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பசுவை கட்டிப்பிடித்தால் உணர்ச்சி பெருக்கு அதிகரித்து மகிழ்ச்சி பொங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விலங்குககள் நலவாரியம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய கலாசாரம், கிராமப்புற பொருளாதாராரம் ஆகியவற்றின் முதுகெலும்பாக பசு உள்ளது. மேலும் … Read more

மாசி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 12ந்தேதி திறப்பு…

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலின் நடை 12 ஆம் தேதி மாலை திறக்கப்படும் என கேரள தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து ஒருசில நாட்கள், பக்தர்கள் தரிசனத்துக்கும் அனுமதி வழங்கப்படும்.  அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 12-ந்தேதி மாலை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கேரள தேவசம்போர்டு … Read more