காதலர் தினம், பசுக்களை கட்டித்தழுவும் நாள் என கொண்டாடப்படும்! விலங்குகள் நலவாரியம் அறிவிப்பு…

டெல்லி:  பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த நாளை  ‛Cow Hug Day’ , அதாவது  பசுக்களை கட்டித்தழுவும் நாள் என கொண்டாட வேண்டும் என மத்திய அரசின்   விலங்குகள் நலவாரியம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பசுவை கட்டிப்பிடித்தால் உணர்ச்சி பெருக்கு அதிகரித்து மகிழ்ச்சி பொங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விலங்குககள் நலவாரியம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய கலாசாரம், கிராமப்புற பொருளாதாராரம் ஆகியவற்றின் முதுகெலும்பாக பசு உள்ளது. மேலும் … Read more

மாசி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 12ந்தேதி திறப்பு…

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலின் நடை 12 ஆம் தேதி மாலை திறக்கப்படும் என கேரள தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து ஒருசில நாட்கள், பக்தர்கள் தரிசனத்துக்கும் அனுமதி வழங்கப்படும்.  அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 12-ந்தேதி மாலை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கேரள தேவசம்போர்டு … Read more

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி 2 நாள் ஈரோட்டில் தேர்தல் பிரசாரம்…

சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிப்ரவரி 24, 25ந்தேதி என 2 நாள் பிரசாரம் செய்ய உள்ள நிலையில், வரும் 19, 20ந்தேதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  போட்டியிடும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக தி.மு.க. … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் உள்பட 80 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில்  அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் உள்பட 80 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தேர்தலில் போட்டியில்லை என்று கூறிய அமமுக வேட்பாளரின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு உள்ளது ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி இடைத்தேர்தல் … Read more

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை! மாவட்ட ஆட்சியர் தகவல்…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலுமான கிருண்ணஉன்னி தெரிவித்துள்ளார். ஈவேரா திருமகன் காலமானதைத்தொடர்ந்து காலியாக உள்ள  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் 27-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் அங்கு 4 முனை போட்டி நிலவி வருகிறது. மேலும் திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக, அங்கு அனல்பறக்கும் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: டிடிவி தினகரன்

சென்னை:  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை அறிவித்த அமமுக தலைவர் டிடிவி தினகரன், தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்காததால், தேர்தலில் இருந்து விலகுவதாக நேற்று திடீரென அறிவித்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,  இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,  “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக … Read more

பெண்களின் உயர்கல்வி 27% அதிகரிப்பு: சென்னை அருகே தனியார் கல்லூரியில் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

பட்டாபிராம்: சென்னை அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்மூலம்  பெண்களின் உயர்கல்வி 27 சதவிகிம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கி வைத்தார். டெல்லி முதல்வர்அர்விந்த் கேஜ்ரிவால் முன்னிலையில் … Read more

‘கள ஆய்வில் முதலமைச்சர்’: 15, 16-ந் தேதிகளில் சேலம் உள்பட 4 மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் வரும்  15, 16-ந் தேதிகளில் 4 மாவட்டங்களில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சேலம் உள்பட 4 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். கள ஆய்வில் முதலமைச்சர்’ வேலூர் ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட ஆட்சியர் மற்றும்  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய  முதலமைச்சர், முறையான விளக்கம் அளிக்காத மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து நடவடக்கை … Read more

ஆவின் காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்! தமிழ்நாடு அரசு

சென்னை: ஆவினில்  காலியாக உள்ள பணியிடங்கள் இனி டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தொடர்ந்து, காலியாக 322 டிபணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆவினில் காலியாக உள்ள பணியிங்களுக்கு ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து பணி நியமனம் செய்து வந்தனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் அவ்வாறு நேரடியாக பணி நியமணம்  செய்யப்பட்ட பலரை திமுக அரசு பதவி நீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கு … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு பரிசீலனை – 24ந்தேதி முதலமைச்சர் பிரசாரம்…

ஈரோடு:  இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், வேட்புமனுத்தாக்கல் நேற்று முடிவடைந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. அங்கு தேர்தல் பிரசாரம் அனல்பறக்கும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் 24ந்தேதி அங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். திருமகன் ஈவேரா மறைவைத்தொடர்ந்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள, ஈரோடு கிழக்கு தொகுதியில்  இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக என 4 முனை போட்டி … Read more