‘கள ஆய்வில் முதலமைச்சர்’: 15, 16-ந் தேதிகளில் சேலம் உள்பட 4 மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் வரும்  15, 16-ந் தேதிகளில் 4 மாவட்டங்களில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சேலம் உள்பட 4 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். கள ஆய்வில் முதலமைச்சர்’ வேலூர் ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட ஆட்சியர் மற்றும்  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய  முதலமைச்சர், முறையான விளக்கம் அளிக்காத மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து நடவடக்கை … Read more

ஆவின் காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்! தமிழ்நாடு அரசு

சென்னை: ஆவினில்  காலியாக உள்ள பணியிடங்கள் இனி டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தொடர்ந்து, காலியாக 322 டிபணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆவினில் காலியாக உள்ள பணியிங்களுக்கு ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து பணி நியமனம் செய்து வந்தனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் அவ்வாறு நேரடியாக பணி நியமணம்  செய்யப்பட்ட பலரை திமுக அரசு பதவி நீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கு … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு பரிசீலனை – 24ந்தேதி முதலமைச்சர் பிரசாரம்…

ஈரோடு:  இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், வேட்புமனுத்தாக்கல் நேற்று முடிவடைந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. அங்கு தேர்தல் பிரசாரம் அனல்பறக்கும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் 24ந்தேதி அங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். திருமகன் ஈவேரா மறைவைத்தொடர்ந்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள, ஈரோடு கிழக்கு தொகுதியில்  இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக என 4 முனை போட்டி … Read more

பலி எண்ணிக்கை 8000 நெருங்கியது: நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது துருக்கி சிறுமி..

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது சிறுமி தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இயற்கை ஏன் அந்நாட்டு மக்களுக்கு இவ்வளவு பெரிய சோகத்தை கொடுத்துள்ளது என எண்ணத் தோன்றுகிறது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 6, 2023) அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை … Read more

உலகளவில் 67.65 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.65 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.65 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.74 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 64.90 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடத்தப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த (ஜனவரி) மாதம் 31-ஆம் தேதி தொடங்கியது. தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கலுக்கான நேரமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 4-ஆம் தேதி வரை 5 நாட்களில் 46 பேர் … Read more

புதுமைப் பெண் திட்டத்தின் 2ம் கட்ட பணி: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: புதுமைப் பெண் திட்டத்தின் 2ம் கட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த இரண்டாவது கட்டத்தின் மூலம் மேலும் 1,04,347 மாணவிகள் பயன்பெற உள்ளனர். முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், புதுமைப் பெண் திட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் … Read more

பிப்ரவரி 08: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 263-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 263-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மணக்குள விநாயகர் திருக்கோயில், புதுச்சேரி

அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில், புதுச்சேரியில் அமைந்துள்ளது. பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிகாலத்தில் கி.பி.1688ல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இங்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோயிலே மணக்குள விநாயகர் திருக்கோயில். இத்திருத்தலத்தின் மேல் பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும் ஆகவே அக்குளத்திற்கு மணற்குளம் என்று பெயர் வந்ததாகவும் உறுதியாகச் சான்றுகளுடன் கூறுவர். புதுச் சேரியைப் பற்றி அறியக் கிடக்கின்ற பல தரப்பட்ட வரலாற்றுச் செய்திகள் இந்த உண்மையை … Read more

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானைக்கு நீச்சல் குளம் திறப்பு…

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணி குளிப்பதற்காக ரூ.60 லட்சம் மதிப்பீட்டில்  குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த குளியல் தொட்டியை  அமைச்சர் சேகர்பாபு இன்று திறந்து வைத்தார். இதையடுத்து யானை கல்யாணி அந்த நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்தது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அறநிலையத்துறை சார்பில், கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு மிகப்பெரிய நீச்சல் குளம் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல கோவில்களில், யானைகளுக்கு குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ள நிலையில், கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் … Read more