மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் 18ந்தேதி முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், நாளை முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்  என தமிழக அரசு அறிவித்து உள்ளது.  2021 சட்டப்பேரவை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், இந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டதுடன், செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த தினத்தன்று திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் பெண்களுக்கு … Read more

திருப்பதி மலைப்பாதையில் கடந்த 10 நாட்களில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது…

திருப்பதி: கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி  மலைப்பாதையில் நடந்துசென்ற சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்த நிலையில், அந்த பகுதியில் நடமாடும் சிறுத்தைகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களில்  2வதாக மேலும் ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது. திருப்பதி  ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரி பல லட்சம் பேர் வரும் நிலையில், பல ஆயிரம்பேர் தங்களது வேண்டுதலை நிறைவேற்றக்கோரி கீழ் திருப்பதியில் இருந்து நடந்தே மேல்திருப்பதி வரை சென்று … Read more

இமாச்சலப்பிரதேச கனமழையில் 3  நாட்களில் 71 பேர் உயிரிழப்பு

சிம்லா இமாச்சல பிரதேச மாநிலத்தில் கனமழை தொடர்வதால் கடந்த 3 நாட்களில் 71 பேர் மரணம் அடைந்துள்ளனர். வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்து வருகிறது. இமயமலையில் அமைந்துள்ள இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையால் மிகவும் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. சில  நாட்களாக இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. அங்கு அடிக்கடி மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழையும் கொட்டுகிறது. திங்கட்கிழமை தலைநகர் சிம்லாவில் உள்ள சம்மர்ஹில் மற்றும் பாக்லி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் சம்மர்ஹில் … Read more

பொன்னும் பொருளும் அருளும் அனந்தநாராயணர்

பொன்னும் பொருளும் அருளும் அனந்தநாராயணர் பஞ்ச நாராயணத் தலங்களில் திருக்கண்ணமங்கை திவ்விய தேசத்துக்கு அடுத்ததாக ஆவராணி எனப்படும் ஆபரணதாரி, வடக் காலத்தூர், தேவூர், கீழ்வேளூர் ஆகிய தலங்கள் அமைந்திருக்கின்றன. திருக்கண்ணமங்கையில் லோகநாத பெருமாளாகவும், ஆவராணியில் அனந்தநாராயண னாகவும், வடக்காலத்தூரில் வரத நாராயணனாகவும், தேவூரில் தேவ நாராயணனாகவும், கீழ்வேளூர் என்ற கீவளூரில் யாதவ நாராயண னாகவும் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். பஞ்ச நாராயணத் தலங்களில் ஆவராணி தலத்தில் மண்ணளந்து பின் விண்ணளந்த விஸ்வரூபியான மகாவிஷ்ணு, ஏழு தலைகளை உடைய … Read more

மேலும் குறைக்கப்பட்ட சந்திரயான் 3 சுற்று வட்டப் பாதை உயரம்

டில்லி நிலவை நெருங்கும் சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயரம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான ’இஸ்ரோ’ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ’சந்திரயான்-3′ என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந்தேதி விண்ணில் ஏவியது. சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்து கொண்டு நிலவு சுற்றுப்பாதையில் நுழைந்தது. தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வருகிறது. அவ்வப்போது அதன் சுற்றுப்பாதை தொலைவு மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயரம் வெற்றிகரமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. சுற்று … Read more

இந்தியாவில் 10000  புதிய மின் பேருந்துகள் அறிமுகம்

டில்லி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நாடு முழுவதும் 10000 புதிய மின் பேருந்துகளை அறிமுகம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பல்வேறு முடிவுகள், முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்,  ‘பிரதமரின் மின்சார பஸ் சேவை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு 57 ஆயிரத்து 613 … Read more

கேரளா வறட்சியை நோக்கிச் செல்கிறது : நிபுணர்கள் எச்சரிக்கை

திருவனந்தபுரம் கேரள மாநிலம் வறட்சியை நோக்கிச் செல்வதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வருடம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை, 44 சதவீதத்திற்கும் குறைவான மழையே பதிவாகியுள்ளது. குறிப்பாக இடுக்கியில் இயல்பை விட 60 சதவீதத்திற்கும் குறைவாகவும். வயநாட்டில் 55 சதவீதமும், கோழிக்கோடு மாவட்டத்தில் 53 சதவீதமும் மழை குறைந்துள்ளது. இதையொட்டி அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. கேரள மின்சார வாரியத்திற்குச் சொந்தமான அணைகளில், 37 சதவீதம் மட்டுமே தண்ணீர் … Read more

முன்னாள் பிரதமரின் 9 ஜாமீன் மனுக்களை நிராகரித்த நீதிமன்றம்

இஸ்லாமாபாத் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் 9 ஜாமீன் மனுக்களை இஸ்லாமாபாத் நீதிமன்றம் நிராகரித்துள்ளது பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சித் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் மீது ஊழல், கொலை, பயங்கரவாதம், தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இம்ரான்கான் கடந்த மே மாதம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டங்களில் வன்முறை வெடித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவ அலுவலகங்கள் மீது தாக்குதல் … Read more

தானமாக அளிக்கப்பட்ட அறக்கட்டளை சொத்துக்களை மாற்ற முடியாது : உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அறக்கட்டளைக்குத் தானமாக அளிக்கப்பட்ட சொத்துக்களைத் தனி நபர்களுக்கு மாற்ற முடியாது என உத்தரவிட்டுள்ளது. கே எம் சாமி என்பவர் தன்னுடைய சொத்துகளை ஆளவந்தார் அறக்கட்டளை பெயருக்கு அதன் நிர்வாகிகள் மாற்றிவிட்டதால், சொத்துக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் . வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் அறக்கட்டளைக்குத் தானமாக வழங்கப்பட்ட சொத்துகளைத் தனி நபர்கள் பெயருக்கு மாற்ற முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் திருப்போரூர் சுற்றுவட்டாரத்தில் … Read more

சந்திரயான்-3 தவிர நிலவை வட்டமிடும் ஏராளாமான விண்கலங்கள்… விண்வெளி ஆய்வில் நிலவுக்கு முக்கிய இடம்..

சந்திரயான்-3 தவிர 6 விண்கலங்கள் ஏற்கனவே சந்திரனை சுற்றி வருகிறது. தவிர. சந்திரயான்-3 நிலாவை அடைய இருக்கும் அதேவேளையில் ரஷ்யா அனுப்பியுள்ள லூனா 25யும் போட்டியாக களமிறங்குகிறது. லூனா விண்கலம் ஆகஸ்ட் 10 ம் தேதி ஏவப்பட்டது இது ஆகஸ்ட் 16 ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தப்பட உள்ளது. ஏற்கனவே விக்ரம் லாண்டருடன் தொடர்பை இழந்த சந்திரயான்-2 இதே சுற்றுவட்டப்பாதையில் சந்திரனில் இருந்து 100 கி.மீ. உயரத்தில் சுழன்று கொண்டு இருக்கிறது. 2009 ல் … Read more