கட்சி பிரமுகரே எதிர்ப்பு எதிரொலி: ரஜினியிடம் பகிரங்கமான மன்னிப்பு கோரினார் ஆதவ் அர்ஜுனா

 சென்னை:  தவெக கட்சி பிரமுகரே ரஜினி குறித்த ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு  எதிர்ப்பு  தெரிவித்தததுடன், அதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என  அவர் முன்னிலையில் பேசிய நிலையில், ரஜினியிடம் பகிரங்கமான மன்னிப்பு கோரினார் ஆதவ் அர்ஜுனா/ .இந்த நிலையில், கொளத்தூரில் இன்று நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகியும், ரஜினி ரசிகருமான அசோக் பேசும் போது, “ரஜினிகாந்த் பற்றி த.வெ.க.வில் யார் எது பேசினாலும், நான் கேள்வி கேட்பேன். ரஜினியை பற்றி நீங்கள் பேசியது குறித்து மேடையில் … Read more

போலீசுக்கே பாதுகாப்பற்ற சூழல்! திமுக அரசை கண்டித்து என்டிஏ நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்…

சென்னை:  தமிழ்நாட்டில், போலீசுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது என   திமுக அரசை கண்டித்து என்டிஏ நடத்திய ஆர்ப்பாட்டத்தில்  கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி  கடுமையாக விமர்சனம் செய்தார். திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் என்.டி. ஏ கூட்டணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சென்னை கே.கே நகரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது திமுக அரசை கடுமையாக சாடினார். தி.மு.க அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி … Read more

 ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’! ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை…

சென்னை:  ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’!  என தவெக  ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசியிருந்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் தி.மு.க.வின் மிரட்டலுக்கு பயந்து தனது அரசியல் பயணத்தை கைவிட்டதாக விமர்சித்திருந்தார். இதற்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்வினையாற்றி வருகின்றன. ரஜினி ரசிகர்கள், தவெகவுக்கு எதிராக களமிறங்குவோம் என எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில், … Read more

சமையல் எரிவாயு உபயோகிப்பாளர் உடனடியாக e-KYC பூர்த்தி செய்ய மத்தியஅரசு அறிவுறுத்தல்!

சென்னை: சமையல் எரிவாயு உபயோகிப்பாளர் ஆன்லைனிலோ அல்லது  எரிவாயு சப்ளை செய்யும் நிறுவனத்திற்கோ சென்று, உங்களது e-KYC பூர்த்தி செய்ய  மத்தியஅரசு  அறிவுறுத்தி உள்ளது. இந்த மாத இறுதிக்குள் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுளளது. இதுதொடர்பாக, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், அனைத்து உள்நாட்டு எல்பிஜி (LPG) நுகர்வோரும் தங்களது பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை (e-KYC) பூர்த்தி செய்வது தற்போது அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்காக நீங்கள் கேஸ் அலுவலகத்திற்கு … Read more

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல இலவச பேருந்துகளை இயக்குகிறது கோவில் நிர்வாகம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பக்தர்கள் பவுர்ணமி அன்று கிரிவலம் செல்லும் வசதியாக  கோவில் நிர்வாகம்  சார்பில் இலவச ஏசி பேருந்து இயக்கப்படுகிறது. ஏற்கனவே முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கிரிவலம் செல்ல என்எல்சி நிறுவனம்  இலவசமான பேருந்து வழங்கியது. அது பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், தற்போது, அண்ணாமலையார் கிரிவலம் செல்ல முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி 14 கிலோமீட்டர் கிரிவலம் செல்ல ஏதுவாக NLC இந்தியா நிறுவனத்தின் சார்பில் முதல் பேருந்து அண்ணாமலையார் கோவிலுக்கு ரூபாய் 50 லட்சம் … Read more

பரபரக்கும் அறிவாலயம்: தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கியவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கியவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். இதனால்,  திமுக தலைமையகமான  அண்ணா அறிவாலயம் கட்சியினரின் கூட்டத்தில் பரபரப்பாக காணப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுஉள்ளது. இந்த தேர்தலில்  தி.மு.க. தலைமையிலான ஒரு அணி, அ.தி.மு.க. தலைமையிலான ஒரு அணி, நடிகர் விஜய்யின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி  ஏற்பட்டுள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு … Read more

80% பெண்கள் திமுகவுக்கே வாக்கு – அ.தி.மு.க. ஆட்சியிலும் போதைப்பொருள் புழக்கம் இருந்தது! அமைச்சர் ரகுபதி…

சென்னை: 80% பெண்கள் திமுகவுக்கே வாக்களிப்பார்கள் என்றும்,  தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் போதைப்பொருள் புழக்கம் இருந்தது திமுக அமைச்சர் ரகுபதி பதில் தெரிவித்துள்ளார். அவரது கருத்து விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கும் போதை கலாச்சாரத்தால், மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற சட்ட விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் திமுக அரசை … Read more

போர் நீடிக்கும் அபாயம் காரணமாக வாரத்திற்கு 4 நாள் வேலை… இலங்கை அரசு அறிவிப்பு

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் நீண்ட காலம் தொடரும் அபாயம் இருப்பதால், எரிபொருளைச் சேமிக்க இலங்கை அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதன்படி, அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீர்வழிச் சாலை மூடப்பட்டதையடுத்து எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி கூறுகையில், புதன்கிழமை … Read more

“காலாண்டு அறிக்கை அவசியமில்லை”… அமெரிக்கப் பங்குச்சந்தையில் பெரிய மாற்றம்…

அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (Securities and Exchange Commission – SEC), நிறுவனங்கள் வெளியிடும் நிதி அறிக்கைகளில் முக்கிய மாற்றம் செய்யும் திட்டத்தைத் தயாரித்து வருகிறது. தற்போது காலாண்டு அடிப்படையில் ஆண்டுக்கு நான்கு முறை நிதி அறிக்கைகள் வெளியிடும் நடைமுறை உள்ளது. இதை மாற்றி, ஆண்டுக்கு இரண்டு முறை மட்டும் அறிக்கைகள் வெளியிடும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்படலாம். இந்த மாற்றத்திற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் SEC தலைவர் பவுல் அட்கின்ஸ் … Read more

வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன? தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

சென்னை:  தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அன்று வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன?  என்பதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்  தெரிவித்துள்ளார். அதன்படி, ஆதார் அட்டை உள்பட   13 அடையாள ஆவணங்கள் தகுதியானவை என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக  தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி,  ஏப்ரல் 23 (வியாழக்கிழமை) அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மே 4 (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் மதியமே ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது தெரிய வரும். … Read more