நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம்! சிவசேனா மனுமீது உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், கவர்னரின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும் கூறி உள்ளது. மகாராஷ்டிரா மாநில ஆளுநர் கோஷ்யாரி, உத்தவ்தாக்கரே அரசு நாளை (30ந்தேதி) மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு தடை கேட்டு சிவசேனா தரப்பில் உச் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீது இன்று காரசார விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. … Read more

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் மகா விகாஸ் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்ற வேண்டும் என்று கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 39 பேர் போர்க்கொடி உயர்த்தினர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தலைமை தாங்கிய ஏக்நாத் ஷிண்டே எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்திக்கு அழைத்துச் சென்று தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கோரிக்கை குறித்து தன்னை நேரில் சந்தித்து … Read more

நாளை ஆட்சி நிலைக்குமா? மும்பை விமான நிலையம் உள்பட பல நகர்களின் பெயரை மாற்ற உத்தவ்தாக்கரே அமைச்சரவை ஒப்புதல்…

மும்பை:  நாளை ஆட்சி நிலைக்குமா என தெரியாத நிலையில், மும்பை விமான நிலையம் உள்பட பல நகர்களின் பெயரை மாற்ற உத்தவ் தாக்கரே அமைச்சரவை இன்று மாலை ஒப்புதல் வழங்கி உள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், கவர்னரின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும் கூறி உள்ளது. இதனால் உத்தவ் தாக்கரே அரசு கவிழும் சூழல் எழுந்துள்ளது. இந்த பரபரப்பான … Read more

பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சம் பணப் பரிமாற்றம்! டெல்லி காவல்துறை தகவல்

டெல்லி: நூபுர்சர்மா விவகாரத்தை உலக நாடுகளின் பார்வைக்கு கொண்டு சென்று, சர்ச்சையை ஏற்படுத்திய பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் வங்கி கணக்கில் முறைகேடாக ரூ.50 லட்சம் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக, டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போலி செய்திகளை கண்டறிந்து, அதன் பின் இருக்கும் உண்மைகளை வெளிப்படுத்தும் வேலையை  செய்வது வருவதாக ’ஆல்ட் நியூஸ்’ நிறுவனம்  கூறி வருகிறது. அதுபோல பல செய்திகளின் உண்மைத்தன்மையையும் வெளியிட்டு வந்தது. . இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜூபைர். இவர் நூபுர் சர்மாவின் … Read more

ஹனிமூன் முடிந்து ஷூட்டிங்-கிற்கு கிளம்பிய நயன்தாரா… பவுன்சர்கள் அத்துமீறல்…

அண்மையில் மாமல்லபுரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் விமர்சையாக நடைபெற்றது. நயன்தாரா – விக்கி திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ அதிகம் வெளிவராத நிலையில் அவை நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு பலகோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர்கள் இருவரும் தாய்லாந்துக்கு தேனிலவு சென்ற புகைப்படங்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர். தற்போது தேனிலவு முடிந்து நயன்தாரா ஷூட்டிங்-கிற்கு கிளம்பியுள்ளதாக தெரிகிறது. திருமணத்துக்குப் பின் முதல் முறையாக மும்பையில் ஷாருக்கானுடன் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்தார். … Read more

மதவெறியர்கள் ஒவ்வொரு முறையும் ஆயுதங்கள் மூலம் கொலையோடு பேசுகிறார்கள்….

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு நபிகள் நாயகம் தொடர்பாக டீவி விவாதத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொன்னார் பாஜகவின் செய்தி தொடர்பாளரான நூபூர் ஷர்மா.. உள்நாடு முதல் அரபு நாடுகள் வரை பெரிய அளவில் பிரச்சனை வெடித்தது. இப்போது நூபூர் ஷர்மா கருத்துக்கு ஆதரவாக முகநூலில் பதிவு போட்ட டெய்லர் ஒருவரை ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பட்டப்பகலில் தலையை துண்டித்து படுகொலை செய்திருக்கின்றனர் இரண்டு இஸ்லாம் மத வெறியர்கள். பிரதமருக்கு எதிராக கொலை மிரட்டலும் … Read more

மூன்றாம் பாலினத்தவர்கள் எம்பிசி வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்! உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

சென்னை: மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும்,  அரசு வேலைகளில் 3-ம் பாலினத்த வர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என  சென்னை உயர்நீதிமன்றத்தில்  தமிழகஅரசு விளக்கமளித்து, அதற்கான  அரசாணைகளை தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம். அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மூன்றாம் பாலினத்தவர் அமைப்பைச் சேர்ந்த பி சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில்,  மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உச்ச … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம்: உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நத்தம் விஸ்வநாதன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான  உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நத்தம் விஸ்வநாதன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்துள்ளர். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தற்போது முன்னாள் அமைச்சரும், எடப்பாடி ஆதரவாளருமான நத்தம் விஸ்வநாதனும் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த ஜூன் 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்  சென்னையில் நடைபெற்றது. முன்னதாக அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் தீவிரமடைந்ததால், அதை ஏற்க மறுத்த ஓபிஎஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தனக்கு சாதகமான … Read more

வேலூரில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

வேலூா்: பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் ரூ.53.13 கோடி மதிப்பீட்டில் வேலூா் புதிய பேருந்து நிலையம் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர், அங்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.  பொலிவுறு நகா் திட்டத்தின் … Read more

உலகளவில் 55.05 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 50.05 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 6.72 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், கொரோனா பாதிப்பால் 1,214 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 52.61 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.