காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முக்கிய விவகாரங்களில் கட்சி நிலைப்பாட்டுக்கு எதிராக பேசுவதை தவிர்க்க ஆலசோனை

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மனிஷ் திவாரி எம்.பி. மற்றும் ஆச்சார்யா பிரமோத் கிஷன் ஆகியோர் தெரிவித்திருந்த கருத்துகள் கட்சி நிர்வாகிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து அவர்களுக்கு கட்சி நிலைப்பாட்டுக்கு எதிராக பேசுவதை தவிர்க்க ஆலசோனை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் மற்றும் உதய்பூர் சம்பவம் தொடர்பாக இந்த இருவரும் வெளியிட்ட கருத்து கட்சி நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணாக இருந்ததை அடுத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் எம்.பி. மனிஷ் திவாரி எழுதியிருந்த கட்டுரை … Read more

நீதிமன்ற உத்தரவு எதிரொலி: 210 ஆர்டர்லிகளை திரும்பப் பெற்றதாக டிஜிபி தகவல்…

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு காரணமாக, போலீஸ் உயர் அதிகாரிகள் வீடுகளில் வேலை செய்த 210 ஆர்டர்லிகள் திரும்பப் பெற்றுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார். தமிழக காவல்துறையில் உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றும் வகையில், காவல்துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் சிலர்,  `ஆர்டர்லி’ என்ற  முறையில் உயர்அதிகாரிகளின் வீடுகளில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த நடைமுறை  பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆர்டரியின் பணியானது, உயர்அதிகாரிகளின்  போன் அழைப்புகளுக்கு பதிலளிப்பது, சீருடைகளைப் பராமரிப்பது, உயரதிகாரிகளின் … Read more

இரண்டாயிரத்தை தாண்டியது…. தமிழ்நாட்டில் இன்று 2069 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 909 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2069 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 909, செங்கல்பட்டில் 352, திருவள்ளூரில் 100 மற்றும் காஞ்சிபுரத்தில் 71 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 96, திருச்சி 62, கன்னியாகுமரி 61, திருநெல்வேலி 46, மதுரை 41, தூத்துக்குடி 38, சேலம் 28, ஈரோடு மற்றும் சிவகங்கையில் தலா 24 பேருக்கும், ராணிப்பேட்டை 22, விழுப்புரம் 18, திருப்பூர் 16, விருதுநகர் மற்றும் தென்காசியில் தலா 14 பேருக்கும், … Read more

கொசு மருந்து தெளிக்கும் டிரோன் ஆபரேட்டர்களாக திருநங்கைகள் நியமனம்! சென்னை மாநகராட்சி

சென்னை: கொசு மருந்து தெளிக்கும் டிரோன் ஆபரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் இந்த நியமனம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த, டிரோன்கள் மூலம் கொசு மருந்தை தெளிக்கும்  பணிகள் கடந்த அண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கான தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தபபட்டது. அதன்படி,சென்னையில் உள்ள 5 முக்கிய கால்வாய்களிலும், 31 சிறிய கால்வாய்களிலும் கொசு மருந்து டிரோன் மூலம் தெளிக்கப்படுகிறது. … Read more

முதல்வர் பதவி: பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஃபட்நாவிசுக்கு நன்றி தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே…

மும்பை: உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்திருந்த நிலையில், திடீர் திருப்பதாக, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்பார் என பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியின் அதிருப்தி  தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தன்னை முதல்வராக பதவி ஏற்க அனுமதி வழங்கிய பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமித்ஷாவுக்கு மற்றும் … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சந்திப்பு

சென்னை: எதிர்க்கட்சிகளின்  குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, தேர்தலில் தனக்கு வாக்களிக்கும்படி ஆதரவு கோரினார். குடியரசு தலைவர் தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை)  18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து பாஜக கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும், ஜார்க்கண்ட்  மாநில முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் … Read more

மகாராஷ்டிரா மாநில புதிய முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே…. இன்று இரவு பதவி ஏற்பு…

மும்பை: மகாராஷ்டிரா புதிய முதல்வராக அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவரான முன்னாள் அமைச்சர்  ஏக்நாத் ஷிண்டே இன்று இரவு 7.30 மணி அளவில் பதவி ஏற்கிறார். பாஜக ஆதரவுடன் அவர் ஆட்சி அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 3வது முறையாக முதல்வராக பதவி ஏற்கும் ஆசையில் இருந்த பட்னாவிஸ் ஆசை, நிராசையாகி போனது. இதனால் அவர் ஆட்சி பொறுப்பில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்து உள்ளார். உத்தவ்தாக்கரேவுக்கு எதிராக சிவசேனா கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் ஏக்நாத் … Read more

முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்தார் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா!

சென்னை: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும்  பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை திமுக எம்.பி.க்கள் வரவேற்றனர். இன்று மாலை முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார். நாட்டின் புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெற இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து … Read more

பம்ப்செட்களுக்கான ஜிஎஸ்டி உயர்வு! விவசாய துறையை பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் அதிருப்தி…

கோவை: ‘பம்ப்செட்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு இருப்பதற்கு, கோவையில் உள்ள பம்புசெட் தயாரிப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். மேலும், இந்த உயர்வால் விவசாய துறை பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். 2நாட்கள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 28, 29ந்தேதி ஆகிய இருநாட்கள் நடைபெற்றது. இதையடுத்து, ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி, பள்ளி குழந்தைகள் உபயோகப்படுத்தும் பொருட்கள் உள்பட, சூதாட்ட விடுதிகள், ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், … Read more

குடியரசு தலைவர் தேர்தல்: திரௌபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுக்கள் சரியாக உள்ளதாக தகவல்..

டெல்லி: குடியரசு தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அதில்,  தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவின் வேட்புமனுக்கள்  சரியாக உள்ளதாகவும், அதனால் அவை ஏற்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக தற்போதுள்ள  ராம்நாத் கோவிந்த்பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த … Read more