உதய்பூர் கொலையாளிக்கும் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு நிர்வாகிக்கும் தொடர்பு ?

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் கண்ணையா லால் படுகொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கொலையாளிக்கும் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு நிர்வாகிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ரியாஸ் அட்டாரி மற்றும் முகமத் கவுஸ் இந்த படுகொலை தொடர்பாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் குறித்த விசாரணையில் ரியாஸ் அட்டாரி மற்றும் முகமத் கவுஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி குறித்து விசாரணை மேற்கொண்ட இந்தியா டுடே நாளிதழ் ரியாஸ் அட்டாரி பா.ஜ.க.வின் சிறுபான்மைப் … Read more

தமிழ்நாட்டில் இன்று 2385 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 1025 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1025, செங்கல்பட்டில் 369, திருவள்ளூரில் 121 மற்றும் காஞ்சிபுரத்தில் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 118, கன்னியாகுமரி 72, திருச்சி 67, திருநெல்வேலி 64, தூத்துக்குடி 54, மதுரை 49, விருதுநகர் 39, சேலம் 33, ராணிப்பேட்டை 29, ஈரோடு 26, விழுப்புரம் 22, திருப்பூர் மற்றும் சிவகங்கையில் தலா 20 பேருக்கும், கிருஷ்ணகிரி 17, நாமக்கல் 15, … Read more

ஓபிஎஸ் மனு கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு எதிராக உள்ளது! எடப்பாடி மேல்முறையீடு மனுவில் தகவல்…

டெல்லி; ஓபிஎஸ் செயல்பாடு கட்சியை உருவாக்கிய எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக உள்ளது என உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,   சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வின் உத்தரவு கட்சியின் உள்விவகாரங்களிலும்,கட்சியின் ஜனநாயக அமைப்பு முறையிலும் தலையிடும் செயல் குறிப்பாக கட்சி விவகாரங்களில் முடிவெடுக்கும் உரிமை பொதுக்குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது மேலும் கட்சிதலைமை குறித்து விவாதிக்கக்கூடாது என்பது எதிர்மனுதாரருக்கு ஒரு தனிப்பட்ட “வீட்டோ” அதிகாரத்தை வழங்குவதுபோல் உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது. அதிமுகவில் … Read more

சென்னையில் அதிகரிக்கும் போதைப்பொருட்கள்: 7 நாளில் 45 கிலோ கஞ்சா பறிமுதல், 54 பேர் கைது!

சென்னை: சென்னையில் போதைப்பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த  7 நாளில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதுடன்,  54 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்களிம் இருந்து சுமார் 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும்  சென்னை மாநகரா காவல் ஆணையர் சங்கர்ஜிவால் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் விற்பவர்கள் மீதான கடும் நடவடிக்கையை தமிழக காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. ‘கஞ்சா ஆபரேசன் 1.O’ என்ற பெயரில் … Read more

தமிழ்நாட்டில் உள்ள அணைகள் மத்திய அணை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் இணைப்பு! மத்தியஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்க, மத்தியஅரசின் அணை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மாநில அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்தியஅரசு கடந்த ஆண்டு இறுதியில் (2021) அணை பாதுகாப்பு மசோதா கொண்டுவந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இந்த மசோதாப்படி,  நாட்டிலிருக்கும் அனைத்து அணைகளையும் ஒரே சீராகப் பாதுகாப்பது தொடர்பானது. இந்த மசோதா கடந்த  2010-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலேயே அறிமுகம் செய்யப்பட்டது.  இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. … Read more

சென்னையில் 4ம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு – 90ஆயிரம் பேருக்கு வேலை! அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: சென்னையில் வரும் 4ம் தேதி மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு  நடைபெற உள்ளதாகவும், அதில், 90ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சென்னையில்  அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி முதலீட்டாளர்கள் மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. கடந்த ஓராண்டில் 2.26 லட்சம் பேருக்கு … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ந்தேதி தொடங்குகிறது…

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ந்தேதி தொடங்குவதாக நாடாளுமன்ற செயலகம் அறிவித்து உள்ளது. குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18ந்தேதி நடைபெற உள்ளது. அதுபோல துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல்  ஆகஸ்ட் 6 ஆம்  தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 18ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 12ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மக்களவை செயலகம்  வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை … Read more

தடய அறிவியல் துறைக்கு 14 நடமாடும் ஆய்வக வாகனங்கள்! மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தடய அறிவியல் துறைக்கு 14 நடமாடும் ஆய்வக வாகனங்கள் கொண்ட வாகனத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் தலைமை ஆய்வகம் சர்வதேச தரச்சான்றிதழ் பெற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தடய அறிவியல் துறையின்சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், தடயவியல் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடியே 92 லட்சத்து 70 ஆயிரம் செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை முதலமைச்சர் … Read more

சிங்கப்பூர் நிறுவனத்துடன் செமிக்கண்டக்டர் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்! ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

சென்னை:  சிங்கப்பூர் நிறுவனத்துடன் செமிக்கண்டக்டர் உயர் தொழில் நுட்பப் பூங்கா அமைப்பதற்கான  புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் (IGSS Ventures – IGSSV), தமிழ்நாட்டில் 300 ஏக்கர் பரப்பளவில் ரூ. 25,600 கோடி மதிப்பீட்டில் ஒரு செமிகண்டக்டர் உயர் தொழில்நுட்பப் பூங்காவை அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்தானது. தமிழ்நாடு அரசின் சார்பாக வழிகாட்டி நிறுவனத்துக்கும் ஐ.ஜி.எஸ்.எஸ். வென்ச்சர்ஸ் இடையே உயர் தொழில் … Read more

தஞ்சையில் காணாமல் போன 300ஆண்டு புராதன தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

லண்டன்: தஞ்சை சரஸ்வதி மகால் மியூசியத்தில் இருந்து திருடப்பட்ட பழமையான தமிழ் பைபிள், லண்டனில் இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழில் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட 300ஆண்டு பழமையா புதியஏற்பாடு என்ற அந்த புராதன பைபிள், தற்போது லண்டனில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை சரஸ்வதி மகால் மியூசியத்தில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த சீகன்பால்க் என்பவர், நாகையில் புதிய ஏற்பாடு பைபிளை முதன்முறையாக தமிழில் மொழி பெயர்த்தார். இந்த பைபிளில் தஞ்சை மன்னராக இருந்த சரபோஜி மன்னரின் கையெழுத்திட்டிருந்தார். சுமார்  300 … Read more