தமிழகத்தில் பிப்.26 ல் புத்தகமில்லா தினம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிப்.26ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பிப்.26ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படுகிறது. பள்ளிகளுக்கு புத்தகங்கள் எடுத்துச் செல்வதை விடுத்து அனுபவங்கள் மூலம் வாழ்க்கை கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாடித்தோட்டம், மூலிகைத் தாவர வளர்ப்பு, பாரம்பரியக் கலைகள் குறித்து புத்தகமில்லா தினத்தில் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

ரஷ்ய கலை அரங்கில் 1930ம் ஆண்டு ஓவியத்துக்கு கண் வைத்த பாதுகாவலர்… ரூ. 7.5 கோடி நஷ்டம்…

ரஷ்யாவில் உள்ள எக்டேரின்புர்க் நகரில் உள்ள எல்ஸ்ட்டின் மைய்ய கலை அரங்கில் பழமையான ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தது. 1932 வாக்கில் ஹன்னா லெபோர்ஸ்கயா வரைந்த ‘த்ரீ பிகர்ஸ்’ என்ற ஓவியமும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. கண்ணில்லாத இந்த ஓவியத்தில் கண் வரைந்ததைக் கண்டு திடுக்கிட்ட பார்வையாளர் ஒருவர் இதுகுறித்து நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தார். விசாரணையில் அன்றைய தினம் புதிதாக வேலைக்கு சேர்ந்த பாதுகாவலர் ஒருவர் பொழுது போகாததால் தனது கையில் இருந்த பேனாவால் இந்த ஓவியத்தில் கண் வரைந்த … Read more

ரஜினிகாந்த் நடிக்கும் 169 வது படம்

நடிகர் ரஜினிகாந்தின் 169வது படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைகிறார் ரஜினிகாந்த். #Thalaivar169BySunPictures: ▶ https://t.co/EFmnDDnBIU Presenting Superstar @rajinikanth’s #Thalaivar169 directed by @Nelsondilpkumar and music by @anirudhofficial — Sun Pictures (@sunpictures) February 10, 2022 இந்த படத்தை பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு. https://patrikai.com/wp-content/uploads/2022/02/rajini169.mp4

தமிழக கோவில்களில் ஆதிசங்கரர் குறித்த பிரதமர் மோடியுன் உரை நேரடி ஒளிபரப்பு! வழக்கு தள்ளுபடி…

சென்னை: கேதர்நாத் கோவிலில்  நடைபெற்ற ஆதிசங்கரர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். இந்த நிகழ்வு தமிழகத்தில் உள்ள சில கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள ஸ்ரீஆதிசங்கரர்  கோவில்  கடந்த நவம்பர் மாதம் ரூ.250 கோடியில் புனரமைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு,  ஸ்ரீஆதிசங்கரர் சமாதியை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி தொடர்பான  வீடியோ, காணொலி … Read more

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கண்காணிக்க தலைமைச்செயலாளர் தலைமையில் 3 அடுக்கு கண்காணிப்பு குழு!

சென்னை: தமிழ்நாட்டில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கண்காணிக்க தலைமைச்செயலாளர் தலைமையில் 3 அடுக்கு கண்காணிப்பு குழு அமைத்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, மண்டல அளவில் இருந்த கண்காணிப்பு குழு தலைமைச்செயலாளர் தலைமையில் 3 குழுவாக மாற்றியமைக்கபப்ட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கோட்டாட்சியர் தலைமையிலான கண்காணிப்பு குழுவில் டி.எஸ்.பி, நகராட்சி ஆணையர்கள், அதிகாரிகள் மற்றும், நீர்வளத்துறை உபகோட்ட அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை உதவிக்கோட்ட  பொறியாளர்களுக்கும் குழுவில் இடம்பெறுவார்கள். அதேபோல, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவில் எஸ்.பி, காவல் ஆணையர், … Read more

காஞ்சிபுரத்தில் சோகம்: வார்டு பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வார்டு பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், தேர்தல் களம் அனல் பறக்கிறது. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ஜானகிராமன். இவரை ஆதரித்து நேற்றுதான் முதன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்ட நிலையில், இன்று அவர் திடீரென தற்கொலை … Read more

மலை இடுக்கில் சிக்கிய கேரள இளைஞரை மீட்கப்பட்டது எப்படி ? வீடியோ…

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் மலம்புழா பகுதியில் உள்ள குறும்பாச்சி மலையில் மலையேற்றம் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் தவறி விழுந்து மலை இடுக்கில் சிக்கிக்கொண்டார். திங்கட்கிழமை மதியம் நடைபெற்ற இந்த சம்பவத்தில் குறும்பாச்சி மலையை ஒட்டிய சேராடு கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான பாபு என்ற இளைஞர் மலை இடுக்கில் சிக்கிக் கொண்டதை அடுத்து அவருடன் வந்த நண்பர்கள் இருவரும் அவரை மீட்க பெரிதும் போராடினர். பின்னர் அருகில் உள்ள மலை கிராமத்திற்கு சென்று தகவல் … Read more

சினிமா விமர்சனம் : மகான்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடித்திருக்கும் படம், மகான். காந்தி மகானாக விக்ரம். சுதந்திர போராட்ட தியாகி குடும்பத்தைச் சேர்ந்த அவரை மதுவின் தீமைகளை சொல்லி சொல்லி வளர்க்கிறது குடும்பம். ஆனால், மது விற்பனை செய்யும் நிலைக்கு ஆளாகிறார். அவரது ஐ.பி.எஸ். மகன் தாதாபாய் நௌரோஜி (துருவ்) மூலம் சங்கடங்கள் ஏற்படுகிறது. அதை எப்படி சமாளிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்கள். … Read more

சினிமா விமர்சனம் : எப்.ஐ.ஆர்.

அபூபக்கர் அப்துல்லா என்கிற பயங்கரவாதி, இலங்கை தலைநகர் கொழும்புவில் எட்டு இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி ஏராளமானோர் மரணத்துக்கு காரணமாகிறான். இந்தியாவிலும் பங்கரவாத செயல்களைச் செய்ய திட்டமிடுகிறான். அவனை இந்திய உளவுத்துறை வலைவீசி தேடி வருகிறது. அந்தத் தேடலில் எதிர்பாராமல், அப்பாவி இஸ்லாமியரான விஷ்ணு விஷால் சிக்குகிறார். அவர்தான் பயங்கரவாதி அபூபக்கர் அப்துல்லா என உளவுத்துறை நினைக்கிறது. அவர் மீண்டாரா, பயங்கரவாதிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டதா என்பதுதான் கதை. மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரேபா மோனிகா, கவுதம் மேனன் … Read more

ஹிஜாப் விவகாரம்: கர்நாடகாவில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த இரண்டு வாரம் தடை!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையாக்கப்பட்டுள்ள நிலையில்,  ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடத்த இரண்டு வாரங்கள் தடை விதித்து மாநகர காவல் ஆணையர் கமல்பண்ட் உத்தரவிட்டுள்ளார். பெங்களூரு நகரில் உள்ள பள்ளி வாசல், பியு கல்லூரிகள், பட்டயக் கல்லூரிகள் மற்றும் அதுபோன்ற கல்வி நிறுவனங்களுக்கு 200 மீட்டர் சுற்றளவில் எந்தவிதமான கூட்டங்கள், போராட்டம் அல்லது போராட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு ஒரே சீருடை கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து, உடுப்பியில் … Read more