நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கண்காணிக்க தலைமைச்செயலாளர் தலைமையில் 3 அடுக்கு கண்காணிப்பு குழு!

சென்னை: தமிழ்நாட்டில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கண்காணிக்க தலைமைச்செயலாளர் தலைமையில் 3 அடுக்கு கண்காணிப்பு குழு அமைத்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, மண்டல அளவில் இருந்த கண்காணிப்பு குழு தலைமைச்செயலாளர் தலைமையில் 3 குழுவாக மாற்றியமைக்கபப்ட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கோட்டாட்சியர் தலைமையிலான கண்காணிப்பு குழுவில் டி.எஸ்.பி, நகராட்சி ஆணையர்கள், அதிகாரிகள் மற்றும், நீர்வளத்துறை உபகோட்ட அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை உதவிக்கோட்ட  பொறியாளர்களுக்கும் குழுவில் இடம்பெறுவார்கள்.

அதேபோல, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவில் எஸ்.பி, காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் , அல்லது நகராட்சி ஆணையர்கள்,  நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கள், திட்ட அதிகாரிகள் இடம்பெறுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.