ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு மையம், செங்கல்பட்டில் சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ கட்டிடம் திறப்பு! முதல்வர் ஸ்டாலின்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து, செங்கல்பட்டில் கட்டப்பட்டுள்ள சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ கட்டிடங்களையும் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி,  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். ரூ.364 கோடியில் தீவிர சிகிச்சை படுக்கைகள், அதி நவீன கருவிகளுடன் … Read more

ஆளுநருடன் மோதல் உச்சக்கட்டம்: தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை:  நீட் உள்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுத்துள்ளதால், ஆளுநருடன் தமிழக அரசின் மோதல் உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இதையடுத்து, இன்று ஆளுநர் அளிக்கும்  தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி செய்து வருவதால், தமிழக அரசு புறக்கணிப்பதாகவே கருதப்படுகிறது. தமிழ்ப்புத்தாண்டை ஒட்டி ஆளுநர் மாளிகையில் வழக்கமான தேநீர் விருந்து வழங்கப்படுவது வழக்கம். அதுபோல இன்றும் தேநீர் விருந்துக்கு தமிழகஅரசியல் கட்சிகளுக்கும், நீதிபதிகள் மற்றும் உயர்அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. … Read more

விமரிசையாக நடைபெற்றது மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் என்று பக்தர்கள் புடைசூழ வெகு விமரிசையாக நடைபெற்றது. 12நாட்கள் நடைபெறும் மதுரை சித்திரை திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 5ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவுல்  இன்று முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். நாளை  … Read more

கர்நாடக பாஜக அமைச்சர் மீது எழுந்துள்ள கமிஷன் புகார் குறித்து கார்ட்டுன் விமர்சனம்!

கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது எழுந்துள்ள கமிஷன் புகார் குறித்து கார்ட்டுன் விமர்சனம் செய்துள்ளது. அமைச்சர் ஈஸ்வரப்பாவின் ஆதரவாளர்களின் கமிஷன் மிரட்டல் காரணமாக காண்டிராக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு காண்டிராக்டர்களும் தங்களது பணிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால், பாஜக தலைமையோ நாங்கள் கங்கையைப் போல புனிதமானவர்கள் என்று கூறி வருகிறது. அதுபோல சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை … Read more

கோடை விடுமுறை: மேட்டுப்பாளையம் முதல் ஊட்டிவரை 16ந்தேதி முதல் ஒருவழிப் பாதையாக மாற்றம்!

கோவை: கோடை விடுமுறை மற்றும் ஊட்டி சீசனையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவதால், மேட்டுப்பாளையம் முதல் ஊட்டிவரை வரும்  16ந்தேதி முதல் ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளதால், கோடை விடுமுறையை குளுகுளுவென கொண்டாட, ஏராளமானோர் ஊட்டி, கொடைக்கானல், ஏற்பாடு, டாப் சிலிப் என கோடை வாசஸ்தலங்களை நோக்கி பயணமாகத் தொடங்கி உள்ளனர். ஊட்டியில் சீசன் தொடங்கி உள்ளதால்,  நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான சூழலை அனுபவிக்க  தினசரி அங்கு … Read more

ஆந்திராவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி… ஏராளமானோர் படுகாயம்…

அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் நள்ளிரவில்  ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளதாகவும் ஏராளமானோர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டம் அக்கிரெட்டிகுடிம் என்ற பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பல்வேறு ரசாயனங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக நேற்று இரவு பணியாளர்கள்பணிகளை மேற்கொண்டு வந்தனர். அப்போது, தொழிற்சாலையில் இருந்து திடீரென ர நைட்ரிக் அமிலம், மோனோமெத்தனால் உள்ளிட்ட ரசாயனங்கள் … Read more

கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ந்தார் குருபகவான் – ஆலங்குடியில் விசேஷ பூஜை…

திருவாரூர் : கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ந்தார் குருபகவான். இன்று அதிகாலை 4.16 மணிக்கு மீனராசிக்கு குருபகவான் இடம்பெயர்த்துள்ளார். குருபெயர்ச்சியையொட்டி திருவாரூர் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிப்பாடு நடந்து வருகிறது. பிரசித்தி பெற்ற குருபகவான் கோவில் (ஆபத்சகாயேஸ்வரர் கோவில்) ஆலங்குடியில் திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்றது. நவக்கிரகங்களில் ருபகவானுக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம் இன்று குரு பெயர்ச்சியை முன்னிட்டு, ஆலங்குடி,தென் திட்டை குருபகவான் … Read more

கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று மாலை பாரதியார் சிலை திறப்பு! முதல்வர் பங்கேற்பு…

சென்னை: தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை ராஜ் பவனில் இன்று (14-ந்தேதி) மாலை 5 மணிக்கு மகாகவி பாரதியார் சிலையை கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சியினர் பங்கேற்கின்றனர். இதுதொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை ராஜ் பவனில் நாளை (14-ந்தேதி) மாலை 5 மணிக்கு மகாகவி பாரதியார் சிலையை கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய … Read more

டிவிட்டர் பங்குளை வாங்கியதில் முறைகேடு – எலான் மஸ்க் மீது வழக்கு

வாஷிங்டன்: டிவிட்டர் பங்குளை வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எலான் மஸ்க் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை தான் வாங்கியதாக கடந்த 4-ந்தேதி எலான் மஸ்க் அறிவித்தார். இதையடுத்து அவர் டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை மறுத்துவிட்டார். இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி டுவிட்டர் நிறுவன பங்குதாரர் ஒருவர் எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக … Read more

ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி தருவதா? – சீமான் எச்சரிக்கை

சென்னை: ஏ.ஆர்.ரகுமானுக்கு மதம், அரசியல் ரீதியாக நெருக்கடி தந்தால் கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று அமித் ஷா கூறியிருந்தது தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு ‘தமிழ் தான் இணைப்பு மொழி ‘ என அவர் பதிலளித்தார். இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு மதம், அரசியல் ரீதியாக நெருக்கடி தந்தால் கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்று நாம் தமிழர் … Read more