மத்திய அரசு அலுவலகங்கள் நாளை முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் – அமைச்சர்

புதுடெல்லி:
கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து நாளை (7 ம் தேதி ) முதல் 100 சதவீத பணியாளர்களுடன் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்க உள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பிப்ரவரி 15 ம் தேதி வரை 50 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து மத்திய அரசு அலுவலகங்கள் நாளை முதல் 100 சதவீதம் முழு அளவிலான பணியாளர்களுடன் இயங்கும். கொரோனா தொற்று தடுப்பு விதிகளை பணியாளர்கள் பின்பற்றுவதை துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.