மாநகர பேருந்துகளில் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு காவலர்கள்! சங்கர் ஜிவால் தகவல்…

சென்னை: மாநகர பேருந்துகளில் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  தெரிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் இன்று பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வக கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்களை  சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை காவல்துறை ஆணையர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த … Read more

25 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லை… தமிழகத்தில் இன்று 32 பேருக்கு கொரோனா…

இரண்டாண்டுகளாக தொடர்ந்து வந்த பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் நாடுமுழுவதும் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 27,914 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 16 ஆண்கள் 16 பெண்கள் என மொத்தம் 32 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 293 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.   மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 25 மாவட்டங்களில் … Read more

விஜய் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது பீஸ்ட் டிரெய்லர்…

பீஸ்ட் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பீஸ்ட்’. விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏப்ரல் 13 ம் தேதி ஐந்து மொழிகளில் உலகெங்கும் ரிலீசாக இருக்கும் இந்தப் படத்தை தமிழில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் நாளை மாலை … Read more

பாஜக உறுப்பினர் கல்யாணராமன் மீதான குண்டர் சட்டம் ரத்து!

சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பையும், சலசலப்பையும் உருவாக்கி வரும்,  பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தைசென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக பாஜக செயற்குழு உறுப்பினராக இருப்பவர் கல்யாணராமன். இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் சாதி, மத மோதல்களை தூண்டும் விதமாக பரபரப்பான தகவல்களையும் பதிவிட்டு, மக்களிடையே வேறுபாட்டை எழுப்பி வந்தார். இதனால், இவர்மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து,  அவர்மீது காவல்துறை குண்டர் சட்டம் போடப்பட்டது. கடந்த 2021ம் … Read more

சன்னலுக்கு வெளியேதான் உலகம் இருக்கிறது! அதனை உங்கள் திறமையினால் புதுமைப்படுத்துங்கள்! ஆசிரியர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை: சன்னலுக்கு வெளியேதான் உலகம் இருக்கிறது என்று அதனை உங்கள் திறமையினால் செழுமைப்படுத்துங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  டிவிட் மூலம் ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். தொடர்ந்து டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றிற்கு நேரடியாக சென்று, அங்குள்ள நிகழ்வுகளை கேட்டறிந்தார். அப்போது ஸ்டாலின் உடன் டெல்லி முதல்வர்கெஜ்ரிவால், துணைமுதல்வர் சிசோடியா, அன்பில் மகேஷ் உள்பட பலர் சென்றனர். தொடர்ந்து டெல்லியில் … Read more

ஜிஎஸ்டி வரலாற்றில் முதன்முறையாக மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக உயர்வு!

டெல்லி: ஜிஎஸ்டி வரலாற்றில் முதன்முறையாக,  இதுவரை இல்லாத அளவ  மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில், சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2017ம் ஆண்டு ஜூலை 1ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. அன்றுமுதல் இன்று வரை, சாமானிய மக்களின் வயிற்றில் அடித்து, தொடர்ந்து வசூலை வாரிக் கொண்டிக்கொண்டிருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சற்று வரி வசூல் குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. கடந்த … Read more

தெலுங்கு, கன்னட வருடபிறப்பு: முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து…

சென்னை: தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் வாழும் தெலுங்கு, கன்னட மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதுபோல எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான இபிஎஸ்,ஓபிஎஸஸ்சும் உகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உகாதி திருநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ” அறுசுவைப் பச்சடி, மாவிலைத் தோரணம், புத்தாடையுடன் உகாதி புத்தாண்டுத் திருநாளைச் (ஏப்.2) சிறப்புடன் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் … Read more

நூல் விலை உயர்வால், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி கடும் பாதிப்பு…

திருப்பூர்: நூல் விலை உயர்வால், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி கடும் பாதிப்படைந்துள்ளது. இதை சரிசெய்ய வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தியாவில் பஞ்சு விலை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. ஏற்கனவே ஜனவரியில் கிலோ பஞ்சுவுக்கு ரூ.30 வரை அதிகரித்துள்ள நிலையில்,  தற்போதுமேலும் உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு கேண்டி (பஞ்சு மூட்டை) விலை (356 கிலோ) ரூ.93,500 ஆக அதிகரித்துள்ளது. அதனால், தமிழக நூற்பாலைகள், பஞ்சு விலை உயர்வு காரணமாக நூல் விலையை உயர்த்தி வருகின்றனர். … Read more

இலங்கையில் அதிபருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்! பதற்றம் – 45 பேர் கைது…

கொழும்பு: கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இலங்கையில், அதிபருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று இரவு,  மிரிஹானவில் உள்ள அதிபர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். இதனால், அந்த பகுதியில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பதற்ற நிலை உருவானது. இதுதொடர்பாக 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால், மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தினசரி 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோல் டீசல் விலை லிட்டர் ரூ.200ஐ … Read more

பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை – நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திப்பேன்! இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணி கட்சி, ஆதரவை விலக்கி கொண்டுள்ளது. இதனால், பெரும்பான்மை இழந்துள்ள இம்ரான்கான் ராஜினாமா செய்ய மாட்டேன், நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வேன் என்றும், தன்னை கவிழ்க்க அமெரிக்கா சதி செய்வதாகவும் கூறியுள்ளார். பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இம்ரான்கான் அரசுமீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி வரும் 3ந்தேதி பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அதன்மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. இதற்கிடையில்,  இம்ரான்கான் … Read more