சன்னலுக்கு வெளியேதான் உலகம் இருக்கிறது! அதனை உங்கள் திறமையினால் புதுமைப்படுத்துங்கள்! ஆசிரியர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை: சன்னலுக்கு வெளியேதான் உலகம் இருக்கிறது என்று அதனை உங்கள் திறமையினால் செழுமைப்படுத்துங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  டிவிட் மூலம் ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். தொடர்ந்து டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றிற்கு நேரடியாக சென்று, அங்குள்ள நிகழ்வுகளை கேட்டறிந்தார். அப்போது ஸ்டாலின் உடன் டெல்லி முதல்வர்கெஜ்ரிவால், துணைமுதல்வர் சிசோடியா, அன்பில் மகேஷ் உள்பட பலர் சென்றனர். தொடர்ந்து டெல்லியில் … Read more

ஜிஎஸ்டி வரலாற்றில் முதன்முறையாக மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக உயர்வு!

டெல்லி: ஜிஎஸ்டி வரலாற்றில் முதன்முறையாக,  இதுவரை இல்லாத அளவ  மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில், சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2017ம் ஆண்டு ஜூலை 1ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. அன்றுமுதல் இன்று வரை, சாமானிய மக்களின் வயிற்றில் அடித்து, தொடர்ந்து வசூலை வாரிக் கொண்டிக்கொண்டிருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சற்று வரி வசூல் குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. கடந்த … Read more

தெலுங்கு, கன்னட வருடபிறப்பு: முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து…

சென்னை: தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் வாழும் தெலுங்கு, கன்னட மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதுபோல எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான இபிஎஸ்,ஓபிஎஸஸ்சும் உகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உகாதி திருநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ” அறுசுவைப் பச்சடி, மாவிலைத் தோரணம், புத்தாடையுடன் உகாதி புத்தாண்டுத் திருநாளைச் (ஏப்.2) சிறப்புடன் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் … Read more

நூல் விலை உயர்வால், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி கடும் பாதிப்பு…

திருப்பூர்: நூல் விலை உயர்வால், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி கடும் பாதிப்படைந்துள்ளது. இதை சரிசெய்ய வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தியாவில் பஞ்சு விலை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. ஏற்கனவே ஜனவரியில் கிலோ பஞ்சுவுக்கு ரூ.30 வரை அதிகரித்துள்ள நிலையில்,  தற்போதுமேலும் உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு கேண்டி (பஞ்சு மூட்டை) விலை (356 கிலோ) ரூ.93,500 ஆக அதிகரித்துள்ளது. அதனால், தமிழக நூற்பாலைகள், பஞ்சு விலை உயர்வு காரணமாக நூல் விலையை உயர்த்தி வருகின்றனர். … Read more

இலங்கையில் அதிபருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்! பதற்றம் – 45 பேர் கைது…

கொழும்பு: கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இலங்கையில், அதிபருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று இரவு,  மிரிஹானவில் உள்ள அதிபர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். இதனால், அந்த பகுதியில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பதற்ற நிலை உருவானது. இதுதொடர்பாக 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால், மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தினசரி 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோல் டீசல் விலை லிட்டர் ரூ.200ஐ … Read more

பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை – நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திப்பேன்! இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணி கட்சி, ஆதரவை விலக்கி கொண்டுள்ளது. இதனால், பெரும்பான்மை இழந்துள்ள இம்ரான்கான் ராஜினாமா செய்ய மாட்டேன், நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வேன் என்றும், தன்னை கவிழ்க்க அமெரிக்கா சதி செய்வதாகவும் கூறியுள்ளார். பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இம்ரான்கான் அரசுமீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி வரும் 3ந்தேதி பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அதன்மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. இதற்கிடையில்,  இம்ரான்கான் … Read more

#தன்_வினை_தன்னைச்சுடும்!

நெட்டிசன் திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு… #இலங்கை_பயணக்குறிப்புகள்_13 #தன்_வினை_தன்னைச்சுடும் —————————————————— “தன்வினை தன்னைச் சுடும்” என்று என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் கவனித்த வகையிலேயே, சமீபமாக நான் உணர்ந்தேன். இலங்கையில் இறுதிப் போரை நடத்தி மக்களைக் கொன்று குவித்த ராஜபக்சே சகோதரனுடைய நிலைமை இன்றைக்கு மிகவும் மோசமாக இருக்கிறது. அதிபர் மாளிகையை நோக்கியே மக்கள் திரண்டு விட்டனர் நேற்று இரவு. இது எப்படி என்றால், பிரஞ்சுப் புரட்சியில் மேரி அண்டாய்னட்டே எதிர்நோக்கி மக்கள் சென்றது போல, … Read more

டெல்லியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மற்றும் தலைவர்களுடன் சந்திப்பு – ஆடியோ

டெல்லியில் திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்காக டெல்லியில் முகாமிட்டு உள்ள  முகாமி தமிழக முதல்வர் ஸ்டலின், அங்கு சோனியா காந்தி மற்றும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து, தமிழக தேவைகள் குறித்தும் மனு கொடுத்தார். அத்துடன் கட்சி பேதமின்றி அனைத்து கட்சித் தலைவர்களையும்  திமுக அலுவலகம் திறப்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். https://patrikai.com/wp-content/uploads/2022/04/Pari-Audio-2022-04-01-at-12.01.52-PM.ogg

மது அருந்துபவர்கள் மகா பாவிகள்! பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

பாட்னா: மது அருந்துபவர்கள் மகா பாவிகள், மகாத்மா காந்தி சொன்னதை கேட்காதவன் மகா பாவி அவர்கள் இந்தியர்களே அல்ல,  பீகார் முதல்வர் நிதிஷ் குமார் காட்டமாக விமர்சித்துள்ளார். பீகார் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மதுவிலக்கு மற்றும் கலால் சட்டம்,  அமல்படுத்தப்பட்டது. இருந்தாலும் அங்கு மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் உள்ளது. திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெறுவதும், அதை குடிக்கும் பலர் கைது செய்யப்படு வதும் வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், பீகார் சட்டப்பேரவையில்  நேற்றுமதுவிலக்கு மற்றும் … Read more

அரசு விரைவு பேருந்தில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி! தமிழகஅரசு

சென்னை: தொலைதூரம் பயணம் செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில், வெளிமாவட்ட பயணங்களுக்கு இருக்கை வசதி, படுக்கை வசதி மற்றும் குளர்சாதன வசதிகளுடன் கூடிய டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில்  படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகளில் பெண்களுக்கு தனிப் படுக்கை வசதி ஒதுக்கி தமிழகஅரசு போக்குவரத்து … Read more