‘அரண்’ இல்லங்கள் : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு…

சென்னை:  சட்டப்பேரவையின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய  அமைச்சர் கீதா ஜீவன் திருநங்கை களுக்கு அரண் இல்லங்கள் அமைக்கப்படும் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- 1.தமிழ்நாட்டில் … Read more

அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள பி ஆர் கவாய்

டெல்லி பி ஆர் கவாய் உச்சநீதிமன்றத்தின் 52 ஆவது தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  சஞ்சீவ் கன்னா, நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாயை அடுத்த தலைமை நீதியதியாக்க பரிந்துரைத்து, அவரது பெயரை மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் பி.ஆர்.கவாய் இந்தியாவின் 52வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவுள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பரில் பதவியேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் வரும் மே … Read more

திடீர் கனமழையால் சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

சென்னை சென்னையில் பெய்த திடீர் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன/ இன்று காலை 10 மணிக்கு மேல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், திடீரென பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மும்பையில் இருந்து 145 பயணிகளுடன், சென்னைக்கு வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஹைதராபாத்தில் இருந்து 160 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ … Read more

பாளையங்கோட்டையில்  மாணவருக்கு அரிவாள் வெட்டு : முத்தரசன் கண்டனம்

சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் பாளையங்கஓட்டையில் மாணவர்கள் இடையே நடந்த அரிவாள் சண்டைக்கும் கண்ட்னம் தெரிவித்துள்ளார். இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ”நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர், தன்னுடன் படிக்கும் சக மாணவரை அரிவாள் கொண்டு வெட்டியதும், அதனைத் தடுக்க வந்த ஆசிரியரையும் வெட்டியிருப்பதுமான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சிறுவர்கள் … Read more

என் மகளுக்கு வரதட்சனை கொடுமை :  நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் புகார்

நெல்லை நெல்லையில் புகழ்பெற்ற இருட்டுக்கடை உரிமையாளர் தன் மகளுக்கு வரதட்சனை கொடுமை  நடப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார். 11900ம் ஆண்டு முதல் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் எதிரில் உள்ள இருட்டுக்கடை, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிஜிலி சிங் குடும்பத்தினரால்,  நடத்தப்படுகிறது. இங்கு ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் எரிவதால் இருட்டுக்கடை என பெயர் வந்தது.  தற்போது இக்கடையை மூன்றாவது தலைமுறையாக கவிதா என்பவர் நடத்தி வருகிறார். இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா மகள் கனிஷ்காவிற்கு கடந்த … Read more

பாஜகவால் முர்ஷிதாபாத் கலவரம் திட்டமிடப்பட்டது : மம்தா பானர்ஜி

கொல்கத்தா பாஜகவால் முர்ஷிதாபாத் கலவரம் திட்டமிடப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். . இன்று கொல்கத்தாவின் தேதாஜி உள் விளையாட்டு அரங்கில்  நடைபெற்ற கூட்டத்தில்  மேற்கு வங்க  முதல்வர் மம்தா பானர்ஜி, “எந்தவொரு கொடூரமான சட்டத்தையும்’ அனுமதிக்க வேண்டாம். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பிரதமர் மோடி கண்காணிக்க வேண்டும். நான் எல்லா மதங்களைப் பற்றியும் பேசுகிறேன். காளி கோயிலை புதுப்பிக்கும்போது பாஜக எங்கே போனது? நாம் துர்கா பூஜையைக் கொண்டாடும்போது, ​​இங்கே மக்களைக் கொண்டாட விடுவதில்லை என்று … Read more

28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை… பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊட்டி மற்றும் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், குடிநீர் பாட்டில், பைகள் அடங்கிய பொருட்கள் … Read more

ரயில்களில் ATM வசதி… இந்திய ரயில்வே புதிய முயற்சி… பயணவழி செலவுக்கு இனி கவலையில்லை… வீடியோ

இந்திய ரயில்வே தனது 172வது நிறைவு விழாவை இன்று கொண்டாடியது, 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி மகாராஷ்டிராவின் போரி பந்தரிலிருந்து தானே வரையில் ரயில் இயக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே தனது 172வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சோதனை அடிப்படையில் ரயிலுக்குள் ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளது. மும்பை-மன்மத் ‘பஞ்சவதி எக்ஸ்பிரஸ்’ ரயிலில் சோதனை அடிப்படையில் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த முயற்சி பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மத்திய ரயில்வேயின் மும்பை தலைமையகம், … Read more

தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப்பள்ளிகள் நாளையுடன் முடிவு!

சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு முழு ஆண்டு  தேர்வுகள்  நாளையுடன் முடிவடையும் நிலையில், நாளை மறுதினம் முதல்  கோடை விடுமுறை தொடங்குகிறது. மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து மே மாதம் இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்கப் பள்ளிகள் அனைத்திற்கும் நாளையோடு (ஏப்ரல் 17) முழு ஆண்டு தேர்வுகள் நிறைவடைகின்றன. இதைத்தொடர்ந்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த மாதம் இறுதிவரை தேர்வுகள் திட்டமிட்டிருந்த நிலையில்,  … Read more

தர்பூசணி பழங்களில் ஊமைக்குத்தாக ரசாயன நிறமி செலுத்தப்படுவதாக கூறுவதில் உண்மையில்லை நீதிமன்றத்தில் அரசு தகவல்

தர்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் கலக்கப்படுவதில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தர்பூசணி பழங்களின் ரசாயன நிறமியை ஊசிமூலம் செலுத்துவதாக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஸ்குமார் கூறியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு தர்பூசணி விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் இதனை ஆய்வு செய்து ரசாயன கலப்பு இல்லை என்பதை உறுதி செய்தனர். இந்த நிலையில் தர்பூசணி உள்ளிட்ட சாமானிய மக்களின் … Read more