இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி பிரதமர் கொல்லப்பட்டதாக தகவல்…

கெய்ரோ: இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி பிரதமர் கொல்லப்பட்டதாக தகவல்  வெளியாகி உள்ளது. “ஏமனில் உள்ள சனா பகுதியில் ஹவுதி பயங்கரவாத ஆட்சியின் இராணுவ இலக்கை துல்லியமாகத் தாக்கியதாக” இஸ்ரேலிய இராணுவம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தது. இந்த தாக்குதலில்   ஹவுதி பிரதமர் அகமது அல்-ரஹாவி மற்றும் பல அமைச்சர்கள் கொல்லப்பட்டதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்தின் பிரதமர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய ஆதரவு ஹவுதிகள் இன்று … Read more

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை தமிழ்நாடு அரசு கைவிட மறுப்பு…

சென்னை:  சென்னையில் 12 நாட்கள் போராட்டம் நடத்திய   தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய ஆண் பெண், வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை தமிழ்நாடு அரசு கைவிட முடியாது என நீதிமன்றத்தில் தொரிவித்து உள்ளது. இந்த வழக்கில், தூய்மை பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களையும் காவல்துறையினர் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு உள்ளதால், இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு கைவிட மறுப்பு தெரிவித்து உள்ளது. இதையடுத்து,  இந்த சம்​பவம் தொடர்​பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலை​மை​யி்ல் ஒருநபர் ஆணை​யம் அமைத்து விசா​ரிக்​கலாம் … Read more

2 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு; உச்சநீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதி பணியிடங்களும் நிரம்பியது….

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்ற நிலையில், உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதி பணியிடங்களும் நிரம்பி முழு பலத்தை எட்டி உள்ளது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வது, பணியிட மாற்றம் செய்வது போன்ற முடிவுகளை, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு எடுக்கிறது. இந்த கொலிஜியத்தில்,   தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும்  மூத்த நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி, பி.வி.நாகரத்னா ஆகியோர் உள்ளனர். இந்த கொலீஜியம் அமைப்பின் கூட்டம், ஆகஸ்டு  25ந்தேதி … Read more

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 ஆக உயர்வு! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விவசாயிகளின் வாழ்வாரத்தை உயர்த்தும் வகையில் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி நெல் கொள்முதல் விலையை தற்போது உயர்த்தி உத்தரவிட்டுள்ள முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி  ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  … Read more

சென்னையில் நாளை விநாயகர் சிலை ஊர்வலம் – பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு…

சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நாளை நீர்நிலைகளில் கரைக்க ஊர்வலமாக செல்லப்பட உள்ளதால், சென்னையின் பல பகுதிகளில்  நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. விநாயகர் சதுர்த்தி ஆகஸ்டு 27ந்தேதி கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையில் மட்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,  , இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சிலைகளை நாளை (ஞாயிறு – ஆகஸ்டு 31) … Read more

ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு? முதல்வர் ஸ்டாலின் அதிருப்தி…

சென்னை:  மத்தியஅரசு அமல்படுத்த உள்ள ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. வரி குறைப்பால் தமிழ்நாடு  தேசிய சராசரியை விட மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது என்று அச்சம் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரியை  மத்திய பாஜக அரசு கொண்டுவரும்போது, அதை எதிர்ப்பதில், முதன்மையாக இருந்த முதல்வர் ஸ்டாலின் தற்போது ஜிஎஸ்டி வரியில் சில சீர்திருத்தம் செய்து, பொதுமக்கள் பயன்படும் வகையில், வரி குறைக்க எடுக்கும் நடவடிக்கைக்கு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.  GST … Read more

ஜெர்மனி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! தமிழ்நாட்டுக்கு பெருமுதலீடுகளை ஈர்க்க செல்வதாக பேட்டி… வீடியோ

சென்னை: தமிழ்நாட்டுக்கு பெருமுதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு  செல்வதாக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து ஜெர்மனி புறப்பட்டார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க  ஒரு வார கால அரசுமுறைப் பயணமாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஜெர்மனி புறப்பட்டார்.  இதையடுத்து இங்கிலாந்து செல்லும் முதல்வர் அங்குள்ள  பிரபலமான   Oxford பல்கலைக்கழகத்தில்  சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கருத்தரங்கில், தந்தை பெரியார் திருவுருவப் படத்தை திறந்து வைக்கிறார். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், அதற்கு … Read more

அரசு ஊழியர்கள் ‘ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட்’ கிடையாது! தமிழ்நாடு அரசு

சென்னை:  ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது என தமிழ்நாடு அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. அதன்படி ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது, அதற்கான விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே  சென்னை உயர்நீதிமன்றம்,  அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வது சரியல்ல, என கூறி, அதை பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு  அறிவுறுத்தி இருந்தது. மேலும்,  ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்வது, ஊழியர்களுக்கு … Read more

50-ஐக்கூட எட்டாமல் எவ்வளவு சாதனைகள் !

50-ஐக்கூட எட்டாமல் எவ்வளவு சாதனைகள் ! மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் பெயர் என்னவோ கிருஷ்ணன்.. ஆனால் அவரிடம் தாண்டவமாடியதோ பகுத்தறிவு. இறை நம்பிக்கையை நேரடியாக இடிக்காமல் மூடநம்பிக்கைகளை சாடவேண்டும், அதே நேரத்தில் எதிராளியின் மனதை புண்படுத்தவும் கூடாது. இப்படியொரு நுட்பமான வழியில் தமிழக மக்களுக்கு பகுத்தறிவை பக்குவமாக ஊட்டியதில், கலைவாணரை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது.. சுயசிந்தனையின் அவசியத்தை திரைப்படங்கள் வாயிலாக அள்ளித் தெளித்தவர், நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன். அதாவது, என்.எஸ் கிருஷ்ணன்.. நாடக கலைஞர்களுக்கு எடுபிடி … Read more

செப்டம்பர் 3 மற்றும் 10 தேதிகளில் வங்கக்கடல் பகுதிகளில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

சென்னை: செப்டம்பர் 3 மற்றும் 10 தேதிகளில் வங்கக்கடல் பகுதிகளில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் சூறாவளி காற்று விச வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. தென்கிழக்கு மத்திய பிரதேசம், அதனை ஒட்டிய வங்கங்கக்கடல்  பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த நிலையில்,  அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு  இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல … Read more