ஓபிஎஸ் உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு… அரசியல் பரபரப்பு…

கோவை: கோவையில்   நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக உள்ள நிலையில், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் உள்பட சில தலைவர்கள், தவெக, திமுக என மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும்‘ கூறிய  செங்கோட்டையனை கட்சியின் பொதுச்செயலாளர் செங்கோட்டையில், நீக்கிய நிலையில், … Read more

கோவா கேளிக்கை விடுதி தீ விபத்தில் 25 பேர் பலி: இது கொலை என குற்றம் சாட்டுகிறார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி…

டெல்லி: கோவா கேளிக்கை விடுதி ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர  தீ விபத்தில் 25 பேர் பலியாகி உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது விபத்து அல்ல   கொலை என எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான  ராகுல்காந்தி. குற்றம் சாட்டி  உள்ளார். கோவா தீ விபத்து விவகாரம் அரசியலாக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கோவா மாநில அரசை கடுமையாக சாடி உள்ள ராகுல்காந்தி,  இதற்கு காரணம் மாநில பாஜக அரசு என்றும், இது விபத்து … Read more

தேசிய நீர் விருதுகளை முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர் மாவட்ட ஆட்சியர்கள்!

சென்னை: தேசிய நீர் விருதுகளை   பெற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள், முதல்வர் ஸ்டாலினிடம் விருதுகளை  காண்பித்து வாழ்த்து பெற்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (8.12.2025) தலைமைச் செயலகத்தில், ஒன்றிய அரசின் தேசிய நீர் விருதுகள், நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள் ஆகிய விருதுகளை பெற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப், இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ.ஆ.ப., நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி, இ.ஆ.ப., … Read more

எஸ்ஐஆர் குறித்து விவாதம்: மக்களவையில் நாளை தொடங்கி வைக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

டெல்லி: மக்களவையில் நாளை எஸ்ஐஆர் குறித்து விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதத்தை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் எஸ்ஐஆர் நடவடிக்கைகளை  எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருவதுடன், அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என  நாடாளுமன்றத்தை வலியுறுத்தி வருகின்றனர். அதைததொடர்ந்து,  எஸ்ஐஆர் குறித்து  நாளை (டிசம்பர் 9ந்தேதி)  விவாதிக்கப்படும் என சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி அளித்தார். அதன்படி நாளை மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் … Read more

கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து வாடும் நான்கு குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:  கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து வாடும் நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு  அவர்களை சென்னை வரவழைத்து, அவர்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.12.2025) தலைமைச் செயலகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்களை இழந்த நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு, பணிநியமன ஆணை, அன்புக்கரங்கள் திட்டத்தின் … Read more

கேரளத்தை உலுக்கிய நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: நடிகர் திலீப் விடுதலை!

திருவனந்தபுரம்: கேரளத்தை உலுக்கிய நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என கூறப்பட்ட நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். அவர்மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என கூறி நீதிபதி திலிப் மற்றும் அவரது நண்பரை விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளார். எட்டு ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பிறகு,  இன்று  (டிசம்பர் 8, 2025) எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிபதி ஹனி எம். வர்கீஸ், திலீப்பை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றங்களிலிருந்து விடுவித்தார். திலீப் … Read more

சென்னை மெரினா அருகே பயங்கரம்! தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் உடல்…

சென்னை:  பொதுமக்கள் வந்து செல்லும் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில்  பெண் உடல் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மெரினா கடற்​கரை​யில் உள்ள அண்ணா சதுக்கம் பின்​புறம் கல்​லுக்​குட்டை என்ற பகுதி உள்​ளது. இந்த பகு​தி​யில் விபச்சாரம் உள்பட சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த பகுதியில்,  35 வயது மதிக்​கத்​தக்க பெண் ஒரு​வரது … Read more

“எப்படி பந்து வீசினாலும் சிக்ஸர் அடிப்போம்…”! மதுரையில் ஸ்டாலின் பேச்சு…

மதுரை: “எப்படி பந்து வீசினாலும் சிக்ஸர் அடிப்போம்…” மதுரையில்  நடைபெற்ற அரசு விழாவில்   பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறினார். மதுரை,  உத்தங்குடியில் நடந்த அரசு விழாவில் ரூ.2,630.88 கோடியில் 63 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, ரூ.17.18 கோடியில் 7 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 1,77,562 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் நலத்திட்ட … Read more

நடிகை காஞ்சனா குறித்த சர்ச்சை பதிவு… தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் காந்தி கண்ணதாசன் வேண்டுகோள்…

’60 – ’70-களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை காஞ்சனா. இவர் கடந்த 4ம் தேதி, ஏவிஎம் சரவணன் மறைவிற்கு ஆட்டோவில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார். முன்னணி நடிகையாக இருந்த காஞ்சனா ஆட்டோவில் வந்தது குறித்து சமூக வலைதளத்தில் பலரும் பலவிதமாக தவறான தகவல்களை எழுதினர். இதற்கு கவிஞர் கண்ணதாசன் மகன் காந்தி கண்ணதாசன் மறுப்பு தெரிவித்துள்ளதோடு இது போல் தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று … Read more

செங்கோட்டையன் செல்லாக்காசு! ததக தலைவர் பழ.கருப்பையா விமர்சனம்…

 சென்னை: தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையன்கள் எல்லாம் செல்லாக்காசாகி விடுவார்கள்!”  என தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் (ததக) தலைவர் பழ.கருப்பையா  விமர்சனம் செய்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கை தமிழக அரசியல் கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ள நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தேவையற்ற அரசியல் செய்து, மக்களிடையே மதவெறுப்பை  ஏற்படுத்தவும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என பல கட்சிகள் அரசியல் செயலாற்றி வருகின்றன. இதற்கிடையில், புதிதாக … Read more