கருணாநிதி கல்லறை மீது கோவில் கோபுரம் அலங்கரிப்பு! அமைச்சர் சேகர்பாபுவுக்கு பாஜக, அதிமுக கடும் கண்டனம்..

சென்னை:  மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வ கருணாநிதி கல்லறை மீது கோவில் கோபுரம் அலங்கரிப்பு செய்யப்பட்டு இருப்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இன்று பேரவையில் அறநிலையத்துறை மானிய கோரிக்கையையொட்டி,  அமைச்சர் சேகர்பாபு தரப்பில், கருணாநிதியின் கல்லறை மேல் பூங்களால் கோவில் கோபுரம் போன்று அமைத்து அடாடவடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு  பாஜக, அதிமுக உள்பட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கருணாநிதியின் சமாதியில் கோவில் கோபுரத்தை வரைந்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது, ஓட்டு மொத்த … Read more

ஆளுநர் ஆர் என் ரவியின் திடீர் டெல்லி பயணம்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி திடீர் என டெல்லி சென்றுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் அவருடைய தனி செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி, வரும் 20ம் தேதி மூலமாக சென்னைக்கு திரும்புகிறார். கவர்னர் ரவி,மத்திய அரசின் அவசர அழைப்பின்பேரில் டெல்லி சென்றுள்ளதாகவும் அவர் அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களை சந்தித்து பேசுவார் … Read more

சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிய உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தி.க. கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.பொன்முடியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணைப்பொதுசெயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆயினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார். எதிர்க்கட்சிகள் அநாகரிகமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க … Read more

தடைக்கால  உத்தரவை மீறி மீன் பிடித்தால் நிவாரண தொகை நிறுத்தம்

புதுச்சேரி புதுச்சேரியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மீன்பிடி தடைக்கால உத்தரவை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”புதுச்சேரி அரசு, சார்பு செயலர் அவர்களின் 10.04.2025 தேதியிட்ட அறிவிப்புபடி , கடல்சார் மீன்வளங்களை நீண்ட காலத்திற்கு நிலைநிறுத்தும் வகையில் பாதுகாத்திட 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் நாள் முதல் ஜூன் மாதம் 14-ஆம் நாள் வரையிலான கால அளவில் 61 நாட்கள் (இரு நாட்களும் … Read more

திடீர் என திருச்செந்தூரில் கடல் உள் வாங்கியதால் பரபரப்பு

திருச்செந்தூர் திடீரென திருச்செந்தூரில் கடல் உள் வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், முந்திய நாட்கள், பிந்திய நாட்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும், பின்னர் மாலையில் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. இன்று, திருச்செந்தூரில் கடல் நீர் திடீரென உள்வாங்க தொடங்கியது. சுமார் 100 அடி தூரம் கடல் நீர் உள்வாங்கியதால் பாசி படர்ந்த … Read more

நில மோடி தொடர்பான ‘மூடா’ வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு பதில் அளிக்க சித்தராமையாவுக்கு நீதிமன்றம் உத்தரவு…

பெங்களூரு: முடா  நிலம் ‘மோசடி’ வழக்கை சிபிஐ விசாரணைக்கு  மாற்றக் கோரிய மனுவை விசாரித்த   கர்நாடக உயர்நீதிமன்றம் முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது  முடா நில ஒதுக்கீட்டு ஊழல் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பி.எம். பார்வதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கை லோக்ஆயுக்தா போலீசாரிடமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற  மனுதாரரின்  கோரிக்கையை லோக் ஆயுக்தா நீதிமன்றம்  … Read more

ஒரே நாளில் ரூ.840 உயர்வு: புதிய உச்சத்தை நோக்கி பறக்கிறது தங்கத்தின் விலை…

சென்னை: நடுத்தர மக்களின் ஆபாந்தவனாக இருந்து வரும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் தினசரி உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் சரவனுக்கு ரூ.840 உயர்ந்து புதிய உச்சத்தை நோக்கி சென்றுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது சாமானிய மக்களிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், 2025ம் ஆண்டு பிறந்தது முதல் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. சவரன் ரூ.55 ஆயிரம் முதல் … Read more

உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்புத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டால் சட்டமன்றம், நாடாளுமன்றம் எதற்கு? கேரள கவர்னர்

திருவனந்தபுரம்: மசோதாக்கள் குறித்து நீதிமன்றமே முடிவு செய்தால் நாடாளுமன்றம், சட்டப்பேரவை எதற்கு?- என கேரள ஆளுநர் கேள்வி எழுப்பி உள்ளார். பல்கலைக்கழக வேந்தர் மற்றும் துணைவேந்தர் தொடர்பான 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் சிறப்பு பிரிவின் கீழ் ஒப்புதல் வழங்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கவர்னரின் அதிகாரத்தை குறைத்தது மட்டுமின்றி, குடியரசு தலைவருக்கும் கெடு விதித்த்துள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய மத்தியஅரசு அவசர சட்டம் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், … Read more

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மே 6ந்தேதி இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி அமைச்சர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், எம்.பி.எம்எஎல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம், வழக்கின் விசாரணைக்கு ஆஜராக அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலணியில் உள்ள … Read more

திமுகவின் 4ஆண்டுகால ஆட்சியில் 19 என்கவுண்டர்கள்! 75 சமூக இயக்கங்கள் கண்டனம்…

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த இந்த 4 ஆண்டுகளில் 19 என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய 75 இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. “திமுக ஆட்சியில் நடந்த 19 என்கவுண்டரில் 21 பேர் கொல்லப்பட்டதாகவும், கைது செய்தபின்பு குற்றவாளிகளை போலீசார் சுட்டுக்கொல்வது அதிகரிப்ப தாகவும்”  அதிகார திமிருடன் இந்த என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளதாகவும், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் என்று குற்றம்சாட்டி,  பல்வேறு அமைப்புகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் 75 … Read more