பெசன்ட் நகர்  வேளாங்கண்ணி  மாதா கோவில் பொன்விழா! சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை  பெசன்ட் நகர்  கடற்கரை அருகே அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில்,  சென்னையின் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா 2025, வருகின்ற 29.08.2025 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி 08.09.2025 தேதி வரை திருவிழா நடைபெற … Read more

‘சமையல் புகழ்’ மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் அவரது காதலி ஜாய் கிரிசில்டா ‘கற்பழிப்பு’ புகார்….

சென்னை:  விஜய் டிவியில் நடைபெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்குபெற்றுள்ள  மாதம்பட்டி ரங்கராஜ்மீது அவரது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா  என்பவர் சென்னை மாநகர காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை காதலித்து  வந்த நிலையில், திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கியதாக குற்றம் சாட்டி உள்ளார்.   சமையல் கலைஞராக கொடிகட்டி பறந்த  மாதம்பட்டி ரங்கராஜ், மேலும் புகழாசையில்,   விஜய் டிவியின் குக் வித் கோமாளியின் நடுவராக கலந்துகொண்டது மூலம் … Read more

அன்பில் மகேஷ் வெளியிட்டது திரிக்கப்பட்ட தகவல்: அரசுப் பள்ளி மாணவர்கள் 28பேர் ஐஐடியில் சேருவது குறித்து அன்புமணி குற்றச்சாட்டு…

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் 28பேர் ஐஐடியில் சேர இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருப்பது,  திரிக்கப்பட்ட தகவல் என்றும், திராவிட மாடல் அரசின் பொய்களுக்கு அளவே இல்லையா? என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார்.  அரசுப் பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியில் சேர்ந்தனர் என்பது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும். பொய்களை பரப்பும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் … Read more

லண்டன் ஜெர்மனி பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலினின் 10நாட்கள் வெளிநாடு பயண விவரங்கள் வெளியீடு…

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் லண்டன் ஜெர்மனி பயண விவரங்கள் வெளியாகியுள்ளது.  தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க  முதல்வர் ஸ்டாலின் 10 நாள் பயணமாக வெளிநாடுகளுக்கு செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்ள, 5ஆம் முறையாக வெளிநாடு செல்கிறார். இந்த முறை லண்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு 10 நாட்கள் செல்ல உள்ளார். வரும்   30ஆம் தேதி (ஆகஸ்டு 30) சென்னையில் இருந்து  கிளம்பும் முதல்வர் ஸ்டாலின், செப்டம்பர் 8ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முதலீடுகளை … Read more

மாணவர்களிடையே கோஷ்டி மோதல்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடல்…

நெல்லை: மாணவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதன் காரணமாக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.  மறு உத்தரவு வரும் வரை பல்கலைக்கழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பகுதியில்,  நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக வளாகம் உள்ளது.  இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மோட்டார் சைக்கிள்களில் வரும் மாணவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக பல்கலைக்கழகம் நுழைவாயில் அருகில் அனைத்து வாகனங்களுக்கும் … Read more

நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூத்த கம்யூனிஸ்டு தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். 100 வயதாகும், இ. கம்யூ கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஒய்வு எடுத்து வருகிறார். இவர் கடந்த வாரம்  (, கடந்த 22ம் தேதி,) திடீரென வீட்டில் வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால்,  தலையில் காயம் ஏற்பட்டது. … Read more

ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் பெரியாரின் படத்தை திறந்து வைக்கிறேன்! திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் பெரியாரின் படத்தை திறந்து வைக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக எம்.பி. குடும்ப திருமண விழாவில் பேசும்போது தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்க்கும் நோக்கில் 10 நாள் பயணமாக  இங்கிலாந்து, ஜெர்மனி செல்கிறார்.  இந்த நிலையில், தி.மு.க எம்.பி என்.ஆர் இளங்கோ இல்ல திருமண விழாவில்  கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  , தமிழ் சமூகங்ததை தலைநிமிர செய்தத தந்தை பெரியாரின் திருவுருவ படத்தை இங்கிலாந்தின்  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் … Read more

சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் அதனை தாங்கும் திறன் உள்ளது! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் அதனை தாக்கும் திறன் மாநகராட்சிக்கு உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும், சென்னையில் 3081 மழை நீர் வடிகால்வாய்கள் உள்ளன அதன்மூலம் மழைநீர் வெளியேறிவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்கு கடந்த 4 ஆண்டுகளில் செலவு செய்த தொகை 4000 கோடி ரூபாய்க்கு மேல் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜுலை மாதம் செய்தியாளர்களிடம் பேசிய அப்போதைய மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன், … Read more

ஆளுநர் சூப்பர் முதல்வராக செயல்பட முடியாது! உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதம்

டெல்லி:   மாநில அரசு இயற்றும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும்,  சூப்பர் முதல்வராக ஆளுநர் செயல்பட முடியாது  என்றும், மாநில நிர்வாகத்தின் மீது ஆளுநருக்கு ஆதிக்கம் செலுத்தும் பதவி இருக்க முடியாது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆளுநர் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைப்பது சட்டமன்றத்தை செயலிழக்கச் செய்யும்  என காலக்கெடு தொடர்பான ஜனாதிபதி  முர்மு எழுப்பியுள்ள கேள்விகள்மீதுஉச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு  விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  … Read more

பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கு டிச.31ம் தேதி வரை நீட்டிப்பு! மத்திய அரசு உத்தரவு!!

டெல்லி : பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு அளிக்கப்பட்டுள்ள தற்காலிக விலக்கு டிசம்பர்.31ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கை மத்திய அரசு டிசம்பர் 31, 2025 வரை நீட்டித்துள்ளது. இந்திய ஜவுளித் துறைக்கு பருத்தி கிடைப்பதை அதிகரிக்க, மத்திய அரசு ஆகஸ்ட் 19, 2025 முதல் செப்டம்பர் 30, 2025 வரை பருத்திக்கான இறக்குமதி வரியை தற்காலிகமாக விலக்கு அளித்துள்ளது. அமெரிக்காவின் 50% வரி அமலுக்கு வந்ததுள்ள … Read more