அம்பேத்கர் நினைவு நாள்: நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

சென்னை: அம்பேத்கர்  நினைவு நாளையொட்டி,   நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.   இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை அம்பேத்கரின் 70 ஆவது நினைவு நாள் இன்று (டிச.6) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார். நாடாளுமன்றத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு கீழே … Read more

கார்த்திகை தீபத்தின் புனித தருணம் திருடப்பட்டுவிட்டது – தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு நீதி கிடைக்கவில்லை! பவன் கல்யாண்

சென்னை:  திமுக அரசு, நீதிமன்ற தீர்ப்பை மீறி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், மதுரையில் இந்துக்களுக்கு நீதி கிடைக்கவில்லை”, கார்த்திகை தீபத்தின் புனித தருணம்  திருடப்பட்டுவிட்டது  என ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் கண்டனம் தெரிவித்து உள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில், நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பே காவல்துறையை குவித்து, தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்திய தமிழநாடு அரசின் நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளதுடன், தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் இரு முறை உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாக திமுக  அரசின்  ஆவணம் இந்து … Read more

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்! பள்ளி கல்வித்துறை அறிக்கையால் பெற்றோர்கள் ஆசிரியர்கள் குழப்பம்…

சென்னை: சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில்,  பெற்றோர்கள், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மழலையர் பள்ளிகள், தொடக்க பள்ளிகள் செயல்படுமா என்பது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுவாக இதுபோன்ற காலக்கட்டங்களில், மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் மட்டுமே செயல்படும் என்றும்,  மழலையர் பள்ளிகள், தொடக்க பள்ளிகளுக்கு   விடுமுறை விடப்பட்டு வருவதால், இன்றும் விடுமுறையா என பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். டிட்வா புயல் காரணமாக, பெய்து வந்த … Read more

ஸ்ரீபெரும்புதூர் அருகே கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைக்கப்பட்டுள்ள  கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின்  திறந்து வைத்தார். இந்த தொழிற்சாலை மூலம், 830 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கம், சிப்காட் தொழிற்பூங்காவில் இன்று (டிச. 5) பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவியுள்ள உற்பத்தி தொழிற்சாலை இன்று திறக்கப்பட்டது. ‘ ரூ.1003 கோடி முதலீட்டில் 830 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்  இந்த தொழிற்சாலையில்,  கண்ணாடி உற்பத்தி  செய்யப்பட உள்ளது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கார்னிங் … Read more

திருப்பரங்குன்றம் சர்ச்சை: சிஐஎஸ்எஃப் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாது குறித்து,  சிஐஎஸ்எஃப், தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர்நீதி மன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணை வரும்12ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றக் கிளையில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் தொடங்கியது. இன்றைய விசாரணைக்கு, அப்போது மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் நேரில் ஆஜராகவில்லை என மனுதாரர் தரப்பில் முறையீடு … Read more

தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 பேர் படுகொலை! அன்புமணி குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 பேர் படுகொலை  நடைபெற்று வருகிறது,   காவல் நிலையத்தில் புகுந்து காவலர் வெட்டி கொல்லப்படுகிறது என்று தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி,  திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு எங்கே போகிறது?  என கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக,   பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் புறக்காவல் நிலையத்திற்குள் நேற்றிரவு நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கு பணியில் இருந்த தலைமைக் … Read more

550 விமானங்கள் ரத்து… இண்டிகோ விமான நிறுவனம் தத்தளிக்கக் காரணமென்ன ?

இந்தியாவில் விமான போக்குவரத்து கடும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளது, இண்டிகோ விமான நிறுவனம் கடந்த 4 நாட்களாக முழுஅளவில் செயல்படமுடியாமல் தத்தளித்து வருகிறது. நேற்று 330 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று 550 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, இதனால் விமான பயணிகள் தாங்கள் பயணம் செய்யவிருக்கும் விமானம் இன்று பறக்குமா இல்லையா என்ற குழப்பத்தில் உள்ளனர். அப்படியே பறந்தாலும் அது சரியான நேரத்துக்கு தரையிறங்குமா என்பதும் தாங்கள் கொண்டு சென்ற லக்கேஜ் சரியாக வந்து சேருமா என்பதும் … Read more

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாக பிரவீன் சக்ரவர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை – AICC முடிவு…

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாகக் கூறி, தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் மற்றும் தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. மேலும், தமிழக அரசியல் குறித்து ராகுல் காந்திக்கு அவர் தவறான தகவல்களை அளித்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓழுக்கு நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யின் தவெக கட்சியில் சேர பேச்சுவார்த்தை … Read more

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன்! ஓபிஎஸ்…

சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றுசேர்வதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன் என டெல்லியில் இருந்து திரும்பி ஓ.பன்னீர் செல்வம் கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள் இன்று மாநிலம் முழுவதும் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது நினைவு நாளையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்த்நது, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார். பின்னர்,  செய்தியாளர்களை சந்தித்தபோது,  மத்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷாவை … Read more

கோவளத்தில் நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி!!

சென்னை : கோவளத்தில் சென்னையின் 6வது நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே  சென்னையின் குடிநீர் தேவைக்காக  சென்னையின் புறநகர் பகுதியான, கோவளத்தில் ரூ. 471 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு அரசின்  நீர்வளத்துறை ஒப்பந்தம் கோரி இருந்த நிலையில், தற்போது அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த புதிய நீர்த்தேக்கமானது,   ரூ.471 கோடியில் 4,375 ஏக்கரில் அமைய உள்ளது. இங்கு  1.6 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கமாகும்.   இதன்மூலம்,  … Read more