டிசம்பர் 5ந்தேதி ரோடு ஷோ : புதுச்சேரி அரசிடம் அனுமதி கோரி தவெக கடிதம்…

சென்னை: டிசம்பர் 4ந்தேதி புதுச்சேரியில்  தவெக தலைவர்  விஜய் ரோடு ஷோவுக்கு  அனுமதி கேட்டு அம்மாநில  டி.ஜி.பி.யிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. வருகிற டிசம்பர் 5 தேதி நடிகர் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் ஆனந்த் புதுச்சேரி காவல்துறை இயக்குனருக்கு கடிதம் அளித்துள்ளார்/ தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 2026  ஏப்ரல் , மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் களமிறங்குவதாக … Read more

“தந்தையாக மட்டுமல்ல தலைவனாகவும் மகிழ்ச்சி! மகன் – துணைமுதல்வர் உதயநிதி பிறந்தநாள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை: “தந்தையாக மட்டுமல்ல தலைவனாகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என, தனது மகன்  மற்றும்  துணைமுதல்வர் உதயநிதி பிறந்தநாள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  நெகிழ்ச்சியுடன் பாராட்டி உள்ளார். இளைஞரணிச் செயலாளராக, விளையாட்டுத்துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும் போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார். தி.மு.கழக இளைஞரணிச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகவும் விளங்கும் உதயநிதி ஸ்டாலின், தனது 49ஆவது பிறந்தநாளையொட்டி, நாளின் தொடக்கத்தில் … Read more

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு இன்று மாலை ‘டிட்வா’ புயலாக மாறும்! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு இன்று மாலை டிட்வா புயலாக மாறும்  என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. இதன்காரணமாக  நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.  திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை 28ம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை மிக கனமழை … Read more

இந்தோனேசியா அருகே சுமத்தா தீவில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்… பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்…

இந்தோனேசியா அருகே சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானதால், அண்டை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், நிலநடுக்கத்திற்குப் பிறகு, நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான “எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் அருகே இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது.  இந்த நிலநடுக்கமானது,  இந்தோனேசியாவின் சினாபாங்கிலிருந்து 58 கி.மீ வடமேற்கு தொலைவில் 27 கி.மீ … Read more

2025ம் ஆண்டிற்கான “குழந்தைகள் நலன் சேவை விருதுகள், அறநிலையத்துறை சார்பில் 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின, 2025ம் ஆண்டிற்கான “குழந்தைகள் நலன் சேவை விருதுகள் வழங்கியதுடன்,  அறநிலையத்துறை சார்பில் 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்… அறநிலையத்துறை சார்பில் ரூ.79.94 கோடி மதிப்பீட்டிலான 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 20 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து,   சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்கள் … Read more

தமிழக்தில் புதிதாக ஒருவர் வேண்டும்’ என மக்கள் நினைக்கிறார்கள்! செங்கோட்டையன் பேட்டி

சென்னை: தமிழக்தில் புதிய மாற்றம் வேண்டும்  என்றும்,  தமிழக்தில் புதிதாக ஒருவர் வேண்டும்’ என மக்கள் நினைக்கிறார்கள் என்று  தவெகவில் இணைந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து குறிப்பிட்டுள்ளார். 2026ல் தமிழ்நாட்டில் மக்களால் மாபெரும் புரட்சி உருவாகும் என்றும் இன்று தவெகவில் இணைந்த  முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். அதிமுக பொதுச்செயலளரான எடப்பாடி பழனிச்சாமி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து … Read more

விவசாயிகள் முதுகில் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்

சென்னை: விவசாயிகள் முதுகில் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி, அவரது யோக்கியதையை நாடறியும் என  அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். நெல் ஈரப்பத்துடன் கொள்முதல் செய்ய மத்தியஅரசு மறுத்த நிலையில், அதுகுறித்து அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசை கடுமையாக சாடியிருந்தார். இதையடுத்து அவருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ஈரோட்டில் பேசிய முதலமைச்சருக்குப் பதில் சொல்ல முடியாமல், எக்ஸ் தளத்தில் கிறுக்கிக் கொண்டிருக்கும் அடிமை பழனிசாமி, வழக்கம் போலவே உளறிக் … Read more

தவெகவில் செங்கோட்டையன்! எடப்பாடி பழனிசாமி ‘கடுப்பு’

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், அது பற்றிய  செய்தியாளரின்  கேள்விக்கு,  பதில் கூறிய எடப்பாடி பழனிச்சமி, அதை  அவரிடமே கேளுங்கள் என கடுப்படித்தார். அதேவேளையில், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்திருப்பது தற்கொலைக்கு சமம்  முன்னாள் அதிமுக அமைச்சர்  செம்மலை விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது தமிழக அரசியலில் இன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது . பனையூரில் … Read more

ஒசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசகர்களை தேர்ந்தெடுக்க டென்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: ஒசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் வகையில்,  தமிழ்நாடு அரசு டென்டர் கோரி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 27ந்தேதி  நடைபெற்ற பேரவை கூட்டத்தொடரில் விதி 110ன் கீழ்  ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் மற்றும்  திருச்சியில் ‘கலைஞர் நூலகம்’ அமைக்கப்படும் என்று  அறிவித்தார். அபபோது,  ஓசூர் நகரத்திற்கான பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு அது நிறைவடையும் நிலையில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி மையமாக ஓசூரை உருவாக்க … Read more

இந்தியா அனைவருக்குமானது: இந்திய அரசியலமைப்பு நாளில் முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: இன்று இந்திய அரசியலமைப்பு நாள். இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் அரசியலமைப்பு தினம், சம்விதன் திவாஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது, இது ஆண்டுதோறும் நவம்பர் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது. அதன்படி  நாடு முழுவதும் இன்று இந்திய அரசியலமைப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின்  தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா அனைவருக்கும் சொந்தமானது, ஒரு குறிப்பிட்ட கலாசாரம், சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல. இந்த … Read more