காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

மதுரை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ காவல்துறையினர்  மதுரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.  ஆகஸ்டு 20ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், முதல்கட்ட குற்றப்பத்திரிகயை சிபிஐ இன்று தாக்கல் செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் … Read more

‘போலீஸ் ராஜ்ஜியமாக நாட்டை மாற்றுவதற்கான சதி’ பிரதமர்-முதல்வர் மற்றும் அமைச்சர்களை நீக்கும் மசோதா குறித்து ஓவைசி பேச்சு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று மூன்று முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்தினார், இது குறித்து நாடாளுமன்றத்திற்குள் காரசாரமான விவாதமும் கூச்சலும் ஏற்பட்டது. இதில் அரசியலமைப்பு (130வது திருத்தம்) மசோதா 2025, யூனியன் பிரதேச ஆட்சி (திருத்தம்) மசோதா 2025 மற்றும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா 2025 ஆகியவை அடங்கும். இந்த மசோதாக்களின் கீழ், பிரதமர், முதல்வர் அல்லது எந்தவொரு அமைச்சரும் கடுமையான குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டால், அவர்களை பதவியில் இருந்து நீக்க … Read more

திண்டுக்கல் தென்காசி உள்பட 10 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை…

சென்னை: திண்டுக்கல் தென்காசி உள்பட 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். இது அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக பிரமுகர் திருபுவனம்  ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்பட 10 இடங்களில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் இன்று திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, வேடச்சந்தூர் உள்ளிட்ட … Read more

துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மண்டலம் V (ராயபுரம்) மற்றும் VI (திரு. வி. கா. நகர்) ஆகியவற்றில் துப்புரவுப் பணிகளை தனியார்வசம் ஒப்படைக்க கடந்த ஜூன் 16ம் தேதி சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. மாநகராட்சியின் இந்த முடிவை எதிர்த்து துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி … Read more

மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த முறையில் 2192 ஓட்டுனர், நடத்துனர்கள் நியமனம்! அன்புமணி கண்டனம்..

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த முறையில் 2192 ஓட்டுனர், நடத்துனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது,  மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை மறைமுகமாக தனியார் மயமாக்கும் திமுக அரசின்  நடவடிக்கை என்று பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில்  வெளியிட்டுள்ள  பதிவில், “சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1020 ஓட்டுனர்களும், 1172 நடத்துனர்களும் தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் நியமிக்க படவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் … Read more

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், சின்னமலை ராஜீவ்காந்தி திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பாரத ரத்னா அமரர் ராஜீவ் காந்தி அவர்களது பிறந்த தினமான இன்று 20.08.2025 நாடு முழுவதும் காங்கிரசாரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவை போற்றும் வகையில், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுக்கூட்டங்களும் நடைபெறுகின்றன. அமரர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாளையொட்டி, டெல்லியில் உள்ள வீர் சக்ரா … Read more

டெல்லியில் பரபரப்பு – பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றபோது முதலமைச்சர் ரேகா குப்தா மீது இளைஞர் சரமாரித் தாக்குதல்

டெல்லி : டெல்லியில் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக முதலமைச்சர் ரேகா குப்தா மீது இளைஞர்  ஒருவர் சரமாரித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் இன்று காலை  தனது வீட்டில்  நடைபெற்ற ஜன் சன்வாய் நிகழ்வின் போது டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. முதல்வர் ரேகா குப்தா பொதுமக்களை சந்தித்த்து வந்தபோது, அங்கு வந்த   30 வயது மதிக்கத்தக்க நபர்  திடீரென முதலமைச்சரை அறைந்து, முடியைப் பிடித்து … Read more

குற்ற வழக்குகளில் சிறைக்கு செல்லும் பிரதமர் முதலமைச்சர் உள்பட அனைவரையும் பதவி நீக்கும் வகையில் புதிய சட்டம்! மக்களவையில் இன்றுதாக்கல் செய்கிறர் உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: குற்ற வழக்குகளில் சிறைக்கு செல்லும்  பிரதமர், முதலமைச்சர் மற்றும்  அமைச்சர்களை பதவி நீக்கும் வகையில் புதிய சட்டத்தை  மத்தியஅரசு கொண்டு வருகிறது. இந்த சட்டம் இன்று  நாடாளுமன்றத்தில்  உள்துறை அமைச்சர் அமித்ஷாவால்  தாக்கல் செய்யப்படுகிறது. இன்று நாடாளுமன்றத்தில்  உள்துறை சார்பில்   மூன்று மசோதாக்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களில் பாதிபேர்  குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களாகவே உள்ளனர். மேலும் பலர்  குற்ற வழக்குகளில் சிக்கி சிறைக்கு சென்ற நிலையில்,  … Read more

ஆளுநர் நீண்ட காலமாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தால், என்ன வழி? சட்டத் துறையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: ஆளுநர் நீண்ட காலமாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தால், என்ன வழி? ஜனாதிபதியின் பரிந்துரையில் சட்டத் துறையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்ப உள்ளது. உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பை மீண்டும் எழுத முடியுமா? ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த ஜனாதிபதி பரிந்துரை வழக்கில் அட்டர்னி ஜெனரல் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அரசியல் சாசன அமர்வு,   ஏப்ரல் மாதம் தீர்ப்பை வழங்கிய அமர்வு, மசோதாக்கள் நீண்ட காலமாக ஆளுநரின் முன் நிலுவையில் இருந்ததால், தமிழ்நாடு வழக்கில் தலையிட்டிருக்கலாம் என்று … Read more

4வது முறையாக மீண்டும் நிரம்புகிறது மேட்டூர் அணை? ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

சேலம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை 4வதுமுறையாக மீண்டும் நிரம்பும் வாய்ப்பு உருவாகி உள்ளது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளதால் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்ட வருகிறது. தற்போது,  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 90,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. … Read more