பிரிட்டிஷ் இளவரசர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் தற்கொலை செய்து கொண்டார்

பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ தான் இளம்பெண்ணாக இருந்தபோது தனது பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்ய தன்னைப் பயன்படுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அமெரிக்காவில் பிறந்த வர்ஜீனியா கியூஃப்ரே என்ற பெண் ஆஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்டார். பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் III-யின் இளைய சகோதரரும் அரச குடும்பத்தில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத்-தின் இரண்டாவது மகனுமான ஆண்ட்ரூ, யார்க் டியூக் என்று அழைக்கப்படுகிறார். இளவரசர் ஆண்ட்ரூவும் வர்ஜீனியாவும் ஒன்றாக இருந்த புகைப்படம் … Read more

போதை நகரமாகிறது சென்னை? கடந்த 8 மாதங்களில்1,004 வழக்கு; 2,774 பேர் கைது என காவல்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் காவல்துறை தகவல்கள் வெளியாகி உள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் , கடந்த 8 மாதங்களில் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக 1,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கல்லூரி மாணவர்கள், திரைப்பட ஜூனியர் கலைஞர்கள், வெளிநாட்டினர் என 2 ஆயிரத்து 774 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பொதுமக்களிடையே … Read more

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு: குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர் இரங்கல்

சென்னை: இந்தியாவின் மூத்த விண்வெளி விஞ்ஞானியும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு  இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்., கர்நாடக முதல்வர் சித்தராமையா, மத்திய அமைச்சர் எல்.முருகன்  உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கஸ்தூரி ரங்கம் உடல்நலம் பாதிப்பு காரணமாக,  காலமானார்.  அவருக்கு வயது 84,  அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. … Read more

மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில் தான் ஊறிக் கிடக்கிறது! ஆளுநர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி செழியன் பதில்

சென்னை: மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில் தான் ஊறிக் கிடக்கிறது  என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி செழியன் பதிலடி கொடுத்துள்ளார். ஆளுநர் கூட்டியுள்ள துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ள நிலையில், அவர்கள் காவல்துறை மூலம் மிரட்டப்பட்டு உள்ளனர் என ஆளுநர் ரவி குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில் தான் ஊறிக் கிடக்கிறது!  தமிழ்நாடு அரசு போட்ட வழக்கு … Read more

அனைத்து மாநில முதல்வர்களுக்கும்  பாகிஸ்தானியர்களை வெளியேற்ற அமித்ஷா அறிவுறுத்தல்

டெல்லி மத்திய உள்துறை  அமைச்சர் அமித்ஷா அனைத்து மாநில முதல்வருஅளும் பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியூள்ளார்   கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. பாகிஸ்தானில் உள்ள … Read more

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்தார்

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்த ராகுல் காந்தி, காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இருப்பதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை ஆதரிக்கும் என்றும் கூறினார். 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரின் தீவிர நடவடிக்கைக்கு மத்தியில், ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டார். தேடுதல் நடவடிக்கையின் போது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து இந்த மோதல் வெடித்தது. பந்திபோரா மாவட்டத்தின் … Read more

காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் : அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன் அமெரிக்கா தனது நாட்டு மக்களை  காஷ்மீருக்க் செல்ல  வேண்டாம் என எச்சரித்துள்ளது. காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களும், வன்முறை சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் வன்முறை சம்பவங்கள் நடப்பது இயல்பாகி விட்டது. … Read more

காஷ்மீர் முதல்வரை சந்தித்த ராகுல் காந்தி

ஸ்ரீநகர் இன்று காஷ்மீர்  முதல்வர் உமர் அப்துல்லாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  சந்தித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்  இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி இன்று காஷ்மீர் சென்றுள்ளார். பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் … Read more

பாகிஸ்தானுக்கு நதி நீரை நிறுத்துவது என்பது மத்திய அரசின் நடவடிக்கைகளை சிறுவர்களும் சிலாகிப்பதை மறைக்கவா? வீடியோ

பஹல்காம் தாக்குதலை அடுத்து, பீகாரில் ஒரு பொதுக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை உலகின் எல்லை வரை துரத்திச் சென்று தண்டிப்பேன் என்று முழங்கினார். பீகாரில் ஆங்கிலத்திலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இந்தியிலும் உரை நிகழ்த்துவதன் முக்கியத்துவம் மோடிக்கு மட்டுமே தெரியும். ஏழு லட்சம் ஆயுதப்படைகள் இருந்தபோதிலும், காஷ்மீரின் மினி சுவிட்சர்லாந்து என்ற சுற்றுலாத் தலத்தில் ஏன் ஒரு பாதுகாப்புப் பணியாளர் கூட நிறுத்தப்படவில்லை என்று தாக்குதலில் … Read more

பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் பதிலடி கொடுப்பதை அடுத்து இருநாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் குட்டெரெஸ் வேண்டுகோள்

தற்போதைய பதட்டமான சூழ்நிலையில் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ளவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். “இரண்டு நாட்களுக்கு முன்பு, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.” இந்த செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று கூறிய குட்டெரெஸ் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். “பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று அவர் … Read more