டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது – கலால்வரித் திணைக்களம்

டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரத்தை இன்று (05) முதல் இடைநிறுத்துவதற்கு கலால்வரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கலால்வரித் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 5.7 பில்லியன் ரூபாய் தொகையை செலுத்தாத காரணத்தினால் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டு சுகாதார சேவையில் சர்வதேச நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை உரிய முறையில் செயல்படுத்த சுகாதார அமைச்சர் நடவடிக்கை

இலங்கையின் சுகாதார சேவையில் உலக சுகாதார அமைப்பு உட்பட பிற சர்வதேச அமைப்புகள் தற்போது மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தும் திட்டங்களை சரியாக மதிப்பிட்டு, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறந்த முகாமைத்துவத்தின் மூலம் அதிக உற்பத்தித்திறன் கொண்ட முடிவுகளை அடையக்கூடிய திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் உலக சுகாதார அமைப்பின் இலங்கை … Read more

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது

அரசியல் பக்கச்சார்பின் அடிப்படையில் இனிமேல் புதிய முதலீட்டு வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது – ஜனாதிபதி நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகையில் அரசியல் பக்கச்சார்பு அடிப்படையில்  சந்தர்ப்பம் வழங்குதல் போன்ற எந்தவொரு அரசியல் அழுத்தங்களும் இனிமேல் இடம்பெறாது. நாட்டுக்கு உகந்த தூய்மையான முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முழுச் சுதந்திரத்தை இலங்கை முதலீட்டுச் சபைக்கு வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  … Read more

கடன் மறுசீரமைப்பு செயல்முறை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது – பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ

கடன் மறுசீரமைப்பு செயல்முறை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அதனை டிசம்பர் 31ஆம் திகதி அளவில் முடிவுறுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரும் தொழில் அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இடைக்கால கணக்கு அறிக்கைக்கான யோசனைகளை அங்கீகரித்தல் தொடர்பான விவாதத்தை இன்று (05) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர் இதனை வெளியிட்டார். கடன் மறுசீரமைப்பு செயல்முறை தாமதமடைவதனால் மாத்திரம் மேலதிக பற்றாக்குறை வட்டியாக 1.7 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியேற்படும் என்றும் பிரதி … Read more

IM Japan தொழில்நுட்ப சேவை பயிற்சித் திட்டத்தின் (TITP) கீழ் தொழில்நுட்பப் பயிற்சி பெற்ற குழு ஜப்பான் பயணம்

IM Japan தொழில்நுட்ப சேவை பயிற்சி திட்டத்தின் (TITP) கீழ்  47வது பயிற்றப்பட்டவர்கள் குழு  கடந்த (02) திங்கட்கிழமை ஜப்பானுக்கு புறப்பட்டது. இக்குழுவில் தாதியர் சேவையில் 5 பயிற்சி பெற்றவர்களும், உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளில் தலா ஒவ்வொரு பெண்  பயிற்றப்பட்டவர்களும் உள்ளடங்குவர். தாதிச் சேவை, நிருமாணம், உற்பத்தி, பராமரிப்பு, மோட்டார் தொழில்நுட்ப பராமரிப்பு பிரிவு போன்ற துறைகளுக்காக 504 தொழில்நுட்ப பயிற்சி  பெற்றவர்கள்  தற்போது வரை ஜப்பானுக்கு சென்றுள்ளார்கள்.  இவ்வேழு பேர்கள் கொண்ட குழுவே 2024ஆம் … Read more

அனர்த்த நிவாரணங்களின் போது மோசடிகள் இடம்பெறுவதற்கு சந்தர்ப்பம் வழங்க மாட்டோம்

அனர்த்த நிவாரணங்களின் போது மோசடிகள் இடம்பெறுவதற்கான ஒரு வரலாறு மீண்டும் உருவாக இடமளிக்க மாட்டோம் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். கடந்த சில நாட்களாக , நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலை தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலையில் ஒரு ரூபாய் கூட மோசடி மற்றும் ஊழல் இடம்பெறவில்லை என்றும், பல குழுக்கள் … Read more

அனர்த்த சூழ்நிலையில் உயிரிழந்த உயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதற்கு அமைச்சரவைப் பத்திரம் 

அனர்த்த சூழ்நிலையில் உயிரிழந்த உயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதற்கு அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தத் தொகையை ஒரு மில்லியனாக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  கடந்த நாட்களில் இடம்பெற்ற அசாதாரண காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு மீதான விவாதத்தை நிறைவு செய்யும் போதே பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அனர்த்த முகாமைத்துவத்தில் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும், எதிர்காலத்தில் … Read more

இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமளித்தனர். சிவஞானம் சிறீதரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகநாதன் குகதாசன், சாணக்கியன் ராசமாணிக்கம், ஞானமுத்து ஸ்ரீநேசன்,கவீந்திரன் கோடீஸ்வரன், இளயதம்பி சிறிநாத்,துரைராசா ரவிகரன் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.

இனவாதம் தலை தூக்குவதற்கு எவ்விதத்திலும் இடமளியோம் – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்

இனவாதம் தலை தூக்குவதற்கு எவ்விதத்திலும் இடமளிப்பதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது குறித்து, புதிய சட்டம் கொண்டு வரப்படும் அல்லது அதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கைதுகள் மற்றும் அதன் பின்னணியிலான காரணங்கள் தொடர்பாக இன்று (04) பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை வெளியிட்டார். இந்த நாடு மீண்டும், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்காக மிகவும் … Read more

அரசாங்கத்தின் கொள்கைப்பிரகடனம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது

கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களினால் கடந்த நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை இன்று (04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.  அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் நேற்று மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 5.30 வரை மற்றும் இன்று மு.ப. 9.30 முதல் பி.ப. 5.00 மணி வரை இரண்டு நாள் விவாதமாக இடம்பெற்றது.         … Read more