கப்பல்களுக்கு மீண்டும் எரிபொருள் வழங்க ஆரம்பித்ததன் மூலம் 03 மில்லியன் டொலர் வருமானம் – மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர்

கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்பும் செயல்பாடுகளை (bunkering system) மீள ஆரம்பித்ததன் மூலம் 5,200 மெற்றிக் டொன் எரிபொருளை விற்பனை செய்து 03 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்ட முடிந்ததாக மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி. வீ. சானக தெரிவித்தார். வலுசக்தி தேவைகளுக்காக 200 மில்லியன் டொலர்கள் மேலதிகக் கையிருப்பு பேணப்படுவதாகும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக இவ்வாறு தெரிவித்தார். இங்கு … Read more

மட்டக்களப்பில் நெல் கொள்வனவில் மோசடி : 8 தராசுகள் கைப்பற்றல்!!

மட்டக்களப்பில் விவசாயிகளிடம் அரசாங்கத்தினால் அனுமதியளிக்கப்படாத தராசின் மூலம் நெல் கொள்வனவில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளுக்கு எதிராக அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த புதன்கிழமை (7) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் சட்டவிரோத தராசின் மூலம் மோசடியாக நெல் கொள்வனவு செய்துவந்த 8 வியாபாரிகளின் தராசுகளை கைப்பற்றியதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அளவீட்டு திணைக்கள அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நெல் … Read more

சீமெந்துக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 5000 ஏக்கர் காணியின் மூலம் வருடாந்தம் 300 மில். டொலர்கள் வருமானம் ஈட்டலாம்

சீமெந்துக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 5000 ஏக்கர் காணியில் வருடாந்தம் 300 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டும் திட்டம் உள்ளதாகவும், அதற்காக முதலீடு செய்யத் தயாராக உள்ள நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசனாயக்க தெரிவித்தார். எவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டலும், நாட்டிலுள்ள வளங்களைப் பயன்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் … Read more

HNDE ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பரிந்துரை.

HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திறைச்சேரியின் செயலாளருக்கும் இடையில் நேற்று (07) கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ளவர்களுக்கு நியமனம் வழங்குமாறு திறைசேரிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பரிந்துரை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் காணி விடுவித்தல் தொடர்பான கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று (07) புதன்கிழமை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில், காலை 9.30மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவள திணைக்கள காணிகளை விடுவித்தல் தொடர்பில் துறைசார்ந்த திணைக்கள உயரதிகாரிகளுடன் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது, குறித்த திணைக்களங்களின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை மக்கள் பாவனைக்கு விடுவிப்பதிலுள்ள நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இக் கலந்துரையாடலில் … Read more

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பால் மா பக்கட்டுக்கள் வழங்கி வைப்பு

ஜனாதிபதி செயலகம் ஊடாக நடை முறைப்படுத்தப்படும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பால் மா பக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க (06) பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த பால் மா பக்கட்டுக்களை பொன்டெறா நிறுவனத்தின் அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட 90 குடும்பங்களுக்கு ஒருவருக்கு தலா … Read more

7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி அவுஸ்திரேலியா விஜயம்

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) அதிகாலை அவுஸ்திரேலியா பயணமானார். இந்தியா மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சென்றுள்ளதோடு, ஏழாவது இந்து சமுத்திர மாநாடு பெப்ரவரி மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறுகிறது. இந்து சமுத்திரத்தை அண்மித்த நாடுகள் மற்றும் இந்து சமுத்திரத்தை அதிகமாகப் பயன்படுத்தும் ஏனைய நாடுகளைப் … Read more

ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான உதவித்தொகை ஜனவரி முதல் உயர்த்தப்படுகிறது

ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இதன்படி, 5,000 ரூபாயாக இருந்த ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கும் வழங்கப்படும் உதவித்தொகை, 7,500 ரூபாவாகவும், 2,000 ரூபாவாக இருந்த முதியோர் உதவித்தொகை, 3,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது. தற்போது அஸ்வெசும நிவாரணம் பெறும் பயனாளிகளின் குடும்பங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள்; இந்த ஆண்டின் முதல் காலாண்டில் … Read more

கே. ஐ. யு மற்றும் ஹொரைஸன் தனியார் பல்கலைக்கழகங்களில் பிள்ளைகளுக்கு அரச வங்கிகளினால் தொடர்ந்தும் வட்டியில்லாக் கடன் வசதி – கல்வி அமைச்சர்  

கே. ஐ. யு மற்றும் ஹொரைஸன் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு அரச வங்கிகளினால் வழங்கப்படும்  வட்டியில்லாக் கடன் வசதிகளை தொடர்ந்தும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அதற்காக அமைச்சரவை தற்போது தயாராகி வருவதாகவும், காணப்படும் அதற்கான வேலைகள் எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் … Read more

ஜகத் பிரியங்கர பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக ஜகத் பிரியங்கர இன்று (08) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய புத்தளம் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சனத் நிஷாந்தவின் மறைவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ஜகத் பிரியங்கர இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். 1979 இல் பிறந்த … Read more