வட மாகாணத்தில் நாளை சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பு 

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் இன்று காலை மத்திய-தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது.  வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளநவம்பர் 26 ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தொகுதி இன்று காலை 0830 மணியளவில் திருகோணமலைக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 600 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது. அத் தொகுதி மேலும் வலுவடைந்து நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என … Read more

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள உப அமைச்சர் தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள (IDCPC) உப அமைச்சர்  சன் ஹையன் (Sun Haiyan)  தலைமையிலான சீனத் தூதுக்குழு இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க பெற்ற வெற்றிக்கும், பொதுத் தேர்தலில் அவரது கட்சிக்குக் கிடைத்த அமோக வெற்றிக்கும் வாழ்த்துத் தெரிவித்த சீன உப அமைச்சர், இந்த வெற்றிகளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பரிமாற்றங்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.   ஜனாதிபதி அநுரகுமார … Read more

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

இரண்டு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. இதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக மலர்மதி கங்காதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய தெங்கு உற்பத்தியாளர்களின் 60வது அமர்வு மற்றும் அமைச்சர்களுடனான சந்திப்பு 21 நாடுகளின் பங்குபற்றலுடன் கொழும்பில்

தேசிய தெங்கு உற்பத்தியாளர்களின் 60வது அமர்வு மற்றும் அமைச்சர்களுடனான சந்திப்பு 21 நாடுகளின் பங்குபற்றலுடன் கொழும்பில் ஆரம்பமானது. இம் மாநாடு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சின் செயலாளர் பி. கே. பிரபாத் சந்திரகீர்த்தி உட்பட 21 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதரக பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இலங்கை, பீஜி, இந்தியா, இந்தோனேஷியா, ஜமேக்கா, கென்யா, மலேசியா, பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், சாலமன் தீவுகள், தாய்லாந்து, வியட்நாம், கோட் … Read more

அனர்த்த முகாமைத்துவ நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதுமானதல்ல

– தீர்வுகளை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – ஒழுங்கற்ற மனித நடவடிக்கைகளே இயற்கை பேரழிவுகளுக்கு காரணம்; நிறுவன மட்டத்தில் விதிமுறைகள் இருந்தும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. – பாதுகாப்பு பிரதி அமைச்சர் பதவியேற்பு நிகழ்வில் இணைந்து கொண்ட ஜனாதிபதி தெரிவிப்பு அனர்த்த முகாமைத்துவத்தில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். … Read more

மட்டக்களப்பு களப்பு நீர் எரிகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பில் களப்பு நீர் எரிகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (25) இடம்பெற்றது. அனர்த்த காலங்களில் களப்பின் நீர் மட்டம் அதிகரித்தல், விளைநிலங்கள் தாழ்தல், கண்டல் தாவரங்களை நட்டு உயிர் பல்வகைமையை பாதுகாத்தல், மற்றும் வெள்ளப் பெருக்கின் பாதிப்பை குறைப்பதற்கும் களப்பில் சேர்கின்ற மண்ணை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம், மற்றும் களப்பு நிலங்களை சட்டவிரோதமாக மூடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல்,மேலும் பாதிப்பிற்குள்ளாகும் … Read more

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் பிரதமர் இடையில் சந்திப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (IDCPC) சர்வதேச விவகாரங்கள் தொடர்பான துணை அமைச்சர் Sun Haiyan கொழும்பு அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி; ஹரிணி அமரசூரியவை சந்தித்தார். இந்த சந்திப்பில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (IDCPC) சர்வதேச விவகாரங்கள் தொடர்பான திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhon மற்றும் இலங்கையில் உள்ள சீன தூதரக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், மகளிர்; மற்றும் சிறுவர்;; அலுவல்கள் அமைச்சர் சரோஜா … Read more

2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று (25) ஆரம்பம்

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (25) முதல் அடுத்த மாதம் 20ஆம் திகதி வரை 22 நாட்கள் நடைபெறவுள்ளது. இம்முறை உயர் தரப் பரீட்சைக்கு 333,185 பேர் தோற்றவுள்ளனர். இதற்கமைய, காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், அனைத்து மாணவர்களும் செல்லுபடியான அடையாள அட்டையுடன் பரீட்சை நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ருஹுனு பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்

செய்தி வெளியீடு எண். 78 ருஹுனு பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 20 (4) (ஆ) பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ருஹுணு பல்கலைகழகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு 25.11.2024 இன்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்குப் பதிலாக இன்று முதல் மூத்த பேராசிரியர் ஆர்.எம்.யு.எஸ்.கே. ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான வர்த்தமானி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. … Read more

கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவேர் மறு அறிவித்தல் வரை கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் இன்று காலை மத்திய-தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இத் தொகுதி மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 500 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. அத் தொகுதி மேலும் வலுவடைந்து நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடியமற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் இன்றிலிருந்து (நவம்பர் 25ஆம் … Read more