நில்வளா கங்கையில் அமையப்பெற்றுள்ள தடுப்பணையை மாற்றியமைக்க நடவடிக்டகை

நில்வளா கங்கையில் தடுப்பணையில் உள்ள ஒரு பகுதியை மாற்றுவது தொடர்பாகவும், கிளை ஆற்றில் உள்ள தடைகளை அகற்றுவது தொடர்பாகவும், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர்; ஜீவன் தொண்டமானட தலைமையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மாத்தறை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் நில்வளா கங்கையில் அமையப்பெற்றுள்ள தடுப்பணையால் தான் இந்த நிலைமை என மக்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு … Read more

நாட்டின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஒக்டோபர் 09ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர் 08ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ … Read more

மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முற்றாக சுகப்படுத்தலாம்

சுக வனிதையர் மற்றும் புற்றுநோயினை ஆரம்பத்திலேயே அறிந்துகொள்வதற்கான மத்தியஸ்தானங்களுக்கு மேலதிகமாக நாடாளாவிய ரீதியில் சத்திரசிகிச்சை நிபுணர்களின் கீழ் 30 புற்றுநோய் சிகிச்சை நிலையங்கள். மார்பகப் புற்றுநோய் வருவதை தடுக்க முடியாவிட்டாலும் அதனை ஆரம்பத்திலேயே கண்டறிவதால் முழுமையாக சுகப்படுத்த முடியுமென தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்தார். மார்பகப் புற்றுநோயாளர்களை கண்டறிவதற்காக சந்தர்ப்பங்களை அதிகரிக்கும் வகையில் சுக வனிதையர் மற்றும் புற்றுநோயினை ஆரம்பத்திலேயே அறிந்துகொள்வதற்காக நிறுவப்பட்டிருக்கும் நிலையகளுக்கு மேலதிகமாக நாடாளாவிய ரீதியிலுள்ள அரசாங்க … Read more

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) தலைமைப் பதவி இலங்கைக்கு

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர் மட்ட கூட்டம் ஒக்டோபர் 11 ஆம் திகதி கொழும்பில். இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்கவுள்ள அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் அடுத்த வாரம் கொழும்பில் நடைபெறவுள்ளது. 2023 ஒக்டோபர் 11ஆந் திகதி கொழும்பில் இலங்கை நடாத்தவுள்ள 23ஆவது இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்திற்காக இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் அதன் … Read more

கட்அவுட் ,சுவரொட்டிகளில் தனது புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாமென ஜனாதிபதி அறிவுறுத்தல்

இனிமேல் தனது புகைப்படத்தை கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து சுவரொட்டிகளிலும் தனது புகைப்படத்தை காட்சிப்படுத்துவதை தவிர்க்குமாறு ஜனாதிபதி ஏனைய அரசியல் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசியல் கோசம் அன்றி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே இன்றைய தேவை என வலியுறுத்திய ரணில் விக்ரமசிங்க, கட்அவுட் மற்றும் அரசியல் கோசங்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு இழுத்துச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். கோஷங்கள் மற்றும் கட்அவுட் அரசியலுக்கு தான் … Read more

இலங்கை அணிக்கு  அபராதம்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் குறித்த நேரத்திற்குள் ஓவர் எண்ணிக்கையை வீசத் தவறியமைக்காக இலங்கை அணிக்கு கிடைத்த போட்டிப் பணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமது போட்டி பணத்தில் இருந்து 10% அபராதமாக செலுத்துமாறு போட்டியின் நடுவராக இருந்த இந்திய பிரஜை ஜவகல் ஸ்ரீநாத் உத்தரவிடப்பட்டுள்ளார். இலங்கை அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய போட்டியில் இலங்கை வீரர்கள் ஓவர்களை முடிக்க வேண்டிய நேரத்தில், தேவையான ஓவர்களை விட இரண்டு … Read more

மூத்த நடிகர் ஜாக்சன் ஆண்டனி காலமானார்…

வாகன விபத்தில் சிக்கி 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் ஜாக்சன் ஆண்டனி இன்று (09) அதிகாலை காலமானார். 1958 ஆம் ஆண்டு றாகமையில் பிறந்த அவர் தமது 65 ஆவது வயதில் காலமாகியுள்ளார். இவர் தமிழர்கள் மத்தியிலும் பரீட்ச்சியமான ஒரு சிறந்த கலைஞராக விளங்கியவர். நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பிற்காக அனுராதபுரம் பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, தலாவ வீதியில் மொரகொட பிரதேசத்தில் அவர் … Read more

கிழக்கு மாகாணத்தை பொருளாதார ரீதியில் பலப்படுத்த 10 வருடத் திட்டம்

மகாவெலி திட்டத்தில் விடுபட்ட மகாவெலி ஏ மற்றும் பீ வலயங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை. நிலாவெலியில் இருந்து பாணம‌ வரை விரிவான சுற்றுலா அபிவிருத்தித் திட்டம் -ஜனாதிபதி மட்டக்களப்பில் தெரிவிப்பு. திருகோணமலையின் அபிவிருத்தி உட்பட கிழக்கு மாகாணத்தில் விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அடுத்த 10 வருடங்களில் விரிவான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மகாவலி திட்டத்தில் விடுபட்ட இரண்டு மகாவலி ஏ மற்றும் பீ வலயங்களை அபிவிருத்தி செய்து மட்டக்களப்பு மாவட்டத்தை … Read more

நாட்டில் அலங்கார மீன் இனங்களின் உற்பத்திக்கும் அதன் வளர்ப்பு முயற்சிகளுக்கும் நெக்டா நிறுவனம் அளப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது

நாட்டில் அலங்கார மீன் இனங்களின் உற்பத்திக்கும் அதன் வளர்ப்பு முயற்சிகளுக்கும் நெக்டா நிறுவனம் அளப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது நாட்டில் அலங்கார மீன் இனங்களின் உற்பத்திக்கும் அதன் வளர்ப்பு முயற்சிகளுக்கும் நெக்டா நிறுவனம் அளப்பெரிய பங்களிப்பை வழங்கியிருந்ததாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துதரிஸ்டவசமாக கடந்த கொரோனா தொற்று நோயின் தாக்கத்தால் பாரிய வீழ்ச்சியை அடைந்த அலங்கார மீன் இனங்களின் உற்பத்திக்கு மீண்டும் புத்துயிர் அளித்து அதனை ஊக்கப்படுத்த தனது கடல்தொழில் அமைச்சும் நெக்டா நிறுவனமும் தீவிரம் காட்டி … Read more

அனைவரும் இலங்கையர்கள் என்ற வகையில் இன,மத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அர்ப்பணிக்க வேண்டும் – மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

அனைவரும் இலங்கையர்கள் என்ற வகையில் இன,மத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அர்ப்பணிக்க வேண்டும் – மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளை காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவை சந்திக்க நேரிட்டதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, … Read more