2048 ஆம் ஆண்டாகும் போது நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்ப அறிவை நம் நாட்டு மாணவர் சந்ததி பெற வேண்டும் – ஜனாதிபதி

நாட்டின் மாணவர்கள் 2048 ஆம் ஆண்டளவில் நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களிலும் அறிவை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தின் நவீன முன்னேற்றங்களை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திற்கு தயாராக வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நான்கு வருடங்களில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர், அதே பழைய முறையைப் பின்பற்றுவதா அல்லது புதிய முறையின் ஊடாக முன்னேறி வரும் உலகத்துடன் முன்னோக்கிச் செல்வதா என்பதை தீர்மானிக்க … Read more

ஓரிரு வருடங்களில் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாடு மீண்டெழும் – கடற்றொழில் அமைச்சர்

ஓரிரு வருடங்களில் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாடு மீண்டெழும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டை மீட்டெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்கள் வெற்றியடைந்து வருவதாகவும் தெரிவித்தார். சகலருக்கும் சமமான கல்வி எனும் சிந்தனைக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு முழுவதிலும் மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கான இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வு நேற்று (29) முழங்காவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் … Read more

நிர்மாணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்- சாகல ரத்நாயக்க

நாட்டின் நிதி நிலைமை சீரானதுடன், நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். நிர்மாணத்துறையை மேம்படுத்துவதற்கான வட்டி விகிதங்கள் மற்றும் வங்கி மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழு நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியில், நிர்மாணத் துறையினர் எதிர்நோக்கும் நிதிச் சிக்கல்கள் மற்றும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய … Read more

நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர

நாட்டில் பாவனைக்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன்படி இன்று (29) காலை 6 மணிக்கு கொலன்னாவ மற்றும் மிதுராஜவெல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார் மற்றும் ஆயுதப்படையினரின் உதவியுடன் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலைய ஒபரேட்டர்கள் (Operators) தமக்கு தேவையான குறைந்தபட்ச இருப்புகளைப் சரியான வகையில் பராமரிக்குமாறும் மற்றும் அதற்கேற்ப தேவையான ஓர்டர்களை … Read more

தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நெல் பயிர்ச்செய்கை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம்

தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நெல் பயிர்ச்செய்கை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நிதி நிவாரணம் வழங்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… பெரும்போக பருவத்தில், மேலதிகமாக 30,000 மெற்றிக் தொன் நெல் அறுவடை கிடைத்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு நிவாரண விலையில் தேவையான அனைத்து உரங்களையும் வழங்க நடவடிக்கை … Read more

ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 04 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முக்கோண ஒருநாள் தொடரின் போட்டியில் இலங்கை அணியினை ஆப்கானிஸ்தான் அணி 04 ஓட்டங்களால் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியானது, அங்கே பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் இளையோர் அணிகள் பங்கேற்கும் முக்கோண ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கமைய அபுதாபியின் டோலரன்ஸ் அரங்கில் நேற்று (28) ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் … Read more

எரிபொருள் விலை குறைப்பிற்கு அமைய பஸ் கட்டணங்களும் குறைக்கப்பட உள்ளன

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஒரு லீற்றர் டீசலின் விலை 80 ரூபாவால் குறைவடைய உள்ளது. அதனைத் தொடர்ந்து பஸ் கட்டணங்களையும் குறைக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி, தற்போதைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 30 ரூபாவாக குறைவடைய உள்ளதுடன், புதிய பஸ் கட்டணம் நாளை (30) முதல் அமல்படுத்தப்படும். மேலும், எரிபொருள் விலை திருத்தத்துடன் ஏனைய பஸ் கட்டணங்கள் … Read more

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்த ஒப்பந்தம் (SLTFTA) தொடர்பான நான்காம் சுற்று பேச்சுவார்த்தை கொழும்பில் ஆரம்பம்

அடுத்த வருடம் (2024) கைசாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்த ஒப்பந்தம் குறித்த நான்காம் சுற்று பேச்சுவார்த்தைகள் கடந்த (27) ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகின. பாரிய மற்றும் வளர்ந்துவரும் பொருளாதாரத்தை கொண்ட தென்கிழக்காசிய சங்கத்திற்குரித்தான நாடுகளுடன் பொருளாதார உறவுகளை பலப்படுத்திக்கொள்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் எதிர்பார்ப்பாகும். அதற்கமைய, இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்திற்காக தாய்லாந்து சந்தைக்குள் நுழைவதற்கான வாய்ப்புக்களை அதிகரித்துகொள்வது மாத்திரமின்றி, அந்த பொருளாதாரச் சந்தையினூடாக ஏனைய ஆசியான் நாடுகளின் பொருளாதார சந்தைகளுக்கான … Read more

இன்று நள்ளிரவு 12 மணி முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும்வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளது என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 340 ரூபாவாகும். அத்துடன் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும். மேலும், மண்ணெண்ணையின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், … Read more

கலப்பு உரங்களின் விலை 50 வீதத்தால் குறைவு

மரக்கறி, தேங்காய், தேயிலை, கறுவா உள்ளிட்ட பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் கலப்பு உரங்களின் விலை 50 வீதத்தால் குறைந்துள்ளது என்று கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் நேற்று (28) தெரிவித்துள்ளார். நெல் மற்றும் சோளப் பயிர்களுக்கு அரசாங்கத்தின் உரத் திட்டத்தின் கீழ் இரசாயன உரங்கள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், ஏனைய பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் உரங்கள் கிடைக்காதமை தொடர்பில் விவசாயிகள் விவசாய அமைச்சுக்கு தொடர்ந்து முறைப்பாடு செய்து வருகின்றனர். அந்த … Read more