கட்டாய காரணத்திற்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கவும் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் உள்ளமை காரணமாக கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியுள்ளமையால், கட்டாய காரணத்திற்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. புதிய இலத்திரணியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கான சர்வதேச விலைமணு கோரலூடாக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு கடவுச் சீட்டுக்களை தயாரிப்பதற்கான டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வைத்திருக்கும் வெற்று கடவுச்சீட்டுகளின் மட்டுப்படுத்தப்பட்ட கையிருப்பைக் கருத்தில் கொண்டு, இலத்திரனியல் … Read more

சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரசபையில் இணைக்கப்பட்டு சேவையாற்றிய ஊழியர்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு

சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரசபையில் இணைக்கப்பட்டு சேவையாற்றிய ஊழியர்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் சேர்த்துக் கொள்வதற்காக வாய்ப்பு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 2013 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க வாழ்வின் எழுச்சி சட்டத்தின் மூலம் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தைத் தாபிக்கும் போது, முன்னாள் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரசபைக்கு இணைப்புச் செய்யப்பட்டு சேவையாற்றிய ஊழியர்களுக்கு குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, தமது சுயவிருப்பின் பேரில் ஓய்வூதியத்துடன் கூடிய அப்போதிருந்த வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சேர்க்கப்படுவதற்கு பல சந்தர்ப்பங்களில் … Read more

உர மானியம் 25,000 ரூபா வரை அதிகரிக்கப்படும்

எதிர்வரும் பெரும்போக நெல் விளைச்சலை அதிகரிக்கவும், நெல் பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டும் ஹெக்டேர் ஒன்றிற்கு வழங்கப்படும் உர மானியத்தை ரூ.25,000 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தற்போது விவசாயிகளுக்கு, ஹெக்டேருக்கு 15,000 ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் … Read more

செயற்கை நுண்ணறிவு தொடர்பாக இலங்கையின் தேசிய மூலோபாயத்திட்டம்

செயற்கை நுண்ணறிவு தொடர்பாக இலங்கையின் தேசிய மூலோபாயத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2030 ஆம் ஆண்டாகும் போது இலங்கையை செயற்கை நுண்ணறிவு தொடர்பில் பிராந்தியத்தின் மத்தியநிலையமாக மையப்படுத்துவதற்கும், மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை மற்றும் பொருளாதாரத்தின் தாங்குதிறனை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்மூலம், பேண்தகு பொருளாதார விருத்தியை அடைவதற்கும் மற்றும் வறுமையை ஒழிப்பதற்பதற்காக முக்கிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதுடன், செயற்கை நுண்ணறிவின் பயன்களை சமூகத்தில் நியாயமாகப் பகிர்ந்தளிப்பதற்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக நேற்று (26) நடைபெற்ற … Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் – 2024 : எல்பிட்டிய பிரதேச சபை, தபால் மூலம் வாக்களிக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கான அறிவித்தல்

2024.08.26 ஆம் திகதி பெயர் குறித்த நியமனங்களை கோருவதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்ட எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலுக்கு அஞ்சல் மூலம் வாக்களிக்க தகைமை பெற்றுள்ளவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலப்பகுதி 2024.08.26 முதல் 2024.09.13 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவடையவுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த திகதி எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி வீதியின் குறிஞ்சாக்கேணி பாலத்தை புனரமைத்தல்

அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் அனுசரணையுடன் வீதிக்கட்டமைப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்திக் கருத்திட்டத்தில் எஞ்சியுள்ள நிதியின் மூலம் கிண்ணியா – குறிஞ்சாக்கேணி வீதியின் குறிளஞ்சாக்கேணி பாலத்தைப் புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய, விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை வழங்கியுள்ள விலைமனுதாரரான ஈ.எல்.எஸ். கன்ஸ்ரக்ஷன் (தனியார்) கம்பனிக்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட … Read more

மூன்று சீன யுத்தக் கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை

மக்கள் சீன முன்னணிப் படையின் (Chinese People’s Liberation Army Navy) யுத்தக் கப்பல்களான “HE FEI”, “WUZHISHAN” மற்றும் “QILIANSHAN” ஆகிய யுத்தக் கப்பல்கள் மூன்று உத்தியோகபூர்வ சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு நேற்று (26) காலை கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்ததுடன், இலங்கை கடற்படையினால் அக்கப்பல் கடற்படையின் சம்பிரதாய வரவேற்பு வழங்கப்பட்டது. இவ்வாறு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்து, Destroyer எனும் வகையைச் சேர்ந்த “HE FEI” யுத்தக் கப்பல், 144.50 மீற்றர் நீளமும் முழுமையாக 267மீற்றர் … Read more

4 வது இராணுவ சீஐஎஸ்எம் உலக பயிலிளவல் விளையாட்டு போட்டியில் பெண் பயிலிளவல் அதிகாரி வெற்றி

2024 ஆகஸ்ட் 19 முதல் 24 வரை வெனிசுலாவின் கராகஸில் நடைபெற்ற 4 வது இராணுவ சீஐஎஸ்எம் உலக பயிலிளவல் விளையாட்டு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பெண் பயிலிளவல் அதிகாரி டிகேஏஜீடபிள்யூ சதுரங்கனி பங்கேற்று, நீளம் பாய்தல் போட்டியில் 5.24 மீட்டர் சாதனையுடன் வெற்றி பெற்றார். வளர்ந்து வரும் பெண் தடகள வீராங்கனையான அவர் தற்போது தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பாடநெறி கேடியூ 93 பீ இன் கீழ் தனது தனது மேலதிக இராணுவப் … Read more

ஐந்து வகைத் தேயிலை உரங்களின் விலை குறைப்பு….

அரச உரக் கம்பனியினால் உற்பத்தி செய்யப்படும் ஐந்து வகையான தேயிலை உரங்களின் விலை நான்காயிரம் ரூபாவினால் குறைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி அரச உரக் கம்பனி தற்போது தேயிலை உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் வு 200, வு 750, ரு 709, ரு 834, வு 65 ஆகிய ஐந்து வகை உரங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், கடந்த வாரத்திலிருந்து இந்த வகை 50 கிலோகிராம் உரத்தின் விலை நான்காயிரம் ரூபாவினால் குறைக்கப்படுவதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் … Read more

40 வருடங்களாக சீகிரியா மக்களை பாதித்த வனவிலங்குக் காணிப்பிரச்சினைகுத் தீர்வு ….

தம்புள்ளை, சீகிரியா அரை நகர்ப்புற 12 கிராம சேவகர் பிரிவுகள், வனவிலங்கு வலயங்களாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டமையினால் 40 வருடங்களாக தீர்க்கப்படாது காணப்பட்ட சமூக பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்பட்டு மக்களுக்கு சுதந்திரமாக காணிகளை அனுபவிக்கும் உரிமையை வழங்க முடிந்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் பொறியியலாளர் நாலக பண்டார கோட்டேகொட வின் தலையீட்டினால் இலங்கைப் பாராளுமன்ற சுற்றாடல் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான செயற்குழு கடந்த வாரத்தில் இது தொடர்பாக ஆராய்ந்துள்ளது. அதன்படி அங்குள்ள … Read more