இன்றும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 05ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான … Read more

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்த பாராளுமன்றத்தில் விவாதம்

சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்களின் கீழ் நிதி அமைச்சரினால் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட கூற்றுத் தொடர்பான விவாதம் பி.ப 5.30 மணி வரை நடைபெற்றது. பாராளுமன்றம் நேற்று  மு.ப 10.00 மணிக்குக் கூடியதுடன், அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் “கைத்தொழில் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு  சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பான  உயர் நீதிமன்றத்தின்  தீர்ப்பை … Read more

2020 ஆண்டில் ஆகக்ககூடுதலான தொகையை வட்டியாக செலுத்திய நாடாக இலங்கை காணப்பட்டது – நிதியமைச்சர்

அரச வருமானத்திற்கு அமைவாக ஆகக்ககூடுதலான தொகையை வட்டியாக செலுத்திய நாடாக 2020 ஆண்டில் இலங்கை காணப்பட்டதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். 2019ஆம் ஆண்டுகளுக்கு அமைவாக கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் கடனுக்காக செலுத்திய வட்டித்தொகை என்ன என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 2019ஆம் ஆண்டு, அதிக வருமானம் பெறும் நபர்களை இலக்காகக் கொண்டு அல்லாமல், அனைத்து வரி செலுத்தும் மக்களையும் … Read more

பிரதி சபாநாயகராக ரஞ்ஜித் சியம்பலபிட்டிய மீண்டும் தெரிவு

பிரதி சபாநாயகராக, முன்னாள் பிரதி சபாநாயகர் ரஞ்ஜித் சியம்பலபிட்டி மீண்டும் இன்று (5) தெரிவானார். பிரதி சபாநாயகர் ரஞ்ஜித் சியம்பலபிட்டிக்கு 148 வாக்குகளும் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்காருக்கு 65  வாக்குகள் அளிக்கப்பட்டன. கடந்த 2020 ஆகஸ்ட் 20 – தொடக்கம் நேற்று முன்தினம் வரை பிரதி சபாநாயகராக செயல்பட்டு வந்த ரஞ்ஜித் சியம்பலபிட்டிய,  தனது பதவியை இராஜிமா செய்ததையடுத்து பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடமானது. இதனால் இன்றைய தினம்  ,ஆளுந்தரப்பில் இருந்து முன்னாள் பிரதி சபாநாயகர் … Read more

சிறைச்சாலை முகாமைத்துவ,சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக அமைச்சர் அலி சப்ரி

சிறைச்சாலை முகாமைத்துவ மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக அமைச்சர் அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த விசேட வர்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது. இந்த இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக அமைச்சர் அலி சப்ரி, நிதி மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் செயல்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.documents.gov.lk/files/egz/2022/5/2278-13_T.pdf

பாராளுமன்ற அலுவல்கள் குழுவுக்கு கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாந்து ,கௌரவ ரோஹித அபேகுணவர்தன நியமனம்

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாந்து மற்றும் கௌரவ ரோஹித பேகுணவர்தன ஆகியோரின் பெயரை தெரிவுக் குழு நியமித்திருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2022  சனவரி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமையவும் இந்தப் பெயர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகரின் அறிவிப்பில் குறிப்பிட்டார். எச்.ஈ. ஜனகாந்த சில்வா,பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் … Read more

பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்களிப்பு தற் போது பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது

பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்களிப்பு தற் போது பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது  வாக்கு அட்டை மூலம் பாராளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர்  

சர்வதேச நாணய நிதியம்/உலக வங்கியின் வசந்தகாலக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் வொஷிங்ரன் டீசீ நகருக்கான சமீபத்திய விஜயம்

சர்வதேச நாணய நிதியம்/உலக வங்கியின் வசந்தகாலக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இலற்கைப் பிரதிநிதிகள் குழுவின் வொஷிங்ரன் டீசீ நகருக்கான சமீபத்திய விஜயம்

கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று:கொந்தளிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கானஇ நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு2022 மே 05ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில்சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் … Read more