உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை தோண்டியெடுக்க நீதிமன்றம் அனுமதி

சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் தொடர்பான DNA பரிசோதனைக்கு, சாய்ந்தமருதில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்கள் நாளை (27) தோண்டியெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று (26) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை, இவ்வாறு தோண்டியெடுக்க கல்முனை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில், பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2019 … Read more

அலி சப்ரி அவர்கள் நீதி அமைச்சராக பதவியேற்றார்…  

அலி சப்ரி அவர்கள் நீதி அமைச்சராக இன்று (26) பிற்பகல், கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அவர், நிதி அமைச்சராகவும் தொடர்ந்து செயற்படுவார். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 26.04.2022

ஏறாவூர் புன்னக்குடா ஆடைக் கைத்தொழிற் பூங்கா வலயத்திற்கு முதலீட்டாளர்கள் விஜயம்

இலங்கை முதலீட்டு சபை தலைவர் ராஜ எதிரிசூரிய ,வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஏறாவூர் புன்னக்குடா ஆடைக் கைத்தொழிற் பூங்கா வலயத்திற்கு இன்று 26.04.2022 உத்தியோகபூர்வ கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர். இதன்போது இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேனுகா எம்.வீரகோன்,  சபையின் வலய நிறைவேற்று பணிப்பாளர் எம்.கே.டீ.லோரஸ்,  உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியளாளர் எந்திரி ஏ.எம்.றிஸ்வி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதம பொறியியலாளர் டீ.ஏ.பிரகாஸ் … Read more

அத்தியாவசிய சேவைகளுக்கான வரிசைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

குறுகிய காலத்தில் வரிசையில் காத்திருக்கும் செயற்பாட்டை நிறுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள், பிரச்சினைகள் தீர்க்கப்பட்டவுடன் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்தப் பொறுப்புகளை இன்னொருவர் நிறைவேற்றும் வரை காத்திருப்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தாம் முழுமையாகப் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறிய கௌரவ பிரதமர், இந்த நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையின் பின்னணியிலும் தான் காணப்படுவதை உறுதியாக நினைவில் கொள்ள … Read more

இலங்கையில் தங்கியுள்ள ரஷ்யா, உக்ரேன் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வீசா காலப்பகுதி நீடிப்பு

இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டண அறவீடுகளின்றி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றுலா வீசா காலப்பகுதி நீடிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக 2022.04.25 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 01. இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டண அறவீடுகளின்றி வீசாவுக்கான காலப்பகுதியை நீடித்தல் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளால் இலங்கையில் … Read more

சீனா இலங்கைக்கு மேலும் கடனுதவி

தற்போது நாட்டின் கடனை செலுத்துவதற்கு சீனா மேலும் ஒரு தொகையை கடனாக வழங்கவுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை நடத்தி வரும் பேச்சுவார்த்தை தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள கூற்று பாதிப்பை ஏற்படுத்துமா? என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். சீனா உலக நாடுகளுக்கு கடன் வழங்கி வருகின்றது. கடன் மறுசீரமைப்பிற்கு சீனா இணக்கம் வெளியிடாமைக்கான காரணத்தையும் அமைச்சர் … Read more

தமிழ்நாட்டில் ,ஊரடங்கை அமல்படுத்தும் சூழ்நிலை தற்போது இல்லை

தமிழ்நாட்டில் ஊரடங்கை அமல்படுத்துவதற்கும், கட்டுப்பாடுகள் தீவிர படுத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என தமிழ்நாட்டின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். நோய் கட்டுப்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. ஐஐடியில் 79 ஆக இருந்த கொரோனா எண்ணிக்கை மேலும் 32 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தொற்று … Read more

ட்விட்டரை (Twitter ) எலோன் மஸ்க்கிற்கு விற்பனை செய்ய தீர்மானம்

சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை Twitter , டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க்கிற்கு Elon Musk. விற்பனை செய்வதற்கு அதன்  பணிப்பாளர் சபை உடன்பட்டுள்ளது. மஸ்க் கடந்த சில காலமாக ட்விட்டரை வாங்க முயற்சித்து வந்த நிலையில், தற்போது ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கிய … Read more