இலங்கையின் தெலுங்கு மக்களின் பிரச்னைகளை தீர்க்க கௌரவ பிரதமர் தலையீடு

இலங்கையில் வாழும் தெலுங்கு மக்களின் கலாசார அடையாளத்தைப் பாதுகாத்து அவர்களின் வாழ்வாதாரம், வீடுகள், குடிநீர் மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்யுமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அந்தந்த அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்தார். அகில இலங்கை தெலுங்கு கலைஞர்களின் கலாசார சங்கத்துடன் அலரிமாளிகையில் நேற்று (11) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இவ்வாறு தெரிவித்தார். இலங்கையின் தெலுங்கு மக்களின் தலைவர் திரு.கே.ஆர்.அனவத்து … Read more

கோறளைப்பற்று மத்தியில் சமுர்த்தி திணைக்களத்தின் பல்வேறு வேலைத்திட்டங்கள்

ஜனாதிபதியின் சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி திணைக்களத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் சமுதாய அடிப்படை அமைப்பு அலுவலகத்திறப்பு, சௌபாக்கியா வீடு கையளிப்பு, வாழ்வாதாரத்தினை மேம்படுத்த உதவிகள், சமுதாய அடிப்படை அமைப்பினருக்கு அலுவலகப்பைகள் வழங்கும் நிகழ்வு என்பன செயலகத்தில் இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸ்ஸமில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், செயலக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி எம்.ஏ.சி.றமீசா, … Read more

சகல பாடசாலைகளும் நாளை முதல் வழமைபோன்று நடைபெறும்

சகல பாடசாலைகளும் நாளை முதல் வழமைபோன்று நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். இதற்கமைவாக மாணவர்களை வழமை போன்று பாடசாலைக்கு அழைக்க முடியும். கொவிட் தொற்றுடன் தொடர்புடைய ஏதாவது பிரச்சினைகள் எழுமாயின், வலய கல்விப் பணிப்பாளரின் தீர்மானத்தின்படி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப்பட்டமளிப்பு விழா

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப்பட்டமளிப்பு விழா நேற்றும் (12) திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களது ஒருங்கிணைப்பில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா அவர்களது தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா கேட்போர் மண்டபத்தில் நேற்று காலை மிகவும் இடம்பெற்றது.  பொதுப்பட்டமளிப்புவிழாவின்போது இம்முறை 1958 உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டதாரி மாணவர்களும், பட்டப்பின் தகைமை பெறுபவர்களும், கௌரவப் பட்டம் பெறுபவர்களும் தமக்கான பட்டத்தினை பெறவுள்ளனர். இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பல்கலைக்கழக மானியங்கள் … Read more

11.03.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு

11.03.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு    

ஓய்வூதியம் பெறுவோருக்கு புதிய நிவாரணத் திட்டம்

ஓய்வூதிய அடையாள அட்டை வைத்திருக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கு கார்கில்ஸ் பூட் சிட்டி ( Cargills food city ) ஊடாக நேற்று நேற்று முன்தினம் (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் நிவாரணத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஓய்வூதியத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள கார்கில்ஸ் புட் சிட்டிகள் ( Cargills food city ) மற்றும் மருந்தகங்களிலும் ( Pharmacy ) ஓய்வூதியம் பெறுவோருக்கு சலுகை விலையில் பொருட்களை கொள்வனவு செய்யும் வாய்ப்பை … Read more

வடகடல் நிறுவன நிர்வாகத்தில் மாற்றம் – இரண்டு வாரங்களுக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு

யாழ்ப்பாணம் – குருநகர் வடகடல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இரு வாரங்களில் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடகடல் நிறுவனத்தில் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஊழியர்கள் குறித்த நிர்வாகத்தினரால் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தருமாறு கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து மகஜர் ஒன்றை  கையளித்திருந்தனர். இதன்போது தமது நிறுவனத்தில் தற்போதுள்ள நிர்வாகம் பாரபட்சமானதும் வினைத்திறனற்றதுமாக இருப்பதால் அதில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தமக்கான … Read more

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு இணையவழி (Online) ஊடாக……….

2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை தொடர்பான பாடங்களுக்குரிய பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்ப இணையவழி (Online) ஊடாக மாத்திரமே சமர்பிக்கவேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2022.03.10 ஆம் திகதி முதல் 2022.03.18 ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களை இணையவழி ஊடாக (Online) சமர்பிக்க முடியும்.