இலங்கைக்கான LNG இயற்கை எரிவாயு விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

ஏற்கனவே திட்டமிட்டபடி, இலங்கைக்கான (LNG) திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நியூ போர்ட்ரெஸ் எனர்ஜி (New fortress Energy) நிறுவனம் தெரிவித்துள்ளது. அனல்மின் நிலைய உடன்படிக்கைக்கு எதிரான மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்தமை தொடர்பில் நிறுவனம்  வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிற்கு அருகாமையில் (LNG) திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு முனையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு நியூ போர்ட்ரெஸ் எனர்ஜி நிறுவனமும் இலங்கை அரசாங்கமும் கடந்த வருடம் (2021) செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் ஒன்றை … Read more

ஏற்றுமதி சந்தையில் இறப்பர் பொருள் தயாரிப்பு தொழிற்சாலை

ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு அவிசாவளை, கெட்டஹெத்த பிரதேசத்தில் இறப்பர்  தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்காக, அசோசியேட் அட்வான்ஸ் இறப்பர் நிறுவனம், இலங்கை முதலீட்டுச் சபையுடன் அண்மையில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.   இந்த திட்டத்திற்காக  5.85 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக அசோசியேட் அட்வான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.    

47 ஆவது தேசிய  விளையாட்டு விழா

47 ஆவது தேசிய மட்ட விளையாட்டு விழாவை முன்னிட்டு முதல் கட்டமாக பிரதேச மட்ட போட்டிகள் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான வலைப்பந்து, கபடி, கிரிக்கெட் மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன. ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்ட கழகங்களின் வீராங்கனைகளை அறிமுகம் செய்யும் ஆரம்ப நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் போட்டிகளை … Read more

எரிபொருள் தொடர்பான பிரச்சினை அடுத்த வாரம் முடிவுக்கு வரும்… திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பும்… எரிசக்தி அமைச்சின் செயலாளர்

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் தீர்க்கப்பட்டு, திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே. டி. ஆர். ஒல்கா அவர்கள் தெரிவித்தார். “வலு சக்தி நாட்டுக்கு ஒரு பலம்” என்ற தொனிப்பொருளில் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்ஹ அவர்களும் கலந்துகொண்ட இந்த ஊடக … Read more

இலங்கை பெண்கள் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் வரலாற்று பங்கு வகித்துள்ளனர் – பிரதமரின் பாரியார் ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்க்ஷ

இலங்கை பெண்கள் சமூக பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் வரலாற்று பங்கு வகித்துள்ளனர் என பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். இந்தோனேஷியாவின் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சினால் (MoWECP) ஜகர்த்தாவில் இணைய தொழில்நுட்பம் ஊடாக நடத்தப்பட்ட ‘ஆற்றல்மிக்க பெண்கள் பேசத் துணிந்தவர்கள்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம் – 2022 சர்வதேச அமர்வில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நேற்று (09) கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமரின் … Read more

ஐந்து தசாப்தங்களின் பின்னர் மாலைதீவிலிருந்து இரத்மலானைக்கு நேரடி விமான சேவை

ஐந்து தசாப்தங்களின் பின்னர் மாலைதீவிலிருந்து கொழும்பு இரத்மலானை விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் 27ம் திகதி தொடக்கம் இந்த விமான சேவை இடம்பெறும்.இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க இதனை தெரிவித்தார். அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக இரத்மலானை விமான நிலையம் இந்தியா மற்றும் மாலைதீவை கேந்திரமாகக் கொண்டு பிராந்திய சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 1938 இல் … Read more

அரசாங்கத்தின் உத்தேச நகர அபிவிருத்தி திட்டங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு….

பல முக்கிய நகரங்களில் செயற்படுத்துவதற்கு  எதிர்பார்க்கப்படும் நகர அபிவிருத்தித் திட்டங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களிடம் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டது. அரசாங்கத்தின் வேலைத் திட்டத்துக்கு அமைய நாட்டின் அபிவிருத்தி இலக்குகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் முக்கிய நகர அபிவிருத்திப் பணிகளை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, துறைசார் நிறுவனங்களுடன் இணைந்து திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டத்தின் கீழ், காலி, பண்டாரவளை, இரத்தினபுரி நகர மத்தி மற்றும் திம்பிரிகஸ்யாய, கோட்டை, … Read more

உண்மைக்கு புறம்பான கூற்றுக்களை வெளியிடுதல் நிறுத்தப்பட வேண்டும்

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் உண்மைக்கு புறம்பான கூற்றுக்களை தெரிவித்தல் மற்றும் நாட்டுக்கு எதிராக உண்மைக்கு எதிரான கூற்றுக்களை வெளியிடுதல் நிறுத்தப்பட வேண்டும் என்று சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நிதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கு சமூகமளிக்காமை தொடர்பில்  ,எதிர்கட்சி பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர்  லக்ஷ்மன் கிரிஎல்ல எழுப்பிய கேள்விக்கு சபை முதல்வர் பதிலளிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.   நிதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சரின் உடன்பாட்டுடன் இராஜாங்க அமைச்சர் … Read more