சீரியல் நடிகை திடீர் மரணம்; அதிர்ச்சியில் சின்னத்திரை!

கயல் சீரியலில் நடித்த நடிகை சுபாஷினி திடீரென உயிரிழந்த செய்தி, சின்னத்திரை ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்ரீலங்காவை சேர்ந்த நடிகை சுபாஷினி, திரைத்துறை மீதான காதலால் இந்தியாவில் தஞ்சமடைந்தார். பெங்களூரில் தான் கணவருடன் வசித்து வந்தவர், கயல் சீரியல் படப்பிடிப்புக்காக சென்னை ஐயப்பன்தாங்களில் தங்கியிருந்தார். சுபாஷினி சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த இவர், சம்பவம் நடந்த நாளுக்கு முன்புவரை சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கும் … Read more

”எட்டு தொகுதிகளையும் ஜெயிக்கப் போறது உறுதி” – தஞ்சாவூர் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர்களான பேராவூரணி அசோக்குமார், பட்டுக்கோட்டை அண்ணாதுரை, ஒரத்தநாடு வைத்திலிங்கம், தஞ்சாவூர் சண்.இராமநாதன் ஆகியோருக்கு வாக்கு கேட்டு தொகுதி வாரியாகப் பிரசாரம் செய்தார். இதில் உதயநிதி பேசியதாவது, “தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் போய், அங்கு இருக்கக்கூடிய மக்கள், கட்சியினரைச் சந்திச்சு நம்முடைய உதயசூரியன் சின்னத்திற்கும், நம்முடைய கூட்டணிச் சின்னத்திற்கும் வாக்கு கேட்டு வர்றேன். எத்தனையோ மாவட்டத்துக்குப் போயிருந்தாலும், இந்தத் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருவது எப்பவும் ஸ்பெஷல்தான். தஞ்சாவூரில் பிரச்சாரத்தில் உதயநிதி … Read more

Mrunal Thakur: "சில படங்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தாலும், 'வேண்டாம்'னு சொல்லிடுவேன்" – மிருணாள்

‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ படங்கள் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர். இந்தப் படங்களின் வெற்றி அடுத்தடுத்த படவாய்ப்புகளை உருவாக்கித் தர, பல படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். தற்போது அவரது நடிப்பில் ‘டகாய்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மிருணாள் தாகூர் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மிருணாள் தாகூர் தன்னுடைய … Read more

சிறப்புப் படை, 12 விமானங்கள், ஹெலிகாப்டர்கள்- ஈரானுக்குள் நுழைந்த அமெரிக்கா விமானியை மீட்டது எப்படி?

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஈரான் மீது அமெரிக்க படைகள் F-15E மூலம் குண்டுகளை வீசியது. அப்போது ஈரான் வான் பாதுகாப்பு தடுப்பு ஏவுகணை மூலம் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இருந்த இரண்டு பேரும் விமானத்தில் இருந்து வெளியில் குதித்து உயிரோடு தப்பித்தனர். அதில் ஒருவரை அமெரிக்கப் படை உடனே மீட்டுவிட்டது. மற்றொருவரைக் கடந்த இரண்டு நாள்களாக அமெரிக்கப் படைகள் சிறப்புப் படை மூலம் ஈரான் மலைப்பகுதியில் தேடி வந்தன. அவரை மீட்க 12 … Read more

"நெதன்யாகு பேச்சைக் கேட்டால் ஒட்டுமொத்த மத்தியக் கிழக்கும் எரியும்" – ட்ரம்பிற்கு ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப், நாளை மாலை 8 மணிக்குள் ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியைப் போக்குவரத்திற்குத் திறந்துவிட வேண்டும் என்று ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே இது போன்று பல முறை ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தும் அதனை ஈரான் கண்டுகொள்ளவில்லை. ட்ரம்ப் விடுத்து வரும் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து ஈரான் பாராளுமன்றத்தின் சபாநாயகர் முகமது-பாகர் கலிபாஃப் வெளியிட்டுள்ள செய்தியில், ”உங்கள் பொறுப்பற்ற நடவடிக்கைகள் அமெரிக்காவின் ஒவ்வொரு குடும்பத்தையும் வாழும் … Read more

லிஃப்டில் (Lift) கண்ணாடி வைப்பது எதற்காக? – இது தெரியாமப் போச்சே?! – 14

லிஃப்ட்களில் பயணம் செய்யும்போது நம்மில் பலரும் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தபடி செல்வது வழக்கம். ஆனால், கண்ணாடி வைக்கப்பட்டதன் பின்னணியில் உளவியல் தந்திரமும், அறிவியல் காரணங்களும் உள்ளன. உலகெங்கும் உயரமான கட்டடங்கள் கட்டப்பட்ட தொடக்க காலத்தில் லிஃப்ட்கள் மிக மெதுவாகச் செயல்பட்டன. இதனால் மக்கள் லிஃப்டில் பயணம் செய்யும்போது, நேரம் அதிகம் ஆவதாகவும் சலிப்பாக இருப்பதாகவும் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதற்காக லிஃப்டின் மோட்டார்களை மாற்றி வேகத்தை அதிகரிப்பது பல தொழில்நுட்ப சிக்கல்களையும், மிகப்பெரிய பொருட்செலவையும் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. … Read more

“என் மகன் அல்ல, நானே வேட்பாளர்; நாளை மனு தாக்கல் செய்கிறேன்’’ – ராணிப்பேட்டை காந்தி எக்ஸ்க்ளூசிவ்!

ராணிப்பேட்டை தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி. இவர், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளராகவும் கட்சிப் பொறுப்பு வகிக்கிறார். கடந்த 1996-ல் முதல் முறையாக ராணிப்பேட்டை தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார் காந்தி. அதைத்தொடர்ந்து, 2001 தேர்தலில் தோல்வி, 2006-ல் மீண்டும் வெற்றி, 2011-ல் மீண்டும் தோல்வி, 2016 தேர்தலில் வெற்றி என ஒருமுறை வெற்றி, மறுமுறை தோல்வி என தனது அரசியல் வரலாற்றை எழுதிக்கொண்டிருந்தார் காந்தி. `ராணிப்பேட்டை தொகுதியின் சென்டிமென்ட் இதுதான்’ … Read more

தத்தளித்த ஹைதராபாத்; தட்டித்தூக்கிய லக்னோ! – எப்படி வென்றது பண்ட் & கோ?

இந்த மேட்ச்சும் தோற்றால் ஓனரிடம் கைகட்டி பதில் சொல்ல வேண்டும் என்ற நெருக்கடி ஒரு பக்கம், சொந்த மண்ணில் எப்படியாவது இரண்டு புள்ளிகளைப் பெற்றாக வேண்டும் என்ற கட்டாயம் இன்னொரு பக்கம் என, லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகள் இன்று ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதின. டாஸ் வென்றால் பந்துவீச்சை மட்டும்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கேப்டன்களுக்கெல்லாம் யார் சொன்னார்களோ தெரியவில்லை, எல்லாப் போட்டிகளிலும் பந்துவீச்சை மட்டும்தான் தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள். அதேபோலத்தான் இன்றும் டாஸ் … Read more

1972 Vs 2026: தொழில்நுட்பம் மாறினாலும் மாறாத பூமியின் வசீகரம் – நாசாவின் வரலாற்றுப் பதிவு!  

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, ‘அப்போலோ’ விண்கலத்தில் சென்ற வீரர்கள் நிலவில் கால் தடம் பதித்தபோது, ஒட்டுமொத்த உலகமே வியப்பில் உறைந்து போனது. அந்த வரலாற்றுத் தருணத்திற்குப் பிறகு, மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின் பிரமாண்டமான கனவுதான் இந்த ஆர்டெமிஸ் II  திட்டம். இது வெறும் விண்வெளிப் பயணம் மட்டுமல்ல; தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சிக்கும் சான்றாக அமையப்போகும் ஒரு புதிய சகாப்தம்.  தற்போது நிலவை நோக்கிப் பயணிக்கும் பாதையில் உள்ள இந்த விண்கலம், சமீபத்தில் … Read more