நாமக்கல்: `வயிற்றுவலி' எனச் சென்றவருக்கு ஊசி போட்ட ஹோமியோபதி டாக்டர்; மயங்கி விழுந்து இறந்த நபர்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சிங்கிலிகோம்பை அருகே வேம்பாகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் காங்கமுத்து (39). இவர், அதே பகுதியிலுள்ள ஆவின் பாலக சொசைட்டியில் பணிபுரிந்துவருகிறார். இவருக்கு, மஞ்சு என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். அதே போல், சிங்கிலிகோம்பை அருகேயுள்ள வேம்பாகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (39). இவர், அதே பகுதியில் உள்ள வாழப்பாடி சாலையில் சக்தி ஹோமியோபதி கிளினிக் என்ற பெயரில் கிளினிக் ஒன்றை நடத்திவருகிறார். காங்கமுத்து இன்று காலை சக்திவேலின் கிளினிக்குக்கு … Read more

Daily Horoscope | Today Rasi Palan | January – 06 | வெள்ளிக்கிழமை | இன்றைய ராசிபலன் | 06.01.23

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

ஜம்மு காஷ்மீருக்கு கூடுதலாக 1,800 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்… மத்திய அரசு நடவடிக்கையின் பின்னணி என்ன?

கடந்த சில வாரங்களாக, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. அதனால், சி.ஆர்.பி.எஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 1,800 வீரர்களை மத்திய அரசு அங்கு அனுப்பியிருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில வாரங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில், துணை ராணுவப் படை வீரர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவிப் பொதுமக்களும் உயிரிழந்திருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் 2023-ம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ம் தேதி மாலை … Read more

கொடைக்கானல்: புத்தாண்டு கொண்டாட்டம்; போதை காளான் தேடி காட்டுக்குள் சிக்கிய இளைஞர்கள் – நடந்தது என்ன?

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும்​​ கொடைக்கான​ல் மலையின் இயற்கை அழகையும், இதமான குளிரையும் ரசிக்க கோடை காலம் மட்டுமல்லாது அனைத்து காலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். அதே வேளையில் கொடைக்கானல் மலையில் கிடைக்கக்கூடிய போதை காளான்களை ருசிப்பதற்காகவும் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் இளைஞர்கள் படையெடுக்கின்றனர்.  காட்டுக் காளான் ​அந்த வகையில், புத்தாண்டை கொண்டாடுவதற்காக கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்திலிருந்து ​5 ​இளைஞர்கள் கொடைக்கான லுக்கு வந்துள்ளனர்​. அவர்களில் 2 இளைஞர்கள் வனப்பகுதிக்குள் சிக்கி 3 நாள்களுக்குப் பிறகு … Read more

"நாங்க ஆட்சிக்கு வந்தா, வேற மாதிரி இருக்கும்..!" – காவல்துறையை எச்சரிக்கும் வேலுமணி

கோவை, மாதம்பட்டி பகுதியில் சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து, அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “திமுக-வினர் எல்லா பக்கமும் லஞ்சம் வாங்குகிறார்கள். அதிமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு இல்லை. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என மக்கள், அரசு அதிகாரிகள் நினைக்கின்றனர். அதிமுக ஆர்ப்பாட்டம் கோவை: ஆசியாவிலே மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி திருவுருவம்; மரண பயம் நீக்கும் அற்புதத் தலம்! திமுக ஆட்சியில் … Read more

கரூர்: போதை மாத்திரை விற்றதாகக் கிடைத்த ரகசிய தகவல்… அதிமுக பிரமுகர் போலீஸில் சிக்கியது எப்படி?

கரூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் போதைப்பொருள்களின் விற்பனையைத் தடுப்பதற்கு, கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கரூர் தான்தோன்றிமலை, பசுபதிபாளையம், தொழிற்பேட்டை, காந்திகிராமம், கணபதிபாளையம் உள்ளிட்டப் பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அப்படி, … Read more

ம.பி: அனஸ்தீசியா செலுத்திக் கொண்டு தற்கொலைசெய்த பெண் மருத்துவர் – போலீஸ் விசாரணை

மத்தியப் பிரதேசத்தின், போபாலில் அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரியின் விடுதியொன்றில், 24 வயது பெண் மருத்துவரொருவர் தனக்குத்தானே ஊசி மூலம் நான்கு டோஸ் மயக்க மருந்து (Anaesthesia) செலுத்திக்கொண்டு உயிரிழந்ததாக போலீஸார் இன்று தெரிவித்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான தகவலின்படி, காந்தி மருத்துவக் கல்லூரியின் (ஜி.எம்.சி) விடுதியில் பெண் மருத்துவர் தற்கொலை செய்திருக்கிறார். தற்கொலை தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர், குழந்தை மருத்துவ (paediatrics stream) பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்துவந்திருக்கிறார். புதன்கிழமை காலை … Read more

பட்ஜெட் கோரிக்கைகள்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?

விரைவில் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தயாரிப்பு வேலைகளில் நிதி அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தொழில் கூட்டமைப்புகள் சார்பாக பட்ஜெட் கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் முன்வைப்பது வழக்கம். ஜெர்மனியில் நடைபெறும் உலக ஜவுளி கண்காட்சி… கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்பு! அந்தவகையில் தமிழகத்தின் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பாக அதன் தலைவர் வ.நாகப்பன் சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துள்ளார். நிதியமைச்சரிடம் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் முன்வைத்த … Read more

“நாங்க பண்றது வேற லெவல் காமெடி!" – The Hysterical Improv Comedy ட்ரூப்

காமெடி என்றதும் உங்களுக்கு சட்டென யார் நினைவுக்கு வருவார்கள்? வடிவேல், கவுண்டமணி, செந்தில், விவேக், சந்தானம், சூரி… இந்த வரிசையில் இப்போது லேட்டஸ்டாக யோகிபாபுவும், ரெடின் கிங்க்ஸ்லியும் இணைந்திருக்கிறார்கள். பெண் காமெடி நட்சத்திரங்களை மனோரமா, கோவை சரளா என விரல்விட்டு எண்ணிவிடலாம். காமெடி! அப்போ இப்போ – 8 : `கோவை சரளா எங்க நாடக ட்ரூப்பைச் சேர்ந்தவங்கதான்!’ – கோவை அனுராதா நாம் பெரும்பாலும் விரும்பிப் பார்க்கும் திரைத்துறையிலேயே இந்த நிலை இருந்து வருகிறது. இதில் … Read more