`3000 பக்க ஆவணங்கள், 120 பக்க குற்றப்பத்திரிகை' – செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ED!

அமைச்சர் செந்தில் பாலாஜியை, பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கைதுசெய்த விவகாரத்தில், செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் அமலாக்கத்துறைக்குச் சாதகமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து, இதய அறுவை சிகிச்சை முடிந்து உடல்நல தேறிவந்த செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி அதையடுத்து, செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றமும் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது. அதன்படி, செந்தில் பாலாஜியின் சகோதரர்கள், உறவினர்கள் … Read more

சிறுமியை கவ்விச்சென்றது கரடியா, சிறுத்தையா? – திகில் கிளப்பும் திருப்பதி மலைப்பாதை

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்திலுள்ள போத்திரெட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர், மனைவி சசிகலா மற்றும் 6 வயதான மகள் லக்‌ஷிதா ஆகியோருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நேற்றிரவு புறப்பட்டுவந்தார். இரவு 7.30 மணியளவில், அலிபிரி நடைபாதை வழியாகச் சென்றனர். இரவு 11 மணியளவில், நரசிம்மசாமி கோயிலை அடைந்தனர். அப்போது, உடன் வந்த மகள் லக்‌ஷிதா திடீரென மாயமானதைக் கண்டு, பெற்றோர் அதிர்ந்துபோயினர். பக்தர்கள் கூட்டத்தில் நீண்ட நேரமாக தேடியும், மகளை கண்டுபிடிக்க முடியாததால், போலீஸாருக்குத் … Read more

“ 20 வருடங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்ட கமல்ஹாசனின் ஹாலிவுட் தயாரிப்பு" – பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் படங்களுக்கு மட்டுமின்றி பாலிவுட் படங்களுக்கு இசையமைத்து இருந்தாலும் அவர் ஒரேடியாக பாலிவுட் பக்கம் செல்லாமல் தொடர்ந்து தமிழ் மற்றும் பாலிவுட் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் மும்பையில் குடியேற வாய்ப்புக்கள் அதிக அளவில் இருந்தது. ஆனால் அவர் மும்பையில் குடியேறவில்லை. இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, “மாபியா கலாச்சாரம் காரணமாகவே மும்பையில் குடியேறவில்லை. நான் மும்பையில் குடியேறப்போவதாக நினைத்து ஆந்திராவைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் 1994ம் … Read more

சென்னை: `குதிரைகளுக்கு ஊசி வழியே மைக்ரோ சிப்!' – பின்னணி என்ன?

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் சார்பாக சென்னையில்  129 குதிரைகளுக்கு ஊசி மூலம் மைக்ரோ சிப் செலுத்தும் பணியை திரைப்பட இயக்குநர் கிருத்திகா உதயநிதி தொடங்கி வைத்தார். அடுத்த கட்டமாக சென்னையைத் தாண்டி பிற இடங்களிலும் குதிரைகளுக்கு மைக்ரோசிப் செலுத்தும் பணி தொடரும் என்று இந்நிகழ்ச்சியில் அவர் கூறினார். குதிரைகளுக்கு மைக்ரோசிப் ”சென்னை கடற்கரைகளில் மக்களின் பொழுதுபோக்கிற்காகவும், சுற்றுலாவுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வரும் குதிரைகள் பல வைரஸ் பாதிப்புகளுக்கும், கடற்கரையில் இருக்கும் ப்ளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் … Read more

3 ஆண்டுகளில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு… பசுமைக்காடாக மாறிய ஊராட்சி!

திருப்பூர் மாவட்டத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், வெற்றி அமைப்பினர் `வனத்துக்குள் திருப்பூர்’ திட்டத்தின் மூலம் விவசாய நிலங்கள் மற்றும் பொது இடங்களில் இலவசமாக மரக்கன்றுகளை நடவு செய்து தொடர்ச்சியாக பராமரித்து வருகின்றனர். அவர்கள் செய்துவரும் பணியின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கரியாஞ்செட்டிபாளையம் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பாலாற்றின் கரையில் கடந்த 3 ஆண்டுகளில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளனர். அந்த கிராமமே இப்போது பசுஞ்சோலையாக மாறியுள்ளது. … Read more

பஞ்சகவ்யா, மண்புழு உரம், பம்ப்செட் குளியல்; இயற்கை விவசாயத்தை கற்றுக் கொள்ள நேரடி பயிற்சி!

நஞ்சில்லாத காய்கறிகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணமுடைய பலர் இயற்கை விவசாயத்தைத் தேர்ந்தெடுத்து செய்து வருகின்றனர். அதேபோன்று விவசாயத்தில் செலவைக் குறைக்க வேண்டும் என்று நினைக்கும் விவசாயிகள் இயற்கை விவசாயத்தைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர். இறையழகன் பண்ணை வானிலை, பருவநிலை மாற்றத்தை கணிக்க உதவும் நண்டுகள்… சுவாரஸ்ய பின்னணி! | காடும் கற்பனைகளும் -17 விவசாயிகள் மற்றும் இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள அனைவரும்  லாபம் பெற வேண்டும் என்ற நோக்கில், “லாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம்!” என்ற … Read more

மும்பை விமான நிலையத்தில் சிக்கிய உகாண்டா பிரஜை… வயிற்றில் ரூ.7.85 கோடி மதிப்பு கொகைன் மாத்திரைகள்

ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த சில பிரஜைகள் போதைப்பொருள்களை பல்வேறு வழிகளில் இந்தியாவுக்கு கடத்தி வருகின்றனர். அதில் போதைப்பொருள் அடங்கிய மாத்திரைகளை விழுங்கி எடுத்து வருவது ஒரு வகையாகும். உகாண்டாவில் இருந்து வரும் ஒருவர் போதைப்பொருள் கடத்தி வருவதாக மும்பை விமான நிலைய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உகாண்டாவில் இருந்து வந்த ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். இதில் அவரிடம் போதைப்பொருள் எதுவும் இல்லை. ஆனால் அவர்தான் போதைப்பொருள் … Read more

Tamil News Today Live: 'நடுக்கத்தை ஏற்படுத்துகிறது; மாணவர்களிடம்கூட சாதிய நச்சு ஊடுருவியிருக்கிறது!' – முதல்வர் ஸ்டாலின்

`வெறுப்பும் ஏற்றத்தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை உணர்ந்து நடக்க வேண்டும்!’ – முதல்வர் ஸ்டாலின் நாங்குநேரியில் பட்டியலின மாணவர் கொடூரமான முறையில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களால் தாக்கப்பட்ட விவகாரம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்துக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம்கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவியிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் … Read more

"மோடி ஓர் உத்தரவாதம் கொடுத்தால் அதை நிறைவேற்றிக் காட்டுவார்" என்ற பிரதமரின் கருத்து? – ஒன் பை டூ

செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்“வெறும் பொய் புரட்டுகளைப் பேசி, மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்தவர் மோடி. இந்த ஒன்பது ஆண்டுகளில் பா.ஜ.க., சொன்ன ஒரு தேர்தல் வாக்குறுதியையாவது நிறைவேற்றியிருக்கிறதா… `இரண்டு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்’ என்றார்கள். அதற்கு நேர்மாறாக இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் மொத்தமாக நசுக்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை வேலையிழந்து தெருவில் நிற்கவைத்திருக்கிறது பா.ஜ.க அரசு. அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போட்டார்களா… `பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்படும்’ என்றார்கள், … Read more

நாங்குநேரி சாதியக் கொடுமை; “வன்கொடுமைப் பகுதியாக அறிவித்து, பாதுகாப்பளிக்க வேண்டும்!" – திருமாவளவன்

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் சின்னதுரை. வள்ளியூர் அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வகுப்புத் தோழர்கள் சிலரால் சின்னதுரை சாதிரீதியிலான கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இதனால் பள்ளிக்குச் செல்வதையும் தவிர்த்திருக்கிறார். ஆசிரியர்கள், சின்னதுரையிடம் விசாரித்ததில், நடந்த விவரங்களைத் தெரிவித்திருக்கிறார். ஆசிரியர்களும் சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்துக் கண்டித்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட சிறுவன் இதனால் ஆத்திரமடைந்த மாணவக் குழு ஒன்று சின்னதுரையின் வீட்டுக்குள் இரவு 10:30 மணியளவில் புகுந்து, சின்னதுரையையும், அவரின் தங்கையையும் சரமாரியாக வெட்டியிருக்கிறது. அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவர்களை மீட்டு நாங்குநேரி அரசு … Read more