“நாடாளுமன்றத்தில் திமுக-வின் குரலைக் கேட்டாலே பாஜக நடுங்குகிறது!" – முதல்வர் ஸ்டாலின்

சமீப நாள்களாக மத்தியில் ஆளும் பாஜக உறுப்பினர்கள் முதல் பிரதமர் வரை, தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் ஊழல் என்றால் திமுக தான் என்று விமர்சித்துவருகிறது. பிரதமர் மோடி கூட, குடும்ப ஆட்சி என மத்திய பிரதேசத்தில் நடந்தகூட்டத்தில் திமுக-வை டார்கெட் செய்தார். நேற்று நாடாளுமன்றத்தில், ஊழல் என்றால் தி.மு.க-வை திரும்பிப் பாருங்கள் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியிருந்தார். இவ்வாறு பா.ஜ.க, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயெனும், வெளியேயும் தி.மு.க-வை குறிவைத்துப் பேசிவருகிறது. முதல்வர் ஸ்டாலின் இந்த … Read more

“அஜித் எடுத்த தவறான முடிவு இதுதான்!"- விமர்சகர் கருத்துக்கு பதிலடி கொடுத்த நடிகை காயத்ரி

அஜித் நடிப்பில், ஹெச்  வினோத் இயக்கத்தில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’.    ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்தப் படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். படம் வெளியாகி நேற்றுடன் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்நிலையில் நேற்று படம் குறித்தான சில விஷயங்களை இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வந்தனர். நேர்கொண்ட பார்வை அஜித்தின்  நேர்கொண்ட பார்வை நான்கு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.  ஒரு குடும்ப … Read more

ஏவுகணைகளுக்கு எதிராக 19 ஆண்டுகள் நீடித்த தாய்மை போராட்டம்… | போராட்டக்களத்தில் பெண்கள்- 4

தங்கள் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராகப் போராடினாலும், சமூகத்தில் நிகழும் மனித உரிமை மீறலுக்கு எதிராகப் போராடினாலும் சரி… பெண்களின் போராட்டம் எப்போதும் வீரியமானதாகவே இருக்கிறது. சமையல், குழந்தை வளர்ப்பு ஆகியவற்றை பெண்களுக்கு மட்டும் உரியதாக்குவது தவறான போக்காக இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் அதுதான் நடைமுறையில் உள்ளது. ஆதலால் தங்கள் குழந்தைகளின ஆரோக்கியமான எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கும் போது பெண்கள் வெகுண்டு எழுகின்றனர். லண்டனில் நடந்த தாய்மையின் போராட்டம்தான் இந்த வார போராட்டக்களத்தின் பகிர்வு. பதாகைகள் நீட், கல்விக் கொள்கை, … Read more

`இணையம் இலவசம்’ – கேரளாவில் தொலைதொடர்பு பொதுத்துறை நிறுவனம்… தமிழகத்திலும் சாத்தியமா?!

தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கேரள மாநிலத்துக்கு அரசு பயணமாக சென்றுள்ளார். அங்கு, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்(TANFINET) வாயிலாக அதிவேக இணைய வசதி மேற்கொள்வது பற்றி கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் (KFON) நிறுவனத்திடம் கேட்டறிந்தார். ’கேஃபோன்’ என்னும் நிறுவனத்தின் வாயிலாக ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில்  இணைய சேவை வழங்க கேரள அரசு திட்டமிட்டிருக்கிறது. இது பற்றி தெரிந்துகொள்வதற்கே தமிழக அமைச்சர் … Read more

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான மக்களவை விவாதத்தில் நடந்த சில `தரமான’ சம்பவங்கள்!

நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்து ராகுல் காந்தி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. விவாதத்தை ராகுல் காந்திதான் தொடங்கிவைப்பதாக இருந்தது. ஆனால், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்.பி-யான கௌரவ் கோகோய் தான் விவாதத்தைத் தொடங்கிவைத்துப் பேசினார். ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்ற முதல் நாளன்று, அவையில் பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ இல்லை. அதனால், ராகுல் காந்தி பேசும் நேரத்தை காங்கிரஸ் கட்சி மாற்றியது. ராகுல் … Read more

Doctor Vikatan: மெதுவாக நடந்தாலும் முதியோர் அதிகம் சறுக்கி விழுவது ஏன்?

Doctor Vikatan: ஈரமான தரைகள் மற்றும் பாத்ரூம்களில் எல்லோரும் புழங்கினாலும் மெதுவாக நடக்கும் வயதானவர்களுக்கு அதிகம் சறுக்கி விடுவது ஏன்? Meenakshi Mohan, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் ஈரம் எங்கிருந்தாலும் அந்தப் பகுதிகளில் பூஞ்சைத் தொற்று ஏற்படும். அது படிகிற இடங்களில் மென்மையான படலம் ஏற்பட்டு, கால்களை ஊன்றும்போது பிடிமானம் இல்லாமல் வழுக்கிவிடும். அதனால்தான் குளியலறை, கழிவறை போன்றவற்றை உபயோகித்து முடித்ததும் ஈரமில்லாமல் சுத்தமாக … Read more

Jailer:`ரஜினி சார் என்னைக் கட்டிப்பிடிச்சு பாராட்டினார்'- ஜெயிலர் பட அனுபவம் பகிரும் அறந்தாங்கி நிஷா

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாக இருக்கும் திரைப்படம் `ஜெயிலர்’. இந்தத் திரைப்படத்தில் விஜய் டிவியில் நமக்குப் பரிச்சயமான அறந்தாங்கி நிஷாவும் நடித்திருக்கிறார். இந்தப் பட புரொமோ வீடியோவிலேயே நிஷா வந்திருந்தார். `அடடே இவங்க `ஜெயிலர்’ல நடிக்கிறாங்களா?’ என அவரின் ரசிகர்கள் எல்லாரும் கொண்டாட அவரிடமே இது தொடர்பாகப் பேசினோம். அறந்தாங்கி நிஷா “நெல்சன் சாருடைய அசிஸ்டெண்ட் டைரக்டர் மணிதான் என்கிட்ட பேசினார். சாருடைய படம்… போலீஸ் கேரக்டர்னு சொன்னார். நெல்சன் சார்தான் ‘கோலமாவு கோகிலா’ படத்துல எனக்கு வாய்ப்பு … Read more

சென்னை மாநகராட்சி: துப்புரவு பணிகளில் கோடிகளில் முறைகேடா?! – குற்றச்சாட்டும் விளக்கமும்

சென்னை மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில் பணிபுரியும் துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் முறையாக வேலைக்கே வராமல் பயோ மெட்ரிக் வருகை பதிவேட்டில் தொடர்ந்து முறைகேடு செய்து வருவதாகவும், இதனால் மாதம் தோறும் லட்சக்கணக்கில் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. சென்னை மாநகராட்சி- இந்த முறைகேடு தொடர்பாக நம்மிடையே பேசிய பொதுநல வழக்கறிஞர் ருக்மாங்கதன், “கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகராட்சி துப்புரவு துறையில் நடக்கும் வருகை பதிவேடு ஊழல் முறைகேடுகளை பற்றி வாட்ஸ் … Read more

4.5 ஏக்கர்… 4 மாதங்கள், ரூ.1,60,000… லாபம் கொடுக்கும் பாரம்பர்ய நெல் சாகுபடி!

கடலூர் மாவட்டம், ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர், விவசாயி சிவக்குமார். கடந்த பத்து ஆண்டு களுக்கும் மேலாக இயற்கை விவசாயம் செய்து வரும் இவர், நான்கரை ஏக்கரில் வெள்ளைப் பொன்னி, கறுப்புக்கவுனி உள்ளிட்ட பாரம்பர்ய நெல் ரகங்கள் உற்பத்தி செய்து, அதை அரிசியாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறார். இவருடைய அனுபவங்களை அறிந்து கொள்ள ஒரு காலைப்பொழுதில் இவரைச் சந்திக்கச் சென்றோம். இவருடைய வீடும் பண்ணையும் ஒருங்கிணைந்து அமைந் துள்ளன. வரப்பில் நடைபோட்டவாறு, நெற்பயிர்களைப் … Read more

70 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி | வேட்டி சட்டையில் அசத்திய ஹாக்கி கேப்டன்கள்! – News In Photos

திருநெல்வேலி: இந்துக் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில், ரயில் நிலையம் முன்பாக வெளிநாட்டு பொருள்களை வாங்குவதைத் தவிர்த்து, உள்நாட்டு தாயரிப்புகளை வாங்க வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை தாங்கி நின்றனர். நீலகிரி: ஊட்டியிலுள்ள பழங்குடியினர் நலம் கல்லூரி மாணவியர் விடுதியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வுமேற்கொண்டார். நீலகிரி: ஊட்டியிலுள்ள பழங்குடியினர் நலம் கல்லூரி மாணவியர் விடுதியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வுமேற்கொண்டார். நீலகிரி: ஊட்டியிலுள்ள பழங்குடியினர் … Read more