கால்நடைகளை திருடிச் செல்வதற்கு இடையூறு; நாய்களை விஷம் வைத்துக் கொன்ற கொடூரம்! – போலீஸ் விசாரணை
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள போத்தம்பாளையம் பகுதியில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் அதிகமானோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் சில மாதங்களாக இரவில் வந்து ஆடு, கோழிகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, போத்தம்பாளையம் பகுதியில் கர்ணன், ராஜசேகர், ராஜேஷ்குமார் ஆகியோரின் தோட்டங்களில் இருந்த 2 நாய்கள் மர்மான முறையில் இறந்துகிடந்தன. விஷம் மேலும், ஒரு நாய் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இது தொடர்பாக போலீஸில் … Read more