சர்ச் நிகழ்ச்சியில் சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு; கேட்டரிங் நிறுவன லைசன்ஸ் ரத்து!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளி செயின்ட் தாமஸ் சர்ச்சில் கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 29) ஞானஸ்நானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 190 பேருக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. அதை சாப்பிட்ட சுமார் நூறு பேருக்கு ஒவ்வாமையும், உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. சுமார் 70 பேருக்கும் மேல் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் இவர்கள் ரானி, அடூர், கொம்பநாடு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். … Read more

குஜராத்: தன் மூன்று மாத குழந்தையை 3-வது மாடியிலிருந்து வீசிக் கொன்ற தாய் – நடந்தது என்ன?!

குஜராத்தில் தன்னுடைய 3 மாத குழந்தையை, மருத்துவமனையின் 3-வது மாடியிலிருந்து கீழே வீசிக்கொன்ற 23 வயது தாயை போலீஸார் கைதுசெய்தனர். இது தொடர்பாக வெளியான தகவலின்படி, அகமதாபாத்திலுள்ள சிவில் மருத்துவமனையில் இந்த சோக சம்பவம் நடந்திருக்கிறது. மூன்று மாத குழந்தை முதலில் தன்னுடைய குழந்தை காணாமல் போய்விட்டதாக நாடகமாடிய ஃபர்ஸானாபானு மாலேக் எனும் அந்தப்பெண், போலீஸ் விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து பேசிய கூடுதல் காவல் ஆணையர் பி.பி.பிரோஜியா, “பெட்லாட் தாலுகாவைச் சேர்ந்த ஃபர்ஸானாபானு மாலேக், … Read more

குளிர்காலத்தில் வயதானவர்களைத் தாக்கும் நோய்கள்… தடுப்பு முறைகள்,தீர்வுகள்!

தற்போது பனிக்காலம் நிலவுகிறது. இச்சூழலில் சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இதனால் பாதிக்கப்படுவர். இந்த நிலையில், மழை மற்றும் குளிர்காலங்களில் வயதானவர்களுக்கு வரும் நோய்கள் மற்றும் அவற்றைத் தடுக்கும் முறைகள், அவர்களுக்கான அவசரகால சிகிச்சை முறைகள் பற்றி சென்னையைச் சேர்ந்த தலைமை தீவிர சிகிச்சை மருத்துவர் அஜித்குமாரிடம் கேட்டோம்… தலைமை தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் அஜித்குமார் “குளிர்காலத்தில் வயதானவர்களுக்கு வரும் உடல்நல குறைவுகளை, ஆங்கில எழுத்துகளான A முதல் … Read more

என்.எல்.சி போராட்டக் களத்தில் அரசியல் கட்சிகள் காட்டும் தீவிரம்… பின்னணி என்ன?

இந்தியாவில் லாபம் ஈட்டும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று கடலூர் மாவட்ட ‘நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி).’ ஆனால் இன்று பல உயிர்களை விழுங்கும் இடமாக மாறியிருக்கிறது. `கடந்த 2016-2020 ஆண்டுவரை கொதிகலன் வெடித்தது, கன்வேயர் பெல்ட்டில் தீ விபத்து, பாய்லர் வெடிப்பு காரணம் என 29 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த மரணங்களுக்குத் தனிமனித கவனக்குறைவு காரணம் என அலட்சிய பதில்களை உதிர்க்கிறார்கள்’ என்கிறார்கள் மக்கள். வேறு எந்த அனல்மின் நிலையத்திலும் ஏற்படாத விபத்துகள் நடப்பது நிர்வாகச் … Read more

குடும்ப தகராறு: அண்ணியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற வாலிபர் – திருவள்ளூரில் அதிர்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகில் உள்ள கன்னிகைப்பேரைச் சேர்ந்தவர் திராவிட பாலு. இவர் கன்னிகைப்பேர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், எல்லாபுரம் திமுக-வின் ஒன்றிய செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு திராவிட பாலு பட்டப்பகலில் பெட்ரோல் குண்டு வீசி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். திராவிட பாலு தற்போது அவரின் தம்பி சத்தியவேலு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக பதவி வகித்துவருகிறார். மேலும், சத்தியவேலு குடும்பத்துக்கும், திராவிட பாலு குடும்பத்துக்கும் நீண்ட நாளாக முன்விரோதம் … Read more

வாழ்க மினிமலிசம்!

`தேவைக்கு அதிகமானதை நாடுவதில்லை’, `அவசியத்துக்கும் அதிகமாக வாங்கிக் குவிப்பதில்லை’ என்பதை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்போ தெல்லாம், எதிலெல்லாம், எங்கெல்லாம், எப்படியெல்லாம் பின்பற்றுகிறீர்கள்… அதன் மூலமாக அடைந்த பலன்கள் என்னென்ன? அந்த ரகசியங்களை மற்றவர்களுக்கும் பகிரலாம் என்று அறிவித்திருந்தோம். வாசகர்கள் அனுப்பிய வற்றில் சென்னையைச் சேர்ந்த எம்.டி.யு.மகேஸ்வரி எழுதிய இந்த பகிர்வு விகடன் குழும இணைய தள ஆறு மாத சந்தா சிறப்புப் பரிசு பெறுகிறது. டூத் பேஸ்ட், ஷேவிங் க்ரீம் போன்றவற்றை துளி அளவு பிரஷ்ஷில் … Read more

Daily Horoscope | Today Rasi Palan | January – 03 | செவ்வாய்க்கிழமை | இன்றைய ராசிபலன் | 03.01.23

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

அதிகாலையில் கதவை தட்டிய மர்ம நபர்கள்; திறந்த ஊராட்சித் தலைவருக்கு நேர்ந்த சோகம்! – என்ன நடந்தது?

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகேயுள்ள கொண்டக்கரை ஊராட்சி மன்றத் தலைவராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த மனோகரன் பொறுப்பு வகித்து வந்தார். இவர் கடந்த மே மாதம் தன்னுடைய குடும்பத்துடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, காரை ஒரு லாரி மோதியது. அப்போது லாரியிலிருந்து இறங்கிய 10 பேர் கொண்ட கும்பல் மனோகரனை அவரின் மனைவி, மகள்களின் கண்முன்னே சரமாரியாக வெட்டிப் படுகொலைசெய்தது. படுகொலை செய்யப்பட்ட மனோகரன் இந்த கொலை சம்பவத்தில் குண்டர் வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைதுசெய்யப்பட்ட ஏழு பேர் சிறையில் இருக்கின்றனர். … Read more

புத்தாண்டு ட்ரீட் கொடுப்பதாக அழைத்த இளைஞர்; நம்பிச் சென்ற இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

திருவள்ளூரை அடுத்த சீயஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கும் திருவள்ளூர் காக்களுர் சாலையில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகிவந்தனர். இந்த நிலையில், புத்தாண்டையொட்டி இளம்பெண்ணுக்கு ட்ரீட் கொடுப்பதாகக் கூறி விஜய், ஆட்டோவில் சீயஞ்சேரியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு ஏற்கெனவே விஜய்யின் நண்பர்கள் சாம்ராஜ், சதீஷ் ஆகியோர் இருந்தனர். “பெண் காவலருக்கு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு…” – எடப்பாடி, அண்ணாமலை … Read more

“கோபாலபுரம் பாய்ஸைவிட மாட்டேன்; இதுவரை நடந்த ஊழல்களுக்கு அக்கவுன்ட் கேட்பேன்!" – அண்ணாமலை

தருமபுரியில் இன்று மாலை மாவட்ட பா.ஜ.க சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் ராமலிங்கம், மற்றும் மாநில, மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ‘‘சென்னையில் ஒரு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், எம்.பி கனிமொழி பங்கேற்றார். கூட்டத்திலிருந்து ஒரு பெண் காவலருக்கு, இரண்டு தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்திருக்கின்றனர். பெண் காவலர்கள்மீது கைவைத்த அயோக்கியர்கள் மீது, இதுவரை ஒரு வழக்குகூட பதிவுசெய்யவில்லை. … Read more