`வருமானத்துக்கு அதிகமான சொத்து’ – முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் ரெய்டு

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011-16, 2016 – 21 வரை இருமுறை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே.பி.பி.பாஸ்கர். கடந்த சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க சார்பில் நமக்கல் தொகுதியில் நின்று, தி.மு.க ராமலிங்கத்திடம் தோல்வியை தழுவினார். அதோடு, இவர், அ.தி.மு.க நாமக்கல் நகரச் செயலாளராகவும் இருக்கிறார். இந்நிலையில், இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 4.72 கோடி வரை சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்த லஞ்சஒழிப்புத்துறையினர், இவர் சம்பந்தப்பட்ட 26 இடங்களில் இன்று சோதனை நடத்தி … Read more

“எதிர் தாக்குதல் குறித்து யாரிடமும் பகிர வேண்டாம்" – ராணுவ அதிகாரிகளுக்கு ஜெலன்ஸ்கி உத்தரவு

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 6 மாதங்களாகத் தொடர்ந்து போர் நடைபெற்றுவரும் நிலையில், `போர் குறித்து செய்தியாளர்களிடம் எதையும் பகிர வேண்டாம்’ என ராணுவ அதிகாரிகளுக்கு ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். முன்னதாக கடந்த செவ்வாயன்று கிரிமியாவில், ரஷ்ய ராணுவ தளத்தின் மீது பெரும் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்திருக்கிறது. பின்னர் இந்த தாக்குதல் குறித்து வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட செய்தித்தாள்கள், அடையாளம் தெரியாத அதிகாரிகளை மேற்கோள்காட்டி உக்ரேனியப் படைகள் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறியது. ஆனால், … Read more

வனத்துறை அமைச்சர் தொகுதியில் வெட்டி சாய்க்கப்படும் சோலை மரங்கள்… தோட்ட உரிமையாளர் மீது வழக்கு!

பல லட்சம் ஆண்டுகள் பரிணாமத்தில் உருவான நீலகிரி சோலை மரக்காடுகளுக்கும், புல்வெளிகளுக்கும் பெரிய அளவிலான அச்சுறுத்தல்கள் தொடர்வதாக சூழலியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். மிச்சம் மீதம் இருக்கும் பூர்வீக சோலை மரங்களையும் புல்வெளிகளையும் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி வருகின்றனர். இவற்றை காக்க அரசும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. வெட்டப்பட்ட சோலை மரங்கள் அதிலும் குறிப்பாக பூர்வீக சோலை மரங்களை வெட்டுவதற்கு நீலகிரியில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், இங்கு சட்டவிரோதமாக அரியவகை … Read more

“மின்சார மசோதாவை கைவிடும்வரை, பிரதமருக்கு முதல்வர் அழுத்தம் கொடுப்பார்” – அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் நகர்பகுதியில் அமைந்துள்ள கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், போதை பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அப்பள்ளியில் 11-ம் வகுப்பு, 12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் போதை பொருள்கள் நடமாட்டத்தை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்கு நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயர் … Read more

விருதுநகர்: கருணை வேலைக்கு ரூ.15,000 லஞ்சம் கேட்ட அதிகாரி?! – ஆடியோ வெளியானதால் பரபரப்பு!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (சத்துணவு) பணியாற்றி வருபவர் செல்வராஜ். சமீபத்தில் புதிதாக விருதுநகர் மாவட்டத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட அவர், கருணை அடிப்படையில் பணிக்கேட்டு விண்ணப்பத்தவரிடம் பணி நியமனத்திற்கு ரூ.15,000 லஞ்சம் கேட்பது தொடர்பான ஆடியோ விருதுநகர்‌ மாவட்டத்தில் வைரலாகி வருகிறது. அதிகாரி செல்வராஜ் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியனுக்குட்பட்ட வளையபட்டி பள்ளியில் சமையலராக பணியாற்றி வந்த பெண், பணியில் இருக்கும்போதே திடீரென இறந்துள்ளார். இதைத் தொடர்ந்து வாரிசு அடிப்படையில் தாயின் பணியினை … Read more

“இலவசங்கள் வேறு, சமுக நல திட்டங்கள் வேறு…" – தலைமை நீதிபதி என்.வி.ரமணா

இந்திய அரசியலில் கடந்த சில நாள்களாகவே, அரசியல் கட்சிகளின் இலவச வாக்குறுதிகள் குறித்த விமர்சனங்கள் வந்தவண்ணமே இருக்கின்றன. பிரதமர் மோடி கூட இதனை, தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்குப் பதில் தரும் விதமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், மோடியை விமர்சித்து வருகிறார். அரசியல் ரீதியாக இதுவொருபக்கம் நிகழ, சட்ட ரீதியாகவும் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் முன்னதாக, தேர்தலின்போது அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் குறித்தான வாக்குறுதிகளை எதிர்த்தும், அப்படி இலவசங்களை அறிவிக்கும் … Read more

நட்சத்திரப் பலன்கள்: ஆகஸ்ட் 12 முதல் 18 வரை! #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி ர் Source link

நான் கர்வம் பிடித்தவளா?' – சரோஜா தேவி பதில்கள் #AppExclusive

நீங்கள் புகழுடன் விளங்கியபோது இருந்த படவுலகிற்கும், இன்றைக்கிருக்கும் படவுலகிற்கும் உள்ள வேறுபாடுகளைக் கூற முடியுமா? காமிரா, இசையமைப்பு ஆகியவற்றின் தரம் உயர்ந்திருக்கிறது. ஆனால், கதையமைப்பின் தரம் தாழ்ந்திருக்கிறது. `பாசமலர்’, `ஆலயமணி’, `எங்க வீட்டுப் பிள்ளை’ போன்ற கதையமைப்பில் சிறந்த படங்கள் இப்போது தயாரிக்கப்படுவதில்லை. உணர்ச்சி வயப்படக் கூடிய கதைகளைப் படமாக எடுக்காமல், பொழுது போக்கிற்காகத்தான் படங்களைத் தயாரிக்கிறார்கள். இம்மாதிரித் தொடர்ந்து படமெடுப்பது படவுலகை மிகவும் பாதிக்கும். முன்பெல்லாம் கதாநாயகிகளாக நடிப்பவர்கள் மிக அழகாக, உடல் அமைப்பு நன்றாக … Read more

12.08.22 வெள்ளிக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | August – 12 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

கழிவுநீரை அகற்றாமல் கால்வாய்… செய்தியாளர்களிடம் வாக்குவாதம்செய்த திமுக-வினர் – இது கரூர் களேபரம்!

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஒன்றாவது வார்டு கே.ஏ நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கழிவுநீர் கால்வாயின் இரு பக்கவாட்டிலும் சுவர்களை அமைத்த ஒப்பந்ததாரர், கால்வாயின் கீழ்ப்பகுதியில் கான்கிரீட் போடாமல் அப்படியே விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இன்று கே.ஏ நகருக்கு வந்த ஒப்பந்ததாரர் தலைமையிலான கட்டுமான ஊழியர்கள், அவசரகதியில் கழிவுநீர் கால்வாயில் உள்ள … Read more