பிரதாப் போத்தன்: `மூடுபனி' நாயகன்; `வெற்றி விழா' இயக்குநர் – உடல் நலக் குறைவால் காலமானார்!

தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளில் இயக்குநராகவும் நடிகராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றிய நடிகர் மற்றும் இயக்குநர் பிரதாப் போத்தன் தனது 70வது வயதில் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். கேரளாவைச் சேர்ந்த இவர், இயக்குநர் பாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி ‘மூடுபனி’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ போன்ற பல தமிழ்ப் படங்களில் நடித்து 80’ஸ், 90’ஸ் தமிழ் ரசிகர்களிடம் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தவர். ஆங்கில நாவல்கள் வாசிப்பின் மீது … Read more

பாலிவுட் பிரபலங்கள், பார்ட்டிகளுக்கு சப்ளை… மும்பைக்கு போதைபொருள் கடத்திய கும்பல் சிக்கியது!

மும்பையில் போதைப்பொருளின் நடமாட்டம் மிகவும் தாராளமாக இருக்கும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் மற்றும் இந்தியாவின் இதர பகுதியில் இருந்து மும்பைக்கு போதைப்பொருள் கடத்தி கொண்டு வரப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலம் போபால் ரயில் நிலையத்தை நோக்கி ஆட்டோவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போபால் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே ஆட்டோ ஒன்றை இடைமறித்து போலீஸார் சோதனை நடத்தினர். இதில் ஆட்டோவில் இருந்த ஜுலேகா என்ற பெண்ணின் கைப்பையில் 3 பாக்கெட்டில் 3 கிலோ எடையுள்ள சரஸ் … Read more

திருமணம் மீறிய உறவு… பெண்ணை கொன்றுவிட்டு, ரயிலில் பாய்ந்த வங்கி ஊழியர்- திருச்சியில் பயங்கரம்

திருச்சி மேலகல்கண்டார்கோட்டை நாகம்மை வீதியைச் சேர்ந்தவர்வர் யமுனா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) (31). 7 வருடங்களுக்கு முன்பு திருமணமான இவருக்கு 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர் வசித்து வந்த அதேபகுதியில் தனியார் வங்கி ஊழியரான வினோத்குமார் (35) என்பவரும் வசித்து வந்தார். இவருக்கு முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்திருக்கிறது. இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணும் அவரை விட்டு பிரிந்துச் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது இந்நிலையில் ஒரே பகுதியில் வசித்து வந்த யமுனாவுக்கும் வினோத்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. … Read more

உதவி கேட்டு வந்த பெண்ணை தலையில் அடித்த சம்பவம்: அமைச்சர் வீட்டை முற்றுகையிடச் சென்ற பாஜக-வினர் கைது!

விருதுநகர் மாவட்டம் பாலவநத்தத்தில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உதவிக்கேட்டு மனு அளிக்க வந்த கலாவதி எனும் பெண்ணை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மனுக்கவரால் தலையில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோவை தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு கண்டனத்தை தெரிவித்தார். மேலும் ஏழைப் பெண்ணை அடித்ததற்காக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பதவி விலக வேண்டும், இல்லையெனில் பா.ஜ.க. சார்பில் வீட்டை … Read more

ஆசிட் குடிக்கவைத்து, கொடுமைப்படுத்திய மாமியார்?.. பரிதாபமாக உயிரிழந்த மருமகள் – அஸ்ஸாமில் அதிர்ச்சி

அஸ்ஸாம் மாநிலம், கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பைரப்நகர் பகுதியில், கணவன் மனைவியான ஷகீல் அகமது – சும்னா பேகம் தம்பதியர் வசித்து வந்தனர். மருமகளை ஆசிட் குடிக்கவைத்துக் கொடுமைப்படுத்திய மாமியார் இவர்களின் குடும்பத்தில், கடந்த சில நாள்களாகவே சும்னா பேகத்தை, அவரின் கணவர் ஷகீல் அகமது மற்றும் மாமியார் சித்ரவதை செய்துவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சும்னா பேகம் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதில், ஷகீல் அகமதுவும், இவரின் அம்மாவும், சும்னா பேகத்தை ஆசிட் … Read more

“இந்தியா – இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து" – அமைச்சர் எ.வ.வேலு தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்த பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பாம்பன், ராமேஸ்வரம், அரிச்சல்முனை பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள், பள்ளி கல்வித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று அவர்களின் கருத்துக்களை … Read more

இலங்கை: அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா; மின்னஞ்சல் மூலம் சபாநாயகருக்கு கடிதம்!

இலங்கையில் தற்போது நிலவிவரும் சூழலானது, நாளுக்குநாள் தீவிரமடைந்துவரும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, எமர்ஜென்சியை அமல்படுத்தும் அளவுக்கு மோசமடைந்துள்ளது. இருப்பினும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. அதிலும் முக்கியமாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் ரணிலும் பதவி விலகவேண்டும் என்று தொடர்ந்து முழக்கங்கள் எழுந்துகொண்டு இருக்கின்றன. இலங்கை இதற்கிடையில், கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்குத் தப்பிச்சென்றுவிட்டார். மேலும் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று சவுதி அரேபியாவுக்கு செலவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் கோத்தபய, சிங்கப்பூரில் தஞ்சமடைந்திருப்பதாக வெளியான செய்திக்கு, “தனிப்பட்ட … Read more

ஜெயலலிதாவைக் கேட்ட இரண்டே கேள்விகள் – #AppExclusive

உங்களோடு நடித்த நாயகர்களைப் பற்றிச் சொல்ல முடியுமா?  “சினிமா உலகைப் பொறுத்த வரையில், நான் எம். ஜி. ஆர். அவர்களுக்கு ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறேன். எங்கள் முதல் சந்திப்பே சுவாரஸ்யமானது. வெண்ணிற ஆடையில் நடிக்கும் முன், சில கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை எடுக்க பந்துலு திட்டமிட்டிருந்தார், அதில் எம். ஜி. ஆர், அவர்கள் தான் கதாநாயகன், பந்துலு தயாரித்துக் கொண்டிருந்த ஒரு கன்னடப் படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த என்னையே ஆயிரத்தில் ஒருவனிலும் … Read more

15.07.22 வெள்ளிக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | July -15 இன்றைய ராசிபலன் | Astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

“எங்களைக் கொலைசெய்ய ப்ளான் பண்ணார்; அதனால அவரைக் கொலைசெஞ்சோம்!" – கொலையாளிகள் பகீர் வாக்குமூலம்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ராணி மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர், நாடார் மக்கள் இயக்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து மரிய நிர்மலாதேவி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மரிய நிர்மலாதேவி, ஆறுமுகநேரி பேரூராட்சியில் 14-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். கொலையான சரவணகுமார் சரவணக்குமாருக்கு … Read more