தலைவர்கள் பிறக்கிறார்களா, உருவாகிறார்களா?.. பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ் – 20

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் ‘பேரன்ட்டீனிங்’ என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள். பிள்ளை வளர்ப்பு / Representational Image திறமைசாலிகளாக வளர்வது பிள்ளைகளின் பொறுப்பு மட்டுமல்ல! | பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ்-19 பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை … Read more

பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து பிளேடால் கிழித்த மர்ம நபர்கள்; என்ன நடந்தது?

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அவர். அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். நேற்று வழக்கம்போல் வீட்டிலிருந்து பள்ளிக்கு தனது நண்பர்களுடன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னே முகத்தில் கர்சீஃப் கட்டிக்கொண்டு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் மாணவியை வழிமறித்துள்ளனர். Violence against women (Representational Image) அதற்கு மாணவி கொஞ்சமும் செவி சாய்க்காமல் அவர்களைக் கடந்து சென்றதால், பைக்கில் இருந்து இறங்கிய ஒரு நபர், மாணவியிடம் நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது தீடீரென … Read more

“குறுக்கு வழியில் வாக்குகளைப் பெறுவது எளிது; ஆனால் அந்த அரசியல் நாட்டை அழித்துவிடும்!" – மோடி

ஜார்கண்ட் மாநிலம், தியோகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “குறுக்கு வழியில் வாக்குகளைப் பெறுவது எளிது. ஆனால் குறுக்கு வழி அரசியல் நாட்டை அழித்துவிடும். இந்தியாவில் இதுபோன்ற குறுக்கு வழி அரசியலிலிருந்து விலகி இருக்க வேண்டும். இன்று குறுக்குவழி அரசியல் மிகப்பெரிய சவாலாக உள்ளது. குறுக்கு வழி அரசியலில் இருந்து விலகி இருக்குமாறு நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். குறுக்கு வழி அரசியல் செய்பவர்கள் புதிய விமான நிலையங்களைக் கட்ட … Read more

"விஜய் இந்தக் காரணத்தால்தான் எங்க சதாபிஷேகத்துக்கு வரல" – எஸ்.ஏ சந்திரசேகர் நேர்காணல்

பிறந்தநாள் எப்படி போனது.. திருக்கடையூர் செல்லும் ஐடியா எப்படி வந்தது? ”திருக்கடையூர் ப்ளான் திடீர்னு முடிவு பண்ணது. `திருக்கடையூர் போனா ஆயூள் அதிகரிக்கும். ரொம்ப நல்லது’ன்னு நண்பர்கள் சொன்னாங்க. நல்லதுதானே என்று நாங்களும் கிளம்பிட்டோம். எனது அப்பா 89 வயதுவரையும், என் அம்மா 96 வயதுவரையும் வாழ்ந்தவர்கள். அம்மாவின் தங்கை எனது சித்தி மதுரையில் வசிக்கிறார். 103 வயதாகிறது. இன்னமும் நடந்துகொண்டும் செல்போன் பேசிக்கொண்டும் ஆக்டிவாக இருக்காங்க. எங்கக் குடும்பத்தோட ஜீன் கொஞ்சம் ஸ்ட்ராங்கானது. இது எல்லாத்தையும் … Read more

எம்.ஜி.ஆர் வீட்டில் கூட்டம்… சசிகலா – திவாகரன் கூட்டணி – ஓ.பி.எஸ்ஸின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் , சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அந்தக் கட்சியின் சார்பில் மூன்றுமுறை தமிழக முதல்வராகப் பதவிவகித்த ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். பதிலுக்கு, அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்குகிறேன் என ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்திருக்கிறார். இதற்கிடையில், அதிமுகவின் தலைமைக் கழகமான எம்.ஜி.ஆர் மாளிகை வருவாய்த்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் பெருவாரியான நிர்வாகிகளின் ஆதரவும் பொதுக்குழுத் தீர்மானமும் எடப்பாடி பழனிசாமிக்குச் சாதகமாக இருக்கும் இருக்கும் சூழலில் … Read more

மறக்க முடியாத மஞ்சள் சால்வை – வைரமுத்து #AppExclusive

தன் முகத்தைத் தானே தொலைத்து அலையும் இளைய சமூகத்துக்கு உங்கள் அறிவுரை என்ன? இளைஞர்களே! பணிவில்லாத அறிவு உங்களைச் சிதைத்துவிடும்; அறிவில்லாத பணிவு உங்களைப் புதைத்துவிடும். அறிவில் மதிக்கப்படுவீர்கள் பணிவில் நேசிக்கப்படுவீர்கள். அறிவும் பணிவும் கொண்டு அடுத்த நூற்றாண்டை உழைப்பால் வென்றெடுங்கள்.  சுவாமிநாதன், மன்னார்குடி  * அரிய பொக்கிஷம் என்று எதையாவது பாதுகாத்து வைத்திருக்கிறீர்களா? ‘முதல் மரியாதை’க்கு எனக்கு முதல் தேசிய விருது கிடைத்தது. அப்போது எம்.ஜி.ஆர். முதலமைச்சர், நான் ராமாவரம் போகாமல் கோபாலபுரம் போனேன். கலைஞர் எனக்கொரு … Read more

தரங்கம்பாடி: செல்போன் டவர் மீது தலைகீழாக நின்றபடி இளைஞர் போராட்டம் நடத்தியது ஏன்?

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் ஊராட்சியில் குளம், குட்டை, வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை மீட்டுத் தரக் கோரி செல்போன் டவர் மீது ஏறி தலைகீழாக நின்றபடி அப்பகுதியைச்  சேர்ந்த இளைஞர் கதிரவன் நேற்று (12.07.2022) போராட்டத்தில் ஈடுபட்டார் . செல்போன் டவர் மீது தலைகீழாக நின்றபடி இளைஞர் போராட்டம் தங்கள் பகுதியிலுள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு  தொடர்பாக தமிழக முதல்வர் தனி பிரிவு மற்றும் மாவட்ட நிர்வாகம்  என பல்வேறுதுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் … Read more

Engineering: வெளியான முதல் செமஸ்டர் முடிவுகள்; 38 சதவிகித மாணவர்களே தேர்ச்சி; அதிர்ச்சித் தகவல்!

நடப்பு கல்வியாண்டிற்கான முதல் செமஸ்டர் பொறியியல் தேர்வு முடிவுகளைக் கடந்த வாரம் வெளியிட்டிருந்தது அண்ணா பல்கலைக்கழகம். அதில் 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 400-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களில் 100-ல் 62 பேர் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பாடத்திலாவது தோல்வி அடைந்திருக்கின்றனர். 2020-21 ஆண்டில் 40-45 சதவிகிதமாக இருந்த தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை தற்போது மேலும் குறைந்திருப்பது கவலை அளிக்கும் … Read more

உதவிக்கேட்டு வந்த பெண்ணை தலையில் அடித்த சம்பவம் – அண்ணாமலை ட்வீட்டுக்கு அமைச்சர் பதில்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 9-ந்தேதி காலை 11 மணிக்கு பாலவநத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு எதிரே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வெள்ளாடுகளை வழங்கினார். ஃபைல் படம் அமைச்சரின் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர். தொடர்ந்து … Read more

இணைந்த கைகள்: ஆபாவாணனின் ஆக்ஷன் அட்வென்ச்சர் சினிமா – அதிலும் அந்த `மாஸ்' இன்டர்வெல் பிளாக்!

80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘இணைந்த கைகள்’. இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம். டென்ட் கொட்டாய் டைரீஸ் – 80s, 90s Cinemas For 2K Kids தற்போது பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் தமிழ்ப் படங்களின் முன்னோடி 1948-ல் வெளியான ‘சந்திரலேகா’. அதன் பிறகு வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன், சிவந்த மண் என்று பல … Read more