மதுரைத் தெருக்களின் வழியே – 15: பழங்கால திரையரங்க அனுபவங்களுக்கு மாற்றாகுமா நவீன மல்டிபிளக்ஸ்?

தியேட்டரில் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, கனவுலகில் மிதக்கிற பெரும்பான்மையினர் ஒருபோதும் அறிந்திராத பெரிய உலகம் விரிந்திருக்கிறது. திரைப்படத்தைத் தியேட்டரில் வெளியிடுவது தொடர்புடைய பல்வேறு வேலைகளில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டிருக்கின்றனர். சினிமா தயாரிப்பில் தொடர்புடைய நடிக நடிகையர், இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் போன்றோரின் ஊதியத்துடன் எவ்விதத்திலும் தொடர்பில்லாத மிகவும் குறைந்த பணத்துக்காகப் பலர் வேலை செய்கின்றனர். மதுரை, மேலக்கோபுரத் தெருவிலிருந்து பிரிகின்ற தானப்ப முதலி தெரு, கீழ அனுமந்தராயன் தெரு போன்ற தெருக்களில் பிலிம் கம்பெனிகள் செயல்படுகின்றன. ஆங்கிலத் திரைப்படங்களை வெளியிடுகிற … Read more

`ஒரு நாள் திரைப்படமாக வரும்!' – உக்ரைனில் பல உயிர்களைக் காப்பாற்றிய நாயின் கதை

நாய் மனிதர்களை விட மிகவும் அதிகமான வாசனை உணர்வைக் கொண்டது. எனவே எல்லா நாடுகளிலும் வெடிகுண்டுகள், கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருள்கள் போன்றவற்றைக் கண்டுபிடிக்க நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உக்ரைன் பாதுகாப்புப் படையில் இருக்கும் பேட்ரோன் (Patron) எனும் நாய் உக்ரைன் போர் சூழலில் பல வெடிப்பொருள்களைக் கண்டுபிடித்து பல மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. கடந்த பிப்ரவரி 24-ல் தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் … Read more

“எனக்கு என்னாச்சுனே தெரியல..!" – மரண வதந்திகளுக்கு நித்தியானந்தா விளக்கம்!

சர்ச்சை வீடியோவில் தொடங்கி மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக அறிவித்துக் கொண்டது வரை, சாமியார் நித்தியானந்தாவைச் சுற்றும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பதிவான ஒரு வழக்கில் தன்னை போலீஸ் தேடுவது தெரிந்தவுடன், இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தென்பசபிக் பெருங்கடலிலுள்ள தீவு ஒன்றில் அடைக்கலம் ஆனதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தபடியே, தினந்தோறும் சமூக வலைதளங்கள் மூலமாக சொற்பொழிவு ஆற்றி வந்தார் நித்தியானந்தா. இந்தச் சூழலில், அவர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்துவிட்டதாகவும், ஏற்கெனவே ‘ஷூட்’ செய்த வீடியோக்களைத்தான் அவரது … Read more

“தாஜ் மஹால் நிலம் எங்களுக்குச் சொந்தமானது… ஷாஜஹான் அபகரித்துக்கொண்டார்!" – பாஜக எம்பி தியா குமாரி

உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் தாஜ் மஹாலில் பூட்டியிருக்கும் 22 அறைகளை ஆய்வு செய்ய, இந்தியத் தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அண்மையில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுத்தாக்கல் தொடர்பாகப் பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் வாரிசுமான தியா குமாரி, பா.ஜ.க நிர்வாகியின் இந்த முன்னெடுப்பை … Read more

“தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி முற்றிலும் ஒழிக்கப்படும்!" – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை பெரியார் நகரில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை அலுவலகத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. ஒரு நாள் மட்டும் அ.தி.மு.க-வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மற்ற அனைத்து நாள்களிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஜனநாயக முறைப்படி நியாயமான முறையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. வங்கி திறப்பு விழா தினம், … Read more

சுசீந்திரம் ஸ்ரீ தாணுமாலயன் சுவாமி திருக்கோயில் சித்திரை தெப்பத் திருவிழா! | Photo Album

சுசீந்திரம் சித்திரை தெப்பத் திருவிழா சுசீந்திரம் சித்திரை தெப்பத் திருவிழா சுசீந்திரம் சித்திரை தெப்பத் திருவிழா சுசீந்திரம் சித்திரை தெப்பத் திருவிழா சுசீந்திரம் சித்திரை தெப்பத் திருவிழா சுசீந்திரம் சித்திரை தெப்பத் திருவிழா சுசீந்திரம் சித்திரை தெப்பத் திருவிழா சுசீந்திரம் சித்திரை தெப்பத் திருவிழா சுசீந்திரம் சித்திரை தெப்பத் திருவிழா சுசீந்திரம் சித்திரை தெப்பத் திருவிழா சுசீந்திரம் சித்திரை தெப்பத் திருவிழா சுசீந்திரம் சித்திரை தெப்பத் திருவிழா சுசீந்திரம் சித்திரை தெப்பத் திருவிழா சுசீந்திரம் சித்திரை தெப்பத் … Read more

பேரறிவாளன் வழக்கு: “மாநில அரசின் ஆளுநருக்காக மத்திய அரசு வாதிடுவது ஏன்?" – உச்ச நீதிமன்றம் கேள்வி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். வழக்கு விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், “வழக்கின் நேரத்தை மத்திய அரசு வீணடிக்கிறது. மாநில அரசின் முடிவு அரசியலைப்புச் சட்டத்துக்கு எதிராக இருக்கும்போது ஆளுநர் குடியரசுத் தலைவரிடம் முறையிடலாம். ஆனால், இந்த வழக்கில் எந்த விதியின் கீழ் … Read more

“உங்களால் என் கதைகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை…'' – சதத் ஹசன் மண்ட்டோ Quotes| Photo Story

இந்திய படைப்பியல் வரலாற்றிலும், இந்தியப் பிரிவினை வரலாற்றிலும் தவிர்க்க முடியாத பெயர் மண்ட்டோ. இன்று அவரது பிறந்தநாள். சுதந்திர வரலாற்றின் கருப்புப் பக்கங்கள் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையால் நிரம்பியவை. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மண்ட்டோ பிரிவினையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் பதிவுசெய்தார். சமூகம் குறித்த மண்ட்டோவின் மேற்கோள் இது. சமூகத்தை அவர் எவ்வாறு பார்த்தார் என்பதற்கான உதாரணம். இந்தியா பாகிஸ்தான் பிரிவினை மண்ட்டோவை மிகவும் பாதித்தது. அவர் இஸ்லாமியர் என்பதாலேயே ‘நீ மட்டும் என் நண்பனாக இல்லாவிட்டால், … Read more

“காத்திருந்து தபால் படிப்பேன்; இப்போ அதுல நானும்..!" – `தபால் தலை' பெருமிதம் குறித்து பி.சுசீலா

`சுகமான குரல் யார் என்றால்?’ பி.சுசீலாவின் குரலே போட்டியின்றித் தேர்வாகும். கிளாஸிக் காலகட்ட திரை ரசிகர்களின் செவிகளையும் மனதையும் வருடிய இவரின் பாடல்கள், இன்றும் அதே இனிமையுடன் ஒலிக்கின்றன. திரையிசை ஆளுமையாகப் பல பெருமைகளைப் பெற்ற சுசீலாவுக்கு, மற்றுமொரு புகழைச் சேர்த்திருக்கிறது இந்தியத் தபால்துறை. பி.சுசீலா `சினிமா நடிகருடன் காதலா’ன்னு அப்பா ஷாக் ஆனாரு!’ – நடிகர் மோகன்லால் மனைவி சுசித்ரா ஷேரிங்ஸ் கலைத்துறைச் சேவைக்காக, சுசீலாவின் உருவம் பொறித்த தபால் தலையுடன் கூடிய சிறப்பு போஸ்டல் … Read more

இதயமே இதயமே… 'கேத் லேப்'ன் முக்கியத்துவம் அறிவோம்!

கேத் லேப்… என்ன நடக்கிறது இங்கே? கேத்தட்டெரைசேஷன் லேப் (Catheterization lab) என்பதன் சுருக்கமே கேத் லேப். பலவிதமான நவீன மருத்துவ உபகரணங்களுடன் இருக்கும் இந்த அறையில் இதயம் சார்ந்த பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் கேத் லேப் என்பது ஆபரேஷன் தியேட்டர் கிடையாது என்பதை நினைவில் கொள்ளவும். அங்கே மயக்க மருந்து கொடுக்கப்படும், ஆனால் கேத் லேபில் மரத்துப் போகும் மருந்து கொடுத்து, பெரும்பாலும் நோயாளி சுய நினைவில் இருக்கும்போது சிகிச்சை வழங்கப்படுகின்றது. ஆஞ்சியோகிராம், இ.சி.ஜி, … Read more