“தமிழகத்தில் ஊரடங்கு தேவையில்லை" – சொல்கிறார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று வேகமாக அதிகரித்துவருவது பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 31-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். மெகா கொரோனா தடுப்பூசி முகாம் அப்போது, “ தமிழகத்தில் 94.68 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 85.74 சதவிகிதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் … Read more

`யார் பெயரை முதலில் போடுவது?' – ஜெய்சங்கர் #AppExclusive

உங்கள் படங்கள் ஒரே நாளில் இரண்டு வெளியாவதாலும், அடுத்தடுத்து வெளிவருவதாலும் தோல்விக்கான காரணமாகக் கருதுகிறீர்களா? ஒரே நாளில் நான் நடித்த வெளியாவது இரண்டே இரண்டு முறைதான் நடந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு தீபாவளியன்று வெளியான ஐந்து படங்களில் நான் நடித்த இரண்டு படங்கள் மட்டும் வெற்றியடைந்தன. சமீபத்தில் தாய்க்கு ஒரு பிள்ளையும், ஆசீர்வாதமும் அடுத்தடுத்த வெளியாயிற்று. இன்னும் இரண்டு மாதங்களுக்கு நான் நடித்த படம் எதுவும் வருவதாகத் தெரியவில்லை. இதெல்லாம் டிஸ்டிரிபியூட்டர்களின் பிரச்னை. எனக்கு நடிப்பைப் பற்றிய … Read more

12.07.22 செவ்வாய்க்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | July – 12 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

பணம் குறித்து பலரும் பொய் சொல்வது ஏன்? ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

வயது, எடை, விருப்பங்கள் பற்றி மிகவும் கலகலப்பாக, இயல்பாகப் பேசுபவர்களுக்குக்கூட தன் வருமானம், செலவு, சேமிப்பு, கடன் இவை பற்றி பிறரிடம் அவ்வளவு இயல்பாகப் பேச முடிவதில்லை. தன் வாழ்க்கைத் துணையிடம் அத்தனை விஷயங்களையும் பகிர்ந்துகொள்பவர்கள்கூட பணம் பற்றிப் பேசும்போது சற்று எச்சரிக்கையாக இருப்பதுடன், சில சின்னச் சின்ன பொய்களைச் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக் கிறார்கள். இந்தப் பொய்களுக்குக் காரணம், பணம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, நம் உணர்வுகள் சம்பந்தப்பட்ட வையாகவும் இருப்பதுதான். செலவு செய்தல் கிரெடிட் கார்டு … Read more

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன்மீதான பாலியல் புகார் வாபஸ்! – என்ன நடந்தது?

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர்மீது திரைப்பட துணை நடிகை சாந்தினி என்பவர், “கடந்த ஐந்து வருடங்களாக மணிகண்டனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தேன். இதன் காரணமாக, மூன்று முறை கர்ப்பம் அடைந்திருக்கிறேன். மணிகண்டனின் நெருக்கடி காரணமாக அந்த கர்ப்பத்தைக் கலைத்துள்ளேன். முதலில் திருமணம்செய்து கொள்வதாகக் கூறிவிட்டு இப்போது என்னை அவர் ஏமாற்றிவிட்டார்” என்று போலீஸில் புகார் தெரிவித்திருந்தார். மணிகண்டன், சாந்தினி இந்த புகாரை அடுத்து, அடையாறு அனைத்து மகளிர் காவல் … Read more

`சாதிக்க வறுமை தடையில்லை': பீகார் மாணவனுக்கு ரூ.2.5 கோடி வழங்கும் அமெரிக்க கல்லூரி!

கல்வி என்பது அனைவருக்குமான அடிப்படை உரிமை. ஆனால், பொருளாதார சூழ்நிலையின் காரணமாக பலருக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே போய்விடுகிறது. கல்வியில் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் எனத் தடைகளைத் தகர்த்து சாதித்து வருபவர்கள் பலர். பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும், தான் கண்ட கல்விக் கனவை நிறைவேற்றியுள்ளார், பீகார் மாநிலம், புல்வாரிசெரிப் மாவட்டத்தில் உள்ள கோன்புரா என்ற கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பிரேம்குமார். இவரின் திறமையைக் கண்ட அமெரிக்க கல்லூரி ஒன்று, இவரின் மேற்படிப்புக்காக 2.5 கோடி ரூபாய் … Read more

முதல் பெண், இரண்டாவது இந்தியர்: ஐ.எம்.எஃப் முன்னாள் தலைமை பொருளாதார வல்லுநர்களின் சுவரில் கீதா!

வாழ்க்கையின் பயணங்களில் நாம் விட்டுச்செல்லும் தடயங்கள் மிகவும் முக்கியமானவை. இத்தடயங்களே நம்முடைய சாதனைகளை உரக்கச் சொல்லும். அவ்வாறு வரலாற்றில் தற்போது தன்னுடைய தடத்தை பதித்துள்ளார், இந்தியாவை சேர்ந்த கீதா கோபிநாத். இந்தியாவில் பிறந்த கீதா கோபிநாத் வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியம் (IMF – International Monetary Fund)-ன் முன்னாள் தலைமை பொருளாதார வல்லுநர்களின் பட்டியல் சுவரில் இடம்பெற்ற முதல் பெண் மற்றும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2003-ம் ஆண்டிலிருந்து … Read more

நாயின் வாயில் இரும்புச்சங்கிலி கட்டி போடப்பட்ட பூட்டு; லாவகமாக அகற்றிய தீயணைப்புத்துறையினர்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள தட்டார்மடம் பகுதியில் கடந்த பத்து நாள்களாக நாய் ஒன்று வாயில் இரும்புச் சங்கிலியால் சுற்றப்பட்டு, பூட்டு போட்டு பூட்டிய நிலையில் உணவருந்த முடியாமல் அங்கும் இங்கும் சுற்றி திரிந்து வந்தது. இதைப் பார்த்த அப்பகுதியினர் நாயைப் பிடித்து இரும்புச் சங்கிலியை அகற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது கடிக்கப் பாய்ந்து வந்துள்ளது. இரண்டு மூன்று நாய்களை நிறுத்தி அழைத்த போதிலும் குரைத்தபடியே அலறி ஓடிச் சென்றுள்ளது. பிஸ்கட் அளித்து ஈர்க்கப்பட்ட நாய் … Read more

வத்தலக்குண்டு : பலியான காணிக்கை ஆடுகள்… பக்தர்கள் அதிர்ச்சி- நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பா.விராலிப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆட்டுக்குட்டிகளை விடுவது வழக்கம். ஆண்டு முழுவதும் பக்தர்களால் வழங்கப்படும் ஆயிரக்கணக்கான ஆடுகள் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ஆடி மாதத் திருவிழாவின்போது கருப்பணசாமிக்கு நேர்த்திக்கடனாக வெட்டப்பட்டு அன்றிரவே பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இறந்து கிடக்கும் ஆடுகள் நிகழாண்டு ஜூலை 17 – ம் தேதி ஆடி மாதத் திருவிழா தொடங்க உள்ள நிலையில் பக்தர்கள் ஆட்டுக்குட்டிகளைக் … Read more

`கொதித்தெழுந்த இபிஎஸ் முதல் ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ் வரை..!' – அதிமுக பொதுக்குழு ஹைலைட்ஸ்

அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகி பின்னர், ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில், 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல, ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து விவாதிக்க ஜூலை 11-ம் தேதி சிறப்புப் பொதுக்குழு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதும், ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் வெளியேறினார். ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு அவர்மீது தண்ணீர் பாட்டில் வீச்சும் அரங்கேறியது. இதையடுத்து, பொதுக்குழுவை நிறுத்த ஓ.பி.எஸ் தரப்பும், திட்டமிட்டபடி நடத்த எடப்பாடி தரப்பும் மாறி மாறி நீதிமன்றத்தில் … Read more