பாரிவேந்தரின் மகன் பாசம் முதல் அவசரப்பட்ட அமைச்சர்கள் வரை… கழுகார் அப்டேட்ஸ்!

கைவிட்ட அமைச்சர்சிக்கலில் தொழிலதிபர்… திருநெல்வேலி தட்சண மாற நாடார் சங்கத்தில், முன்னாள் நிர்வாகிகள் சிலரின் மீது மோசடிப் புகார் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக, மே 4-ம் தேதி தண்டபத்துவில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், முந்தைய நிர்வாகிகள்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், தென்மாவட்டத்தைச் சேர்ந்த பெரும் தொழிலதிபரின் சகோதரர் வசமாகச் சிக்கியிருக்கிறார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரத்த உறவுமீது சிக்கல் இறுகுவது தெரிந்தவுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைச் சந்தித்த அந்தத் தொழிலதிபர், ‘எப்படியாவது … Read more

“ராஜபக்சே அரசு பதவி விலகினால் இலங்கையில் என்ன நடக்கும்?" – கொழும்பு எம்.பி மனோ கணேசன்

இலங்கையில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. `ராஜபக்சே அரசு பதவி விலக வேண்டும்’ என்பதற்கான மக்கள் போராட்டமும் வீரியமடைந்துவருகிறது. சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையின் பழைய நாடாளுமன்றம் அமைந்திருக்கும் கால் ஃபேஸில் போராடிவருகின்றனர். மே 6 அன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்றது. `இந்த நிலைமை சீராக இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம்’ என்றிருக்கிறது இலங்கை அரசு. இலங்கையின் தற்போதைய நிலை பற்றியும், எதிர்கால நிலை பற்றியும் … Read more

“ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்குவேன்!”- சசிகலாவின் அரசியல் ரீ-என்ட்ரி

2017, பிப்ரவரி 15, சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. 2021, ஜனவரி 27-ல், விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தபோதே விடுதலை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்கு பிறகு, ‘போதும், போதும்… தோற்றது போதும், தலைமையேற்க வா தாயே’ என தொண்டர்களின் தொடர் போஸ்டர் விளம்பரங்கள்! தென்மாவட்ட சுற்றுப்பயணம் மார்ச், 2022: “அதிமுக ஒரே குடும்பம், பிள்ளைகளை நிச்சயம் சந்திப்பேன்” – சசிகலா தென்மாவட்ட சுற்றுப்பயணத்துக்குப் பிறகு சசிகலா அறிக்கை: “கழக தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், முழக்கங்கள் … Read more

அன்று எனக்காக இயங்கிய குடும்பம்; இன்று குடும்பத்துக்காக இயங்கும் நான்!- அன்னையர் தின சிறப்பு பகிர்வு

பட்டுப்பாவாடையைக் கைகளுக்குள் சுருட்டி, கொலுசுகள் சிணுங்க, தேரைப்போல் ஆடிவரும் பெண் குழந்தைகள் மனிதர்களுடன் வாழும் தேவதைகள். மகள், அம்மா என இரண்டு ஸ்தானங்களின் பொக்கிஷ அனுபவங்களைத் தாங்கியவர்கள். மகளாக இருக்கும்போது, ஒட்டுமொத்த குடும்பத்தையும் தன்னைச் சுற்றி இயங்கச் செய்தவர்கள், அம்மாவாக மாறிய பின், குடும்பத்துக்காக சுழல ஆரம்பித்த நிமிடங்கள் எப்போதும் ஆச்சர்யமானவை. வீட்டிலிருக்கும் எல்லோரிடமும் செல்லமாக சண்டையிட்டு, கோபித்துக்கொண்டு பட்டாம்பூச்சியாக வலம் வந்த மகள்கள், ஒருகட்டத்தில் குடும்பத்தில் அனைவரின் கோபத்தையும் புன்னகையால் கடந்து செல்லும் அம்மாவாக மாறும் … Read more

PBKS v RR: அட்டகாச சேஸிங் மூலம் பிளேஆஃப் வாய்ப்பை அதிகப்படுத்திய ராஜஸ்தான்; வெளியேறிய மும்பை!

இந்த ஐபிஎல் சீசனிலிருந்து அதிகாரபூர்வமாக மும்பை அணி நாக் அவுட்டாகி இருக்கிறது. என்ன இப்பத்தானா என்கிறீர்களா? ஆம், அப்படித்தான் சொல்கிறார்கள். இனி கால்குலேட்டரில் என்ன செய்தாலும், மும்பையால் உள்ளே வர முடியாது. பலமுறை கோப்பை வென்ற மூன்று அணிகளும் புள்ளிப் பட்டியலில் பாதாளத்தில் இருக்கின்றன. ‘வாழ்க்கை ஒரு வட்டம்டா, இங்க ஜெயிக்கறவன் தோப்பான், தோக்கறவன் ஜெயிப்பான்’ என சொன்ன இயக்குநர் ரமணா எவ்ளோ பெரிய தீர்க்கதரிசி. அதே சமயம், நேற்றைய முதல் போட்டியின் முடிவில் ஒரு அணி … Read more

08.05.22 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/Jxoon8CISOw #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

தி.மு.க-வின் ஓராண்டு ஆட்சியின் அலசல் தொடங்கி ஆளுநர் ரவி உடனான மோதல் வரை… ஜூனியர் விகடன் ஹைலைட்ஸ்!

மே 7-ம் தேதியுடன் ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்திருக்கிறது தி.மு.க அரசு. வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா… ஆளுநருடனான மோதல் ஏன்… ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு டஃப் கொடுப்பதில் ஸ்கோர் செய்வது எந்த எதிர்க்கட்சி போன்றவை குறித்து முழுமையாக விவரிக்கும் ஜூனியர் விகடனின் இந்த இதழில் சிறப்பு கட்டுரைகள் என்னென்ன..? கடந்த ஓராண்டில் ஸ்டாலினின் ஆட்சி, சாதித்த – சறுக்கிய விஷயங்கள் என்னென்ன? கட்சியின் தலைவராக அரை நூற்றாண்டுக்காலம் இயங்கிய கருணாநிதி மறைந்துவிட்ட சமயத்தில், கட்சியை வழிநடத்தி தமிழ்நாட்டின் அரியணையையும் … Read more

ஆன்லைன் சூதாட்டம்: துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை – கேள்வி எழுப்பும் எடப்பாடி

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகின்றார். இவர், அம்பத்தூர் அருகில் உள்ள கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள மத்திய தொலைத்தொடர்பு பாதுகாப்பு அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். இன்று சரவணகுமார் பணியில் இருக்கும்போதே தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்கொலை சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சரவணகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும், அம்பத்தூர் … Read more