தேனி: சட்டவிரோத பி.எஸ்.என்.எல் இணைப்பு; வெளிநாடுகளுக்குப் பேசிய கேரள இளைஞர்கள் கைது!

தேனியில் பி.எஸ்.என்.எல் அலுவலக இளநிலை தொலை தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வருபவர் முனியாண்டி. இவர், பி.எஸ்.என்.எல் அலைகற்றையை சட்ட விரோதமாகப் பயன்படுத்தி சிலர் வெளிநாடுகளுக்குப் பேசி வருவதாக தேனி டவுன் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் தேனி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினர். தேனி நகர் காவல் நிலையம் கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த சஜீர் (40) ஆண்டிபட்டியிலும், முகமது ஆசிப் (27) தேனியிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். … Read more

Rajamouli: வெட்கப்பட்ட பிரபாஸ்; ராஜமௌலி கேட்ட கேள்வி- நினைவுகள் பகிரும் ஸ்வர்ணா மாஸ்டர்

இயக்குநர் பாரதிராஜாவின் `பசும்பொன்’ படத்தின் மூலம் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமானவர் ஸ்வர்ணா. தொடர்ந்து விஜயகாந்தின் `தமிழ்ச்செல்வன்’, சத்யராஜின் `வில்லாதி வில்லன்’ உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்கள் தமிழிலும் தெலுங்கு உள்பட இதர மொழிகளில் மொத்தம் 900 படங்களுக்கு மேல் நடன இயக்குநராக அசத்திய ஸ்வர்ணா, இப்போது முதல் முறையாக `நாதிரு தின்னா’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ” தெலுங்கில் சேகர் கம்முலா, வம்சி, ‘வானம்’ க்ரிஷ் உள்பட பல டாப் இயக்குநர்களின் படங்களுக்கு நடனம் அமைச்சிருக்கேன். என்னோட … Read more

விஜயேந்திர பிரசாத் வைரல் வீடியோ – நேரு, காந்தி குறித்து அவர் சொல்வதில் எதெல்லாம் உண்மை? | Factcheck

வரலாறு என்பது நிகழ்ந்த ஒன்று. ஆனால், வரலாற்றை அடுத்த தலைமுறைக்குச் சொல்வதில் அவர் அவர்க்கு ஓர் ஆதாயம் எப்போதும் உண்டு. பட்டேலுக்கு அவர் விரும்பும் அதிகாரத்தை வழங்கியிருந்தால், ஒருங்கிணைப்பட்ட இந்தியாவை அவர் எப்போதோ உருவாக்கியிருப்பார் என்கிற செய்தி கடந்த சில ஆண்டுகளாகவே வெவ்வேறு வடிவங்களில் இணையத்தில் வட்டம் அடித்துக்கொண்டிருக்கின்றன. இப்போது, மீண்டும் அதைப் பேசுபொருளாக்கியிருக்கிறார் பாரதப் பிரதமர் மோடியால் நியமன எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரமாண்டப் படங்களின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத். இவர் இயக்குநர் ராஜமௌலியின் தந்தை. RRR … Read more

ENG vs IND: `பவர்ப்ளே தாக்குதல்' – டி20 உலகக்கோப்பைக்கான இந்தியாவின் புதிய யுக்தி இதுதானா?

அட்டாக்கிங் பேட்டிங், பௌலிங் மூலம் கடந்த ஆட்டத்தில் பவர்பிளேவிலேயே இங்கிலாந்து அணியை நிலைகுலையச் செய்திருந்தது இந்தியா. விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் தொடக்கம் முதலே அதிரடியை வெளிப்படுத்தினர் இந்திய பேட்டர்கள். ஹர்திக் பாண்டியா அரை சதத்தை அடித்திருந்தாலும் அவருக்கு முன் வந்த அனைவரின் அதிரடியாலும் ஆட்டத்தின் போக்கு இந்தியாவின் கையிலேயே இருக்குமாறு பார்த்து கொண்டனர். ENG vs IND நேற்றைய ஆட்டத்தில் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட் அணிக்குத் திரும்புவதால் … Read more

`அமைச்சர்களின் பனிப்போர் முதல் திமுக எம்.எல்.ஏ-க்களின் அச்சம் வரை!' – கழுகார் அப்டேட்ஸ்

அமைச்சர்களிடையே பனிப்போர்!‘அக்கட’ தேச காண்ட்ராக்டர்கள்… ரோடு போடும் துறை டெண்டர்களில் சமீப காலமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்குப் பதிலாக, ‘அக்கட’ தேசத்து ஒப்பந்ததாரர்களையே அதிகம் பார்க்க முடிகிறதாம். கான்ட்ராக்ட் கிடைக்காத தமிழ்நாட்டு ஒப்பந்ததாரர்கள் துறை அமைச்சரை அணுகியபோது, ‘கவலைப்படாதீங்க. வேறு ஒரு நல்ல துறையில் உங்களுக்கெல்லாம் டெண்டர் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொன்னாராம். சொன்னபடியே, ‘மேலிடத்தில்’ பேசி பெரிய காண்ட்ராக்டர்கள் சிலரை ‘ஷாக்’ அடிக்கும் துறை காண்ட்ராக்டர்கள் பட்டியலில் நுழைத்தும்விட்டாராம் அமைச்சர். சின்ன காண்ட்ராக்டர்களால் இப்படி … Read more

முதன்முதலில் தமிழில் அச்சடிக்கப்பட்ட பழைமையான பைபிள் – மீட்டு தரங்கம்பாடிக்கு கொண்டுவர கோரிக்கை!

சீகன்பால்கு தமிழில் அச்சடித்த பழைமையான பைபிள் தஞ்சை அருங்காட்சியகத்திலிருந்து காணாமல் போய், தற்போது லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனை  தரங்கம்பாடியிலுள்ள சீகன்பால்கு அருங்காட்சியகத்திற்கு  கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பைபிள் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பாத்லோமேயு சீகன்பால்கு கி.பி.1706 -ம் ஆண்டு ஜூலை 9 -ம் தேதி தனது நண்பன் புளுட்சோன் என்பவருடன் கடல்மார்க்கமாக தரங்கம்பாடியை வந்தடைந்தார். அவர் வந்து நேற்றோடு (09.07.2022)  317 ஆண்டுகள் ஆகின்றன. அப்போது தரங்கம்பாடியை டேனீஷ்காரர்கள் ஆட்சிசெய்து வந்தனர். அவர்களின் … Read more

சசிகலா கார்மீது விழுந்த ஸ்கேன் தடுப்பு கட்டை; மறியலில் இறங்கிய ஆதரவாளர்கள்! – திருச்சியில் பரபரப்பு

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, ஜூலை 8-ம் தேதி நள்ளிரவு விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு காரில் வந்துள்ளார். அவரது ஆதரவாளர்கள் 4 கார்களில் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இரவு சுமார் 11:45 மணியளவில் திருச்சியை அடுத்த துவாக்குடி சுங்கச் சாவடியில், சசிகலா ஆதரவாளர்களின் 4 கார்களும் ஸ்கேன் செய்யப்பட்டு வெளியேறியிருக்கின்றன. சசிகலாவினுடைய கார் வந்தபோது, சுங்கச் சாவடியில் இருந்த ‘ஃபாஸ்ட் டேக்’ ஸ்கேன் கட்டை சசிகலா காரின் கண்ணாடி மீது … Read more

மட்டன் ஆம்லெட் புலாவ், இறால் வறுவல் புலாவ், மட்டன் & பீன்ஸ் கப் கேக் இட்லி- வீக் எண்டு ரெசிப்பீஸ்

மட்டன் ஆம்லெட் புலாவ் ஆம்லெட் செய்ய… முட்டை – 6 மட்டன் கீமா – அரை கப் பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம் – 2 மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் மிளகாயத்தூள் – அரை டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு பாஸ்மதி அரிசி – ஒன்றரை கப் நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 மீடியமாக நறுக்கிய தக்காளி – 2 ஏலக்காய் – 2 பட்டை … Read more

யூரோ டூர் 43: கம்யூனிசம் டு முதலாளித்துவம் – குழப்பத்தில் லாட்வியா; குற்றங்கள் பெருகும் ருமேனியா!

ஐரோப்பாவின் அழகு முகத்தின் மறுபக்கத்தைக் கடந்த சில வாரங்களாக யூரோ டூரில் பார்த்துக்கொண்டு வருகிறோம். இவ்வாரம் லாட்வியா மற்றும் ருமேனியாவைச் சுற்றி ஒரு குயிக் ரவுண்டப்! லாட்வியா (Latvia) நிலப்பரப்பில் பாதிக்கும் மேலானது காடுகளால் சூழப்பட்ட, நாட்டின் ஐந்தில் ஒரு பகுதி மனிதர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட்ட இயற்கையைக் கொண்ட, 500 கிமீ-க்கும் மேலான வெள்ளை மணல் கடற்கரைகளைக் கொண்ட, 12,000-க்கும் மேற்பட்ட ஆறுகளையும் ஏரிகளையும் கொண்ட பூமியின் தனித்துவமான சொர்க்கம் லாட்வியா. வரலாற்று முக்கியத்துவம் மிக்க மிகப் … Read more