`கொதித்தெழுந்த இபிஎஸ் முதல் ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ் வரை..!' – அதிமுக பொதுக்குழு ஹைலைட்ஸ்

அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகி பின்னர், ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில், 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல, ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து விவாதிக்க ஜூலை 11-ம் தேதி சிறப்புப் பொதுக்குழு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதும், ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் வெளியேறினார். ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு அவர்மீது தண்ணீர் பாட்டில் வீச்சும் அரங்கேறியது. இதையடுத்து, பொதுக்குழுவை நிறுத்த ஓ.பி.எஸ் தரப்பும், திட்டமிட்டபடி நடத்த எடப்பாடி தரப்பும் மாறி மாறி நீதிமன்றத்தில் … Read more

கருணை! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் இது ஒரு அனுபவம். வாழ்க்கையில் சிலர் மற்றவர்களுக்கு எப்படி முன்னோடியாகவும் வாழ்க்கை கொடுக்கும் சவால்களை எப்படி கையாள வேண்டும் என்றும் வாழ்ந்து காட்டிக் கொண்டே இருப்பார்கள் நம் கண் முன்னே.. நாம் அதை கவனித்து நம்மை எப்படி பண் படுத்திக் கொள்ளலாம் என்பதே … Read more

Jailer Exclusive: நெல்சனின் அலுவலத்திற்கு வந்த ரஜினி; ஆச்சரியமடைந்த படக்குழு!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி – நெல்சன் இணையும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. `அண்ணாத்த’ ரஜினி – ஃபீஸ்ட் நெல்சன் இருவரும் மீண்டும் சன் பிக்சர்ஸுடன் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ஐஸ்வர்யா ராய், கிட்டத்தட்ட உறுதி செய்யவுள்ளார் என்கிறது படக்குழு. அதாவது ஐஸ்வர்யா ராய், நெல்சனிடம் கதையைக் கேட்டுவிட்டார். அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும், இன்னும் சில நாளுக்குள் பதில் சொல்வதாகவும் சொல்லியிருப்பதாகத் தகவல். தவிர, கன்னட … Read more

பாலம்! | குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் அந்த மூதாட்டியின் பெயர் மரியம்மாவா அல்லது மாரியம்மாவா என்பதில் அந்தப்பகுதிப் பெண்களுக்கு எப்பொழுதுமே ஒரு சிறு சந்தேகம். ஆனால் அந்த மூதாட்டிக்கோ அதைப்பற்றிய கவலையெல்லாம் என்றுமே வந்ததில்லை. கிறிஸ்தவர்கள் வீட்டில் மரியம்மா என்றார்கள். இந்துக்களோ மாரியம்மா என்றழைத்தார்கள். எல்லார் வீட்டிலும் அவர் சேவகம் … Read more

சென்னை: `ஒரு வீடியோவுக்கு ரூ.25,000; மொத்தம் ரூ.50 லட்சம்’ – மாணவியை மிரட்டிய இன்ஜினீயர் கைது

சென்னையை சேர்ந்த பாத்திமா (பெயர் மாற்றம்) என்பவர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 7- ம் தேதி புகார் அளித்தார். அதில், `தன்னுடைய 14 வயது மகள், தனியார் பள்ளயில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். இவர், கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆன்லைனில் LUDO எனும் கேம் விளையாடி வந்தார். அப்போது திருவெற்றியூரை சேர்ந்த விக்னேஷ்வரன் (25) என்கிற ஜோக்கர் என்பவர் பழக்கமாகியிருக்கிறார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் விக்னேஷ்வரனும் எனது … Read more

'Rocket Ball' : வெப் டெவலப்பர் கண்டுபிடித்த புதிய விளையாட்டு; ஒலிம்பிக் வரை எடுத்துச் செல்ல முயற்சி!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் வெப் டெவலப்பர் கோபால கிருஷ்ணன். இவர் `ராக்கெட் பால்’ என்ற புதிய விளையாடை உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் எனத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். நாகர்கோவிலில் உள்ள கோபால கிருஷ்ணனின் அலுவலகத்தில் அவரை சந்தித்து பேசினேன். எடுத்த எடுப்பிலேயே ராக்கெட் பால் தோன்றிய விதம் பற்றி பேசத்தொடங்கினார். Rocket Ball | கோபால கிருஷ்ணன் “நான் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்கிறேன். வெப் டெவலப்பரா வேலை செய்கிறேன். 2002 வரை தெருவில் நானும் … Read more

ரப்பர் பென்சில் உருவான கதை, நீரின் அடியிலும் எழுதும்: பென்சில் சுவாரஸ்யங்கள்! I Visual Story

‘பென்சில்’ பள்ளிப்பருவத்து தொலைந்து போன ஞாபகம். குழந்தைகளாய் இருக்கும்போது பென்சிலை பயன்படுத்தினோம். ஏனென்றால் தவற்றை திருத்திக்கொள்ளும் வாய்ப்பு நமக்குக் கொடுக்கப்பட்டது. வளர்ந்ததும் பேனாவில்தான் எழுதியாக வேண்டும். அப்பொழுது தவறு செய்தால் திருத்துவது சிரமம். அடிக்க மட்டும்தான் முடியும். நமது தவறும் தெளிவாகத் தெரியும். எழுதுவதற்கும், வரைவதற்கும் பயன்படுத்தப்பட்ட பென்சில் பள்ளிப்பருவம் முடிந்ததும் தேவைப்படுவதில்லை. அதை நாம் பிறகு தேடுவதும் இல்லை. கடந்த 150 வருடங்களுக்கும் மேலாக பென்சில் வடிவமைப்பில் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும், 1858-ல் ஹைமேன் லிப்மான் … Read more

கேரளா: சாமியார் ஆசிரமம் எரிக்கப்பட்ட வழக்கு: பினராயி விஜயன் தலையிட்டும் முடிவுக்குவராத விசாரணை!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள குண்டமங்கடவு பகுதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் சுவாமி சந்தீபானந்தகிரி. சி.பி.எம் கட்சிக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்கும் ஆதரவாக கருத்துகளை கூறிவருபவர். இதனால் சங் பரிவார் அமைப்புகள் இவரை கம்யூனிஸ்ட் சாமியார் என அழைப்பது வழக்கம். 2018-ம் ஆண்டில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்த சமயத்தில், அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார் சந்தீபானந்தகிரி. சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை … Read more

Kaduva: மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை வசனம் – பிரித்விராஜின் படத்துக்கு கடும் எதிர்ப்பு!

பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள ‘கடுவா’ திரைப்படம் கடந்த 7-ம் தேதி வெளியானது. ஷாஜி கைலாஸ் இயக்கும் படங்களில் அதிரடி சண்டைக் காட்சிகளுக்குப் பஞ்சமிருக்காது. அந்த வகையில் ஆக்‌ஷன் சினிமாவாக வெளிவந்துள்ள ‘கடுவா’ கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் ஆக்ஷன் சினிமா விரும்பிகளைத் திருப்திப்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் ‘கடுவா’ படத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து இடம்பெற்றுள்ள ஒரு வசனம் தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. “மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறப்பதற்கு அவரவர் பெற்றோர் செய்த பாவம்தான் (கர்மா) காரணம்” என ஒருகாட்சியில் பேசப்படும் வசனத்துக்கு … Read more

“இந்திய அரசு இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறது!" – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட நிலையில், அதிபர் கோத்தபய கப்பலில் தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது. விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி நிலை என இலங்கையில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இக்கட்டான சூழலில் … Read more