“இன்றுவரை நான்தான் அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர்!" – கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம்

ஒற்றைத் தலைமை விவகாரம் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நேற்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கூட்டத்தில் நிரந்தரப் பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவரப்படுவது தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் தாக்கல்செய்ய வேண்டிய வரவு – செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது. ஓ.பி.எஸ் அ.தி.மு.க கொள்கை, கோட்பாடுகளுக்கு விரோதமாகச் செயல்பட்டார். அதன் காரணமாக கழக … Read more

ம.பி: ஆற்றில் குளித்த 10 வயது சிறுவன்; கடித்து இழுத்துச் சென்று விழுங்கிய முதலை! – அதிர்ச்சி சம்பவம்

மத்தியப் பிரதேச மாநிலம், சியோபூர் என்ற இடத்தில் ஓடும் சம்பல் ஆற்றில் 10 வயது சிறுவன் ஒருவன் கரையோரம் நின்று குளித்துக்கொண்டிருந்தான். அந்நேரம் அங்குவந்த மிகப்பெரிய முதலை ஒன்று சிறுவனைக் கடித்து அவனை ஆற்றுக்குள் இழுத்துச்சென்றது. அருகில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் உடனே ஓடி வந்து சிறுவனின் பெற்றோரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர். முதலை சிறுவனை ஆற்றுக்குள் இழுத்துச்சென்று அப்படியே விழுங்கிவிட்டது. கிராமத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கம்புகள், வலையின் துணையோடு சிறுவனை விழுங்கிய முதலையைப் பிடித்து ஆற்றங்கரைக்கு … Read more

இலங்கை : ராமாயணத்திலிருந்து அணையாத நெருப்பு; யார் பொறுப்பு! என்னதான் தீர்வு? |Long Read

இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் எனப் போராடிய லட்சக்கணக்கான மக்கள், ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றி அங்கே நிலை கொண்டுள்ளனர். ஜனாதிபதியோ எங்கோ தலைமறைவாகியிருக்கிறார். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யாருக்குமே தெரியாத புதிரின் – மர்மத்தின் – மேல் இலங்கை இருக்கிறது. செயலிழந்த படை அதிகாரம்! இவ்வளவுக்கும் ஜனாதிபதியே முப்படைகளின் தளபதியுமாவார். ஆனால், ஜனாதிபதி மாளிகையை நோக்கி, மக்கள் படையாகத் திரண்டு வரும்போது அவரால் அதைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. … Read more

இலங்கை: நாளைய தேதியிட்டு ராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்ட கோத்தபய ராஜபக்சே?!

இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலையில் சிக்கித் தவித்துவருகிறது. அத்தியாவசியப் பொருள்களுக்குக்கூட இலங்கையில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இலங்கை, கொழும்பில் எதிர்க்கட்சிகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் எனப் பலர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகக் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை இந்த நிலையில், … Read more

அதிமுக-வில் அரங்கேறிய முக்கோண காட்சிகள்… அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன?

அதிமுக-வின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று (ஜூலை 11) தொடங்கியதும் அதிமுகவில் இதுவரை இருந்த இரட்டைத் தலைமை ரத்து செய்யப்பட்டது, இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்களுக்கு அதிமுக செயற்குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தத் தீர்மானங்கள் பொதுக்குழுவிலும் நிறைவேற்றப்பட்டன. அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியதும், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனை பொதுக்குழுவைத் தலைமை தாங்கி நடத்தித் தருமாறு எடப்பாடி பழனிசாமி முன் மொழிந்தார். அதை கே.பி. … Read more

“சாதாரண வேலைகளும் சரித்திரத்தில் இடம்பெறும்" – வனத்துக்கு ஊழியர் பெயரை சூட்டிய ஒடிசா வனத்துறை!

வழக்கமாக அரசு நிலங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்களையோ, புகழ் பெற்றவர்களின் பெயர்களைளோ வைப்பதுதான் வழக்கம். ஆனால், ஒடிசா மாநிலத்தில் சின்னஞ்சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண்மணியின் பெயரை வைத்துள்ளது ஒடிசா வனத்துறை. அந்த வனப்பகுதிக்கு வைத்துள்ள பெயர் சரோஜினி வனம் என்பதாகும். சுதந்திர போராட்ட வீரர் சரோஜினி நாயுடுவின் மேல் அதிக மரியாதை கொண்டதன் காரணமாக அந்த வனப்பகுதிக்கு சரோஜினி வனப்பகுதி என்று பெயரிட்டுள்ளதாக நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால், அது உண்மையல்ல. ஒடிசா மாநிலத்தின் எல்லையை … Read more

“மக்கள் தொகை அதிகமாக உள்ள சீனா எப்படி சிறப்பாக செயல்படுகிறது?" – தேஜஸ்வி யாதவ் கேள்வி

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் மக்கள்தொகை கட்டுப்பாடு தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது,”மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டம் வெற்றிகரமாகச் செல்ல வேண்டும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதே நேரம் மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு நிலை ஏற்பட அனுமதிக்கக் கூடாது. கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் தொகை நிலைப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. யோகி ஆதித்யநாத் நம்மிடம் திறமையான மனிதவளம் இருப்பது ஒரு சாதனைதான். … Read more

பொறியியல் முதல் செமஸ்டரில் 62 சதவிகிதம் தோல்வி – காரணங்கள் என்னென்ன?!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்களின் தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளன. பொறியியல் மாணவர்களில் 38 சதவிகிதம் பேர் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதி 62 சதவிகித மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்திலோ, சில பாடங்களிலோ தோல்வியடைந்துள்ளனர். பொறியியல் கல்லூரி பொறியியல் மாணவர்களில் இத்தனை சதவிகிதம் பேர் தேர்வில் தோல்வியடைந்திருப்பது கல்வியாளர்கள் மத்தியிலும், பெற்றோர் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றிலும், அவை தொடர்புடைய அறிவியல் … Read more

“மக்களைத் தேடி மருத்துவம்; நாடு முழுக்க செயல்படுத்த மத்திய அமைச்சர்‌ விருப்பம்” – மா.சுப்பிரமணியன்

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் உலக மக்கள்தொகை கட்டுப்பாடு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது‌. இதைத்தொடர்ந்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் அடிப்படையில் ரூ.4.8 கோடி செலவில் பணி முடிக்கப்பட்ட 18 துணை சுகாதார நிலையங்கள், மருத்துவமனை கட்டடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்து பேசினர். மக்கள் தொகை தின விழா நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் … Read more

சந்திரமுகி 2 : ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி யார்?

ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபமாக வெளியான படம், ‘காஞ்சனா 3’. 2019-ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் அதிகம் வசூலித்த படங்களில் ஒன்று. அதன் பிறகு, அவர் அக்‌ஷய் குமாரை வைத்து இந்தியில் இயக்கிய ‘லக்‌ஷ்மி’ வெளியானது. அது ‘காஞ்சனா’ படத்தின் ரீமேக். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆனால், தனது கைவசம் நான்கு படங்களை வைத்திருக்கிறார். அதில் ஒன்று ‘ருத்ரன்’. தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் … Read more