இணைந்த கைகள்: ஆபாவாணனின் ஆக்ஷன் அட்வென்ச்சர் சினிமா – அதிலும் அந்த `மாஸ்' இன்டர்வெல் பிளாக்!

80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘இணைந்த கைகள்’. இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம். டென்ட் கொட்டாய் டைரீஸ் – 80s, 90s Cinemas For 2K Kids தற்போது பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் தமிழ்ப் படங்களின் முன்னோடி 1948-ல் வெளியான ‘சந்திரலேகா’. அதன் பிறகு வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன், சிவந்த மண் என்று பல … Read more

பாப்பாத்தி அம்மன் கோயில்: மரமே கோயிலாக விரிந்திருக்கும் மர்மம்; காரிய சித்தி கண்டறிய அதிசயச் சுனை!

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டிப்பனூர் என்னும் கிராமத்தில் இயற்கை அழகு நிறைந்த ஒரு மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது பாப்பாத்தி அம்மன் திருக்கோயில். கோயில் என்றால் இங்கு அழகிய கட்டுமானம், கோபுரம் என்று எதுவும் கிடையாது. ஒரு மரமே விரிந்து பரந்து கோயிலாக மாறி இருக்கிறது. இங்குக் கோயிலைக் கட்ட முயன்றாலும் அது முடிவதில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கோயில், மண்டபம், கோபுரங்கள் ஆகியன எழுப்ப அந்த அம்மன் விரும்பவில்லை என்றும் கூறுகின்றனர். பாப்பாத்தி அம்மன் கோயில் வற்றாத … Read more

குருவே சரணம்; கைமேல் பலன் கொடுக்கும் குருபூர்ணிமா வழிபாடு கடைப்பிடிப்பது எப்படி?

ஆனி மாதப் பௌர்ணமி குருபூர்ணிமாவாக வழிபடப்படுகிறது. இந்த நாள் குருவழிபாட்டுக்கு ஏற்ற நாள். குருவருளே திருவருள் என்பது ஆன்றோர் வாக்கு. இறைவழிபாடு எந்த அளவுக்கு முக்கியமோ அதே போன்று குருவழிபாடும் முக்கியம். குருவே நம் துயர் நீக்குபவர். நம் குற்றங்களை அறிந்து மன்னித்து ஏற்று இறையருள் நோக்கி நடத்துபவர். தகுதியில்லாத நம்மைத் தகுதிப் படுத்துபவர். குழந்தையைத் தகப்பன் எப்படிக் கைபற்றி அழைத்துச் செல்வானோ அதேபோன்று கனிவோடு வழிநடத்துகிறவர். நல்லாசிரியனாக உடன் இருந்து பாடம் நடத்துபவர். அப்படிப் பட்ட … Read more

ஆம்னி பேருந்து கடத்தப்பட்ட விவகாரம்: ஜாமீனில் வெளியே வந்தார் திருச்சி சிவா மகன் சூர்யா சிவா!

தி.மு.க., எம்.பியும், கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. ‘தி.மு.க.,வில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை’ என சமீபத்தில் பா.ஜ.க.,வில் இணைந்த இவருக்கு ‘பா.ஜ.க., ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர்’ பதவி கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் 11-ம் தேதி விக்கிரவாண்டி அருகே சென்று கொண்டிருந்த சூர்யா சிவாவினுடைய கார் மீது, ஆம்னி பேருந்து ஒன்று மோதி சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காருக்கும் ஆகும் செலவைக் கொடுத்துவிடுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் கேட்டுக்கொள்ள, சூர்யா சிவா … Read more

“ராஜபக்சேவின் நிலை தான் எடப்பாடி பழனிசாமிக்கும்…” – டி.டி.வி தினகரன் காட்டம்

திருச்சி தெற்கு மாவட்ட திருவெறும்பூர் ஒன்றிய அ.ம.மு.க., செயலாளராக இருப்பவர் ஆனந்தராஜ். இவருடைய சகோதரர் சதீஷ்குமாரின் மனைவி திவ்யா கடந்த வாரம் காலமானார். திவ்யாவின் இறப்பிற்கு துக்கம் விசாரிப்பதற்காக, திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள கூத்தைப்பார் கிராமத்திற்கு வந்த அ.ம.மு.க., பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், திவ்யாவின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்திந்துப் பேசியவர், “வினை விதைத்தவன் வினை அறுக்க வேண்டும் என்பதுதான் நீதி. அதிலும் குறிப்பாக அரசியலில் ஜனநாயக நாட்டில் ‘தமிழ்நாட்டின் ராஜபக்சே’ … Read more

`சிங்கம்' சூர்யா பாணியில் மீசை வைத்திருந்த காவலர்; கத்தரிக்க உத்தரவிட்ட நீதிபதி – என்ன நடந்தது?!

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள அம்பலமூலா காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார் ராஜேஷ் கண்ணா. இவர் பணியாற்றும் காவல்நிலைய வழக்குகள் விசாரணைத் தொடர்பாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு இன்று வந்திருக்கிறார். மாவட்ட நீதிபதி முருகனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சல்யூட் அடித்திருக்கிறார். ஊட்டி நீதிமன்றம் அப்போது, ராஜேஷ் கண்ணாவின் பெரிய மீசையைப் பார்த்து ஆத்திரமடைந்த நீதிபதி முருகன், மீசையை உடனடியாக கத்திரித்துவிட்டு வந்து தன்னிடம் காண்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். இதைக் கேட்டு பயந்த காவலர் … Read more

13.07.22 புதன்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | July – 13 | இன்றைய ராசிபலன் | Astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

பாகிஸ்தான்: பொதுவெளியில் சிறுவனைக் கன்னத்தில் அறைந்த பெண் பத்திரிகையாளர்! – வைரலான வீடியோ

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், கோபத்தில் சிறுவனை அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அதே சமயம் சிறுவனைத் தாக்கிய பெண் பத்திரிகையாளருக்கு எதிராகப் பலர் ட்விட்டரில் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, பக்ரீத் தினத்தைப் பற்றி பத்திரிகையாளர் மைரா ஹாஷ்மி என்பவர் சிறப்புச் செய்தித் தொகுப்புக்காக வீடியோ பதிவுசெய்துகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சிறுவன் ஒருவன் அவருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீடியோவின் குறுக்கே வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த … Read more

தினமும் சேலை, இரவு நேர பார்ட்டி.. ஒப்பந்தம் போட்டுத் திருமணம் செய்து கொண்ட ஜோடி: வைரல் வீடியோ!

திருமணங்கள் நடைபெறும் விதம் சமீப காலங்களில் மிகப்பெரிய மாற்றங்களை அடைந்துள்ளது. கூடவே, திருமணம் செய்து கொள்பவர்கள் தங்கள் துணையின் மீது வைக்கும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. திருமணத்தின் ஆகப்பெரிய உறுதிமொழியே ‘ஒருவருக்கு ஒருவர் துணையாக, வாழ்நாள் முழுதும் இன்ப துன்பங்களில் ஒன்றாகக் கடப்போம்’ என்பதே. ஆனால் இங்கு ஒரு திருமண ஜோடி போட்டுள்ள ஒப்பந்தம் பலரையும் வியக்க வைத்துள்ளது. ஒப்பந்தம் விஜய் மற்றும் சிம்ரன் நடித்த ‘பிரியமானவளே’ திரைப்படத்தில் அக்ரிமென்ட் கல்யாணத்தைப் பார்த்திருப்போம். அதேபோல் அசாமை சேர்ந்த சாந்தி … Read more

`மோடி தலைமையின் கீழ் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்': நிதி ஆயோக்கின் புதிய சி.இ.ஓ பரமேஸ்வரன்!

மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி மத்திய திட்டக்குழு உருவானது. 2014 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி, `மத்திய திட்டக் குழுவை கலைத்துவிட்டு, மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய குழு அமைக்கப்படும்’ என்று அறிவித்தார். அதன்படி திட்டக் குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற அமைப்பை 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி மத்திய … Read more