“எந்தவோர் ஆளுங்கட்சி அமைச்சரும், எம்.எல்.ஏ-வும் சாலையில் நடமாட முடியாது!" – மன்னார்குடி ஜீயர்

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த 26-ம் தேதி இரவு நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. காயம்பட்ட 17 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள அரசு ஒரு நபர் குழு அமைத்து உத்தரவிட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டப் பலரும் களிமேடு கிராமத்துக்குச் சென்று பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். தேர் விபத்து நடந்த … Read more

மதுரைத் தெருக்களின் வழியே 14: இசையால் மக்களின் மனதை வென்ற நாயகர்களும், இந்திப் பாடல்களின் வருகையும்!

`நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் சிறகை’ என்ற திரைப்படப் பாடல் எழுபதுகளின் இறுதியில் எங்கும் ஒலித்துக்கொண்டிருந்த காலகட்டம், இன்றும் மனதில் பசுமையாக இருக்கிறது. இசை என்றால் சினிமாப் பாடல்கள்தான் என்ற பிரமை சராசரித் தமிழர் மனங்களில் இன்றளவும் ஆழமாகப் பதிந்துள்ளது. வெள்ளித்திரையில் ஒளிர்கின்ற திரைப்படத்தில் செயற்கையான பூக்கள் ஜொலிக்கிற அரங்கினில் சுற்றி வந்து காதலனும் காதலியும் உணர்ச்சிபூர்வமாகப் பாடிய பாடல்கள், பார்வையாளர்களுக்குக் கிளுகிளுப்பை ஏற்படுத்தின. ‘அச்சம் என்பது மடமையடா’ என ஒலித்த திரையிசைப் பாடலின் வரிகளுக்கு … Read more

“பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா மாறி வருகிறது!" – ஜே.பி.நட்டா

தெற்கு  டெல்லியில் நேற்று நடைபெற்ற மாவட்ட பா.ஜ.க அலுவலக திறப்பு விழாவில் கட்சித் தொண்டர்களிடம் பேசிய பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா மாறி வருகிறது. மோடி தலைமையிலான அரசு கொரோனா காலத்தில் இந்தியாவை சிறப்பாக கையாண்டது. உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்களை மட்டும் மோடி அரசு காப்பாற்றவில்லை, மற்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களையும் காப்பாற்றியது. மோடி அரசாங்கம் எப்போதும் அனைத்து பிரச்னைகளையும் திறமையாக தீர்க்க முயற்சி செய்து வருகிறது.  ஜேபி நட்டா … Read more

சிக்கன் ஷவர்மா தயாரிக்க புதிய விதிமுறை; மாணவி உயிரிழப்பை தொடர்ந்து கேரள சுகாதாரத்துறை நடவடிக்கை!

ஊட்டச்சத்துகளும், நோய் எதிர்ப்பு ஆற்றலும் மிகுந்த பாரம்பர்ய உணவுகளை விட, மேற்கத்திய ஃபாஸ்ட் ஃபுட் வகைகள் மீதான ஈர்ப்பு இன்றைய தலைமுறைக்கு சற்று அதிகமாகவே உள்ளது. குறிப்பாக, கோழி இறைச்சியில் தயாரிக்கப்படும் ஷவர்மாவை காலை, மாலை உணவாக இளைய தலைமுறையினர் பலர் சாப்பிடுகிறார்கள். கோழிக்கறியை தனியாக எடுத்து, அதை மெக்கனைஸ்டு மெஷினில் வேகவைத்து ஷவர்மா உணவு தயாரிக்கப்படுகிறது. கேரளத்தில், சமீபத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட கண்ணூர் கரிவெள்ளூரைச் சேர்ந்த 16 வயது மாணவி தேவநந்தா உயிரிழந்தது பெரும் … Read more

“மத விழாக்கள் நாட்டில் வகுப்புவாத அரசியலுக்கான ஆயுதங்களாக மாறிவிட்டன..!" – பிருந்தா காரத்

ரம்ஜான் பண்டிகை நேற்று இந்தியாவில் மிகவும் விமரிசையாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் ரம்ஜான் கொண்டாட்டத்தின்போது, வகுப்புவாத வன்முறை வெடித்தது. இந்த கலவரம் தொடர்பாக இதுவரை 52 பேரை போலீஸார் கைது செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த இரு மாதங்களாக அரங்கேறிவரும் வகுப்புவாத வன்முறைகள் குறித்து பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-ஐ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்(மார்க்சிஸ்ட்) `பொலிட்பீரோ’ உறுப்பினர் பிருந்தா காரத் விமர்சித்திருக்கிறார். இந்து-முஸ்லிம் கலவரம்- ராஜஸ்தான் இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் … Read more

59-ல் 29 பேர் அண்ணாமலை ஆதரவாளர்களா… அதிருப்தியில் சீனியர்கள்! – என்ன நடக்கிறது தமிழக பாஜக-வில்?

தமிழக பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருநந்தே அதிரடிகளுக்குப் பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது கட்சி. புதிதாக 59 மாவட்டத் தலைவர் நியமனம் தொடர்பாகவும் கட்சிக்குள் முணுமுணுப்புச் சத்தம் கேட்கிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மாவட்டத் தலைவர் ஒருவர், “அண்ணாமலை தலைவரானதில் இருந்து கட்சியில் சீனியர்கள் ஒருபக்கமாக ஒன்றுதிரண்டுவிட்டார்கள். எனினும், தலைவராகத் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, கட்சிக்குள் அதிரடிகளைச் செய்துகொண்டிருக்கிறார் அண்ணாமலை. சமீபத்தில் இரண்டு தவணையாக 16 மாவட்ட நிர்வாகத்தைக் கலைத்தார் அண்ணாமலை. அடுத்ததாகத் தற்போது கட்சி அமைப்பு … Read more

Suriya 41: இயக்குநர் பாலாவுடன் வாக்குவாதம் – படப்பிடிப்பிலிருந்து வெளியேறினாரா சூர்யா? உண்மை என்ன?

இன்று காலையில் இருந்து கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக் இதுதான். ‘சூர்யா – 41’ படத்தின் படப்பிடிப்பில் இயக்குநர் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்ததாகவும், இதனால் படப்பிடிப்பை விட்டு சூர்யா பாதியில் வெளியேறியதாகவும் தகவல்கள் கிளம்பின. ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களை அடுத்து பெயரிடப்படாத ‘சூர்யா-41’ படத்தை பாலா இயக்கி வருகிறார். சூர்யாவுடன் கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜூ உட்பட பலர் நடித்து வருகிறார்கள். கன்னியாகுமரியில் படப்பூஜையுடன் துவங்கப்பட்ட இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு தொடர்ந்து கன்னியாகுமரி, … Read more

மாத்தி யோசிங்க! – எலான் மஸ்க் கற்று தரும் வாழ்க்கை பாடம்

நாம் எலான் மஸ்கின் வாழ்வில் இருந்து கற்று கொள்ள வேண்டிய முக்கியமான 10 விஷயங்கள் பின்வருமாறு.. 1. கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை . அதிர்ஷ்டமும் கடவுளும் துணை செய்கிறார்களோ இல்லையோ வள்ளுவர் வாக்கின்படி நம் கடின உழைப்பும் , முயற்சியும் நம் கனவுகளை மெய்ப்பட வைக்கும் 2. வாழ்க்கையில் கனவு காணுதலும் அந்த கனவை மெய்ப்பிக்கும் துடிப்பும் விடா முயற்சியும் ரொம்பவே முக்கியம். முயன்றால் மெய்யாக்கப்பட முடியாத கனவுகளே இல்லை. 3. உங்கள் … Read more

சாத்தூர் அருகே உராய்வு காரணமாக பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – தொழிலாளி பலி!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பெரியகருப்பன் (57) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் சுமார் 15 அறைகள் இருக்கின்றன. இந்த நிலையில், வழக்கம்போல இன்று காலை பட்டாசு ஆலையைத் திறந்து இன்றைய பணிக்குத் தேவையான மருந்துகளை கலக்கும் பணியில் சுந்தரகுடும்பன்பட்டி பகுதியைச் சேர்ந்த சோலைவிக்னேஷ் (26) என்பவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வு காரணமாக அங்கு வெடி விபத்து ஏற்பட்டது. அதில் … Read more

“மக்களின் அன்பைப் பெற்று முன்னேறிவிட்டு… '' -சுஹாசினிக்கு கேள்வி எழுப்பிய இயக்குனர் அமீர்!

இந்தி மட்டும் தான் இந்தியாவின் மொழியா என தென்னிந்திய நடிகர்களுக்கும் பாலிவுட்டில் ஹிந்தியை ஆதரிப்பவர்களுக்குமான விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதுகுறித்து நடிகை சுஹாசினி பேசியது சர்ச்சையானது. அவர் இந்தி மொழி நல்ல மொழி என்றும் இந்தி மக்கள் நல்லவர்களை என்றும் பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் அமீர், ” அப்போ தமிழில் பேசுபவர்கள் எல்லாம் கெட்டவர்களா என சுஹாசினியிடம் கேட்கணும். தமிழில் பேசுபவர்கள், கன்னடத்தில் பேசுபவர்கள் எல்லாம் கெட்டவர்களா? கொஞ்ச நாட்களுக்கு முன்பு … Read more